நான் திண்ணைக்கு எழுதிய இவ்வாரக் கடிதம். திண்ணை வெளியிடுமா என்பது சந்தேகம்தான்..
=======================================================
அன்புள்ள வாசகர்களுக்கு,
திண்ணையில் ஆசாரகீனன் என்பவர் தந்தை பெரியாரின் கட்டுரைகளை தட்டச்சி அனுப்பி வெளியிடுகிறார்.
அவரது முயற்சி கண்டு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். விடாது ஒரு தவம் போல் செய்து வருகிறார்.
இருந்தாலும் ஒரு சின்ன சிக்கல்(மிஸ்டர் ஆசார கீனன்(இன்னாடா பேரு இது ஆசாரகேனயைன்னு!!!), யார்ரா இந்த கார்த்தின்னு னினைச்சீங்கன்னா, திண்ணை ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வரக்கூடாதேன்னு, முன்குறிப்பா சில வரிகள்.
நான் பெரியாரை அவர்களை மிகவும் மதிப்பவன். சமத்துவத்தை மிகவும் பேணுபவன். ஆதிக்கத்தை, பிராமணீயமாயினும் அல்லது எந்த வடிவத்தில் இருந்தாலும் எதிர்ப்பதற்காக யோசித்து தூக்கம் வராமல் தவிப்பவன். பெரியார் மிகப்போற்றும் சமத்துவம் என் வாளின் மறுமுனையாம். எனவே என் வாள் (என்ன வாள் வாள்னு பிராமணபிள்ளை போல பேசறான்னு நினைக்கப்படாது) பெரியாரை அவமதிக்க துணியாது.
இதோ வந்டேன் மேட்டருக்கு:
பெரியாரின் எத்தனையோ சிந்தனைகளை நான் ஏற்றாலும், இந்த டுபாக்கூர் கத்தலாகிய , "பெய்யுன்னா மழை பெய்யுமா?"
"ஊரில் எல்லா பொன்னுகளுக்கும் கற்பில்லையா?","கற்புன்னா இன்னா?" இதெயெல்லாம் தான் கொஞ்சம் கேட்டா பல்பு ப்ளிக்கர் ஆவுது மைண்டுக்குள்ளே.
ஐயா சாமி ஒரே ஒரு கேள்விதானுங்க கேக்க போறேன். அது கூட நான் கேக்கலைங்க ஒரு புழு கேக்குது.
இந்த இடத்துல அந்த புழுவ நான் ரெப்ரெசண்ட் பண்றதால அந்த புழுவுக்கு கார்த்தி புழுன்னு பேரு வச்சிடாலாம்.
கார்த்திபுழு இன்னா கேக்குதுன்னா, உங்க பெரியார் பெரிசு, சிலைகளுக்கு (ராமாரா, புள்ளையாரா?? மறந்துடுச்சு மன்னிச்சிக்கீங்க).செருப்பு மாலை போட்டாரே, என்ன மாறி புழுவுங்க எல்லாம் சிலைங்கள கும்புடுறதுல்ல. ஒரு டப்பாவுல களிமண்ண போட்டு வச்சீங்கன்னா மூடி இருந்தா கூட தட்பவெட்பனிலை சரியா இருந்தா, என்ன மாதிரி புழு உண்டாயிடுங்க. இந்த மாறி புழுவ உண்டாக்கறவரதான் நாங்க கடவுள்ன்னு கும்பிறதுங்க. உங்களால டெஸ்டு பண்ண முடியல்லன்னா, ஒரு மாம்பழம் வாங்கி அழுக வச்சி பாருங்க, சீப்பான டெஸ்ட் கேசா முடியுமுங்க. அந்த கடவுளுக்கு எங்க செருப்பு மாலை போடுவாரு உங்க பெரியார் பெருசு ங்கறதுதான் இந்த கார்த்தி புழுவோட கேள்விங்க.
னைசா கேள்வி புரியல்லைன்னு ஆசாரகேனையன் எஸ்கேப் ஆயிடுவார், அதனால நொள்ள தமிழ்ல கேட்கிறேன்.
ஒரு மாம்பழத்தில் எப்படி புழு உண்டாகிறது? அதாவது உயிரற்ற பல பொருட்களின் கூட்டு சேர்க்கையில், ஒரு அசையும் தன்மையுடை உயிர் உருவாவது எப்படி. இந்த முறையின்கண் இந்த அவனியையும் அண்டங்களையும் படைத்த பொருள் எது? அந்த பொருளை
"கடவுள்" என்ற வார்த்தையிட்டு நான் அழைத்தால் , எங்கே போய் செருப்பு மாலை போடுவீர்கள்?
மிஸ்டர் கேனையன்(ஷார்ட்டா)
உண்மையிலேயே னீங்கள் பெரியாரியாய் இருந்தால் இந்த கேள்விக்கு பதில் அளித்துவிட்டு, உங்கள் தட்டச்சு தவப்பணியை
தொடருங்கள். உண்மையிலேயே நெஞ்சுல மஞ்சா சோறு இருந்தாக்கா அட்லீஸ்டு எங்கிட்டயாவது கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
எல்லா பெரியாரிகிட்டயும் கேட்டுபாருங்கள். (பெரியாரிடமே இந்த கேள்வி கேட்டாயிற்று, மிஸ்டர் கேனையன்! அதை பத்தி அவர் வெளில மூச்சு உட்டுக்கல?)
சும்மா மீனிங் தெரியாம, "கொழுநன்" ன்னா புருசன்ங்காரன், "எல்லா பொன்னுங்களுக்கும் கற்பில்லையான்னு" கேள்வியெல்லாம் கைவலிக்க தட்டச்சி, திண்ணை மாறி மாதிரி ஒரு இடத்துல சீன் போட்டாக்கா உங்களுக்கு எல்லாம், ஐன்ஸ்டீன்னு மனுசுல நெனப்பு.
இவ்ளோ கஷ்டப்பட்டு அடிச்சுருக்கேன் இத்தையும் உங்க பெரியார் கட்டுரை பட்டியல்ல ஒரு லிங்க் குடுங்களேன். முடியல்லன்னா உங்க கட்டுரைக்கு இத்தோட ஒரு முற்றுபுள்ளி வைங்கள்.
என்னுடைய கடிதத்துக்கு,திரு ஆசாரகீனனனிடமிருந்து என்னால் எதிர்பார்க்கப்படும். ட்ரேட்மார்க் திண்ணை புஸ்வாண பதிலகள் சில.
1. கார்த்தி என்பவரது கேள்வி என்னை மிகவும், வாய்விட்டு வலிக்குமளவுக்கு 10 நிமிடங்கள் வரை சிரிக்க வைத்தது.
வாய் வலிக்கு மருத்துவரிடம் போனால் செலவு இவர்தான் தரவேண்டும்.
2. இவர் எதை வேண்டுமானாலும் "கடவுள்" என்று சொல்லட்டுமே, யார் தடுத்தது, அதற்கு நான் யேன் பதில் சொல்ல வேண்டும். வேறொருவர் குப்பைதொட்டியையோ, குஷ்புவையோ கூட "கடவுள்" என்று சொல்லலாம். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்.இதற்கும் எனது கட்டுரைகளுக்கும் என்ன சம்பந்தம்.
3. ஆசாரகீனன் என்றால் என்ன என்று புரியவில்லை இவருக்கு, புழு எப்படி வந்தது என்று புரிந்ததாக சொல்வதை நம்பமுடியவில்லை.
4. இவருக்கு பெரியார் என்ன சொன்னார் என்றே விளங்கவில்லை. இந்த மாதிரி ஜந்துக்கள் பெரியாரை மதிப்பதை விட சும்மா இருக்கலாம்.
5. பிரச்சினையை திசைமாற்ற முயற்சிக்கிறார். இவரூக்கு பதிலளிப்பதற்க்கு எனக்கு நேரமில்லை.
பொறுமையும் இல்லை.
6.இவருக்காக நான் எழுதுவதை நிறுத்தப்போவதில்லை. (மீசை துடிக்கிது லேசா..)