நண்பர் தங்கமணியின் பின்னூட்டதிற்காக..
நண்பர் தங்கமணியின் பின்னூட்டதிற்காக , ராயரில் எழுதிய என் இரண்டாம் கடிதம்.
அன்பு கார்த்திக்ராமஸ்,
>
> பொвய எழுத்தாளர் என்றாலும் அவருடைய கருத்துக்களை
மறுத்துச் சொல்கிற உங்களின் அந்தத் துணிச்சலை
> பாராட்டுகிறேன். என்றாலும் உங்கள் கருத்துக்களை நயம்பட
சொல்லலாமே... முகத்தில் அறைகிறாற் போன்ற
> வார்த்தைகள் பொвய எழுத்தாளருக்கு அல்ல, இன்று புதிதாய்
எழுதத் துவங்குகிற எழுத்தாளருக்கு கூட வேண்டாமே..
>
> இல்லை, அதிர்ச்சியாய் ஏதாவது சொல்லி, அதன் மூலம் மற்றவர்
கவனத்தை கவருகிற உத்தி என்றால் அது
> நீடித்து நிலைக்காது என்று நம்புகிறேன்.
>
> இந்தமாத காலச்சுவடில் இதுபற்றிய வேங்கடாசலபதியின்
கட்டுரையை வாசித்தீர்களா?
அன்புள்ள சுரேஷ்-க்கு,
நன்றி, தமிழுணர்வு கொஞ்சம் தலைக்கேறிவிட்டதுதான் காரணம்
என்று நினைக்கிறேன். இருந்தாலும் இதில் வருத்தப்பட எனக்கேதும்
இல்லை. இதையே இ.பா. அல்லாது வேறு யார் எழுதியிருந்தாலும்
இபபடித்தான் எழுதியிருப்பேன். எழுதுவேன்.
எதிர்வினை எழுதும்போது , கருத்தைச் சொன்னவர் பெரிய
எழுத்தாளரா அல்லது துணுக்கு எழுத்தாளரா, நோபெல் பரிசு வாங்கி
யவரா என்றெல்லாம் பார்த்து எழுதுவதில்லை. கருத்தை மட்டும்தான்
பார்க்கிறேன். அதனால் ஆகப்பெரிய நன்மை என்ன என்று
பார்த்துவிட்டு, சுத்தமாய் பலனற்ற கருத்து என்று பட்டால் 'போட்டுத்
தாக்கு' என்று எழுதுவதுதான்.
இனி விஷயம் பற்றி.
அரசின் எல்லா முடிவுகளிலும் அரசியல் இருக்கத்தான் செய்யும்.
ஏனெனில் அது அரசியல் புழங்கும் இடம். ஆனால் முடிவுகளுக்குபி
ன் ஏது நன்மை உள்ளதா என்று பார்த்தான் எடை போட
வேண்டும்.
தீராநதி போன்ற ஒரு பெரும் வாசகர் வட்டமுடைய இடத்தில்
இது போன்றதொரு கட்டுரை எழுதி எதை முன்னெடுத்துச் செல்ல வி
ழைகிறார் இ.பா. இந்தக்கட்டுரையால் என்ன சிந்தனையைத் தூண்டிவி
டப்போகிறார்?
இந்த அரசின் அங்கீகாரத்தால் ஒரு 10 ரூபாய் தமிழுக்காக கி
டைத்தால் கூட சந்தோஷமாய் ஏற்றுக் கொள்ளத்தானே
வேண்டும். அதில் இரண்டாம் கருத்து இருக்க முடியுமா? இதில்
எங்கே 'அரசியலும்','Wஇதானமான சிந்தனையும்' முன்னிலைப்படுத்த
வேண்டிய அவசியம் உல்ளது. அரசியலுக்கு அப்பற்பட்ட முடிவான
நன்மையை எழுதுவது அழகா? இல்லை அரசியல் பேசுவது அழகா?
உலக அரங்கில் தமிழைப்பற்றி பிற நாட்டவர் தெரிந்து கொல்ள
இது போன்ற முடிவுகள் டாகுமெண்ட் அளவிலாவது உதவும்.
இன்றைய அளவில், செம்மொழி என கிரேக்கத்தையும்,
லத்தீனையும் பல நாட்டு பலகலை கழகங்களில் படிக்கச் சொல்லி
மாணவர்களை ஊக்குவிக்கின்றனர். இதே வரிசையில் , பல வேறு
காரணங்களுக்காகவோ அல்லது மாற்றாகவோ தமிழ் பிற்காலத்தில்
சேரமுடியும். இதற்கு அரசு அளவில் முயற்சி நடந்தால் , அது
போன்ற செயற்பாடுகளுக்கும் இம்முடிவு உதவும். எக்ச்சேண்ஜ்
மாணவர்கள் எனப்படும் இணைமாற்று முறைப்படி, இந்தியாவந்து தமி
ழைக கற்றவும் அதற்கு நிதி உதவி அளிக்கவும் இது உதவலாம்.
இது நேரடியாக உதவில்லை என்றாலும் கூட மறைமுகமாக் பல வி
தங்களில் உதவும் சாத்தியகூறுகள் உள்ளன.
நேரடியாகவே கேட்கிறேன். பணம் சம்பாதிக்க மட்டும் தான் தமி
ழும் தமிழுணர்வுமா? பிற எதற்கும் தமிழுணர்வு தேவைஇல்லையா?
எழுத்தாளர் எவரைக்கேட்டாலும், தமிழில் இத்தனை நாவல்கள்,
தமிழ் கட்டுரைகள் இத்தனை, தமிழ் விருதுகள் இத்தனை
என்றுதானே மார்தட்டிக் கொள்கிறார்கள். ஆனால் இதில் உள்ள
நன்மையை இனம் காணமுடியவில்லையா? ஆச்சரியம் அல்லது
வெட்கக கேடு!! மேற்சொன்ன எதற்காவது இது மிகச் சிறிய காரணி
யாக இருந்தாலும் இது வரவேற்கப்படவேண்டியதே!
நான் எதிர் வினை எழுதுவதால் இ.பா.வின் புகழ் மங்கிவிடப்
போவதுமில்லை. அவர் பெரிய எழுத்தாளர் என்பது மாறிவிடப்
போவதுமில்லை. பெரிய எழுத்தாளர்களிடம் கொஞ்சம் அதிகமான
ஜீரண சக்தியை எதிர்பார்ப்பது முறை என்றே நினைக்கிறேன்.
என் கேள்விகளையே பாரதியோ , பாரதிதாசனோ
கேட்டிருந்தால்தான் ஒத்துகொள்வீர்களா?:) அப்படியே அவர்கள்
கேட்டிருந்தாலும் என்ன பதில் சொல்வீர்கள்/வார்கள்.
நகைச்ச்சுவை:
ராயர் காப்பி கிளப்பில் கவனத்தை ஈர்த்து நான் என்ன அய்யா
சாதிக்கப்போகிகிறேன். :-) இந்தக் குறும்புதானே வேண்டாம் -ங்கி
றது.
---
காலச்சுவடு கட்டுரையை வாசிப்பேன்,தகவலுக்கு நன்றி.
Karthikramas