அன்புள்ள குசும்பன்,
ஆமாம்.உங்கள் நீண்ட கமெண்டை படிக்கவில்லை.
ரொம்ப நாளா வலைப்பதிவு செய்ய ஒன்னும் இல்லையா அதுதான். அதுக்கு நன்றி.
சரி உங்க கான்டெஸ்ட்டை நான் புரிஞ்சுக்கிட்டேன். ஏன் ஆர் எஸ் எல் (ஜெயஸ்ரீயா , எனக்கு நீங்க யாருன்னே தெரியாது இதுல ஜெயஸ்ரீய தெரியும்மான்னு கேக்குறதெல்லாம் பொல்லாத குசும்பு) எழுதுன கான்டெக்ஸ்ட் புரியலயா உங்களுக்கு. எத்தனை பெண்களை ,கையில் ஒரு வருஷம் , வயித்துல மூணு மாசம்னு பாத்திருப்பீங்க. அவங்க கஷ்டத்துக்கு பகவானா காரணம். இப்படி திட்டமில்லாம் ப்ரொடக்ஷன் பண்ணும் ஆண்களை 'அரிப்புன்னு ' சொல்லாமல் வெறெப்படி சரியாக சொல்லமுடியும்? பெண்கள் பட்ற கஷடத்த யோசிச்சீங்கன்னா உங்களுக்கே புரியும். "இடைவெளி விடுங்க" "இடைவெளி விடுங்க" ந்னு தேர்தல் பிரச்சாரம் மாதிரி கூவுறது எதுக்கு? அவங்க இந்த இடத்தில தாம்பத்தியத்தைப் பத்தி பேசவே இல்லை. தம்பத்தியத்தை தாறூமாறா செய்ற ஆண்களைத்தான் சொல்கிறார் என்று நான் புரிந்து கொண்டேன். அதனால் எல்லா ஆண்களும் அப்படித்தான்னும் கிடையாது. அவரை இப்படி எழுதுனா நல்லா இருக்கும்னு நீங்கள் சொலவ்து அபத்தம். அவங்களுக்கு முழு சுதந்திரம் குடுங்கன்னுதான் நான் கேக்குறேன்.
அது கிடக்கட்டம் , ஆங்கிலத்தில் 'ஹார்னி'ன்னு ஒரு வார்த்தை இருக்கே அதுக்கு சமமா தமிழ்ல ஏதாவது வார்த்தை இருக்கா. பாரதியார் 'காமாக்நி'ன்னு உப்யாகபடுத்தியிருக்கார். சமீபத்தில் நேசமுடன் வெங்கடேஷின் இதழில் படித்தது. அது தவிர?