அங்கீகாரமும் தகுதியும்...
அங்கீகாரமும் தகுதியும்
இ.பா. இந்தக் கட்டுரையால் என்ன சொல்ல வருகிறார் என்று யாருக்காவது புரிந்தால் தயவு செய்து விளக்குங்கள்.
1. செம்மொழி என்றால் அது இறந்த மொழியாய் இருக்கவேண்டும் என்று பரிந்துரைக்கிறாரா?
இப்படி இல்லாத ஒரு தகுதியைஇருக்கவேண்டும் என்று மனித வளத்துறைக்கு இவரே பரிந்துரைதாலும் ஆச்சரியமில்லை.
2. அங்கீகாரம் என்றால் என்ன எனபது அவருக்கு புரியவில்லையா?
3, செம்மொழி அங்கீகாரத்தினால் என்ன நட்டம் வந்துவிடும் என்று சொல்லமுடியுமா அவரால்?
அங்கீகாரம் என்பது என்ன? ஒரு எழுத்தாளர் அவார்டு வாங்குவது கூட அங்கீகாரம் தானே. பரிசுத்தொகை வாங்குவது கூட அங்கீகாரம் தானே. இது போன்ற அங்கீகாரங்கள் தீமைகளைத் தராத போது போது, எப்படி தமிழ் செம்மொழி என்ற அரசின் அங்கீகாரம் மட்டும் நட்டத்தைத்தரும்.
கேட்பவன் கியானையன் என்றால் கேழ்வரகில் கூட நெய் வடியத்தான் செய்யுமோ.
உதாரணமாய், ஒரு மாலய் மொழியையோ, அல்லது ஸ்பானிய மொழியையோ அதன் அல்லது அது போன்ற பன்மொழி நாடிடில் ஒரு 2000 வருட காலம் வாழ் மொழியை அவ்வரசு செம்மொழி 'அந்தஸ்து' தருவதாய் அறிவித்தால் கூட அதை வரவேற்போம். ஆனால் தமிழை அங்கீகரித்தால்தான் நிதானமாய் யோசிப்போம். இதுகூட தமிழ் மீது உள்ள காதலால் அல்லது உரிமையால்தான் போல.
4. உணர்வுவசப்படவேண்டாம், நிதானமாக யோசிக்க வேண்டும் என்று சொல்கிறாரா?
உணர்ச்சிவசப்படாமல் ஆராயவேண்டும் என்று சொல்வதற்கும் ,ஒரு அநாகரிகம் தேவை. தமிழை தாயென்று பாடியவனுக்கு அறிவில்லை என்று சொல்கிறாரா? மொழியும்பண்பாடும் எப்படி இணைந்துள்ளது எனபதை விட மொழியும் அதன் வளர்ச்சிக்கான பணத்தேவையும் எப்படி இணைதுள்ளது எனபதை அறியவில்லையா இவர்.
இ.பா.வின் இந்தக் கட்டுரை உடைப்பில் போடக் கூட லாயக்கற்றது.