1. எரித எரிச்சல். 2 பாபா வெர்சஸ் பாபா குழப்பம்
1.இந்த எரிதம் பற்றி படித்தேன்.
===================================
2 விஷயங்கள்.
1. இந்த மின்ஞ்சல் முகவரி சேகரிப்பவர்/சேகரிப்போர் தமிழார்வத்தினால் செய்வாராயின் அதை எதற்கு முகமூடியாய் செய்ய வேண்டும்? ' நேசமுடன்' வெஙக்டேஷ் செய்தது போல வெளிப்படையாக செய்யலாமே?
" ஐயா, என் பெயர் மின்னஞ்சல்மினுக்கனுங்க". நான் இந்த இதழையோ, அல்லது இந்த தமிழ் விஷ்யத்துக்காகவோ கேக்குறனுங்க. விருப்பப்பட்டவங்க இந்த பட்டியலில் சேருங்க என்று சொல்லலாமே? ஏன் செய்யவில்லை. இந்த முகமூடி நமது அஞ்சல் முகவ்ரியை வாங்கிக்கொண்டு நாளை என்ன செய்யும் என்று யாருக்குத் தெரியும். இந்த நம்பகத்தன்மை குறைவாக இருக்கும் செயல்பாடுகளினால் யாருக்கும் ஆர்வம் குறையவே செய்யும். இதைக் கூட அந்த முகமூடியரிடம் நான் கேட்கமுடியாது. ஒரு நட்புடன் அவர் அனைவரின் மின்னஞசல்களையும் கேட்பதால், அதே நட்புடன் இப்படிக் அவருக்கு வேண்டுகோள் வைக்கலாம். "என்னங்க நாளைக்கு எதேனும் பிரச்சினையானவர்களிடம் என் மின்னஞ்சல் முகவரியை அனுப்பிட மாட்டீங்களே? " என்று.
2. நண்பர் முகுந்த் சொல்வது போல் நமது மின் முகவரிகளைக் கொண்டு அவர்கள் பெரிதாய் செய்துவிடப் போவதில்லை என்பது ஒரு புறம் உண்மையானாலும், மறுபுறம் , ஒவ்வொரு நாளும் வருகிற எரிதங்களைப் பார்த்து எரிச்சல் பட்டு அழித்துக் கொண்டிருக்க யாருக்கும் பிடிக்காது என்பதே உண்மை. மேலும் 6 எம்பி யாகூ மின் தபால்பெட்டியில் தினமும் பல மற்ற முக்க்கிய மின்னஞ்சல்களை திடீரென ஒரு நாள் இழக்கவும் வாய்ப்பிருக்கிறது. இதற்கு நாமே ஏன் வாஇ செய்துகொள்ள்வேண்டும். ஹாட்மெயில் உபயோகிப்பவர்களின் நிலைமை அனைவருக்கும் தெரிந்ததே. மதி போல ஒரு 100 வலைப்பதிவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்பவர்கள் எந்த தமிழக் கடிதம் எரிதம் என்று தெரியாமல் நல்ல கடிதங்களுடன் குழப்பிக் கொள்ளவும் வாய்ய்பு ஏற்படலாம்.
இலக்கிய ஆர்வமுடைய ஒருவர் கேட்டால் சேர விருப்பமுடையவர்கள் கொடுக்கப் போகிறார்கள். அல்லது "ஸ்பாம்மிங்" என்கிற எரிதம் எறியும் வியாபாராமாய் முயன்றால் எவ்வறெல்லாம் தடுக்க முடியுமோ அவ்வாறெல்லாம் தடுப்பார்கள் என்பதே நடைமுறை. நிற்க.
2.பாபா வெர்சஸ் பாபா குழப்பம்.
================
சமீபத்தில் ஒரு குழப்பம் தீர்ந்தது. இந்த குழப்பத்தினால் உண்டான உபகுழப்பங்களும் தீர்ந்தன.
அந்த பெரிய குழப்பமானது இதுதான். வலைப்பதிவர் பாலாஜி-பாரி என்பவரும் பாஸ்டன் பாலாஜி என்பவரும் வேறு வேறானவர்கள். வலைப்பூவில் சொன்ன புண்ணியவான் நல்லா இருக்கட்டும் சாமீ.
எப்படியோ இவர்கள் இருவரும் ஒருவரே என்று மூளைக்குள் போய்விட்டது. அதிலிருந்து இன்றுவறை. எத்தனை குழப்பம். என்னடா பாஸ்டன் பாலாஜி பாஸ்டனுக்கும் பெங்களூருக்கும் மாதம் 2,3 முறை பறக்கிறவர் போல என்று ஒரு உபகுழப்பம். அதுதான் பாஸ்டனாரின் இன்றையப் பதிவுக்கு மறு மொழி எழுதிவிட்டோமே. அத்ற்குள் உறுமி மேளத்தில் இன்னொரு பதிவு எழுதியுள்ளாரே? இதை அப்பறம் படிக்கலாம்.
என்ன மனுஷன்டா இவர்? நம்மை பாஸ்டன் வர்ச் சொல்லிட்டு இவர் பாட்டுக்கு திடீர்னு பெங்களூர் போயிடுவாரோ என்று இன்னொரு பயம். கஞ்சி குடித்துக் களியாட்டம் போட்ட பாமரன், பாஸ்டனாரா இல்லை பெங்களூர் வாசியா என்பது இன்னொன்னு. வெள்ளிக்கிழமை மாலை 4 மணி கிழக்கு கடற்கரை நேரப்படி கஞ்சி குடிப்பவர் பாஸ்டனார்தான் என்று தெளிய வேண்டியுள்லது. போதாகுறைக்கு இவரும் பாபா அவரும் பாபா.
இப்போ இன்னொரு சந்தேகம் , அப்படீன்னா தங்கமணி யேல் பல்கலையில் இல்லையா? ஐய்யோ சாமீ ஆள விடுங்க. :)))