அண்புள்ள பாரா,
பேட்டியின் ஒரு பகுதியை படிக்கும் முன்னரே சிறியது என்று நினைத்து எழுதிவிட்டேன். காரணம் நான் படித்த போது , பேட்டி ரத்த சிகப்பில் இருந்தது. 2 ம் பாகம் என்ற தலைப்பு அப்போது இல்லை. ஒரு அகால நேரத்தில் படித்தேன். :-)
எஸ் ராமகிருஷ்ணனைபற்றி நான் புரிந்து கொண்டவை இந்த பேட்டியில் இருந்து. (னீங்கள் சொன்ன புஸ்தக ஜோசியம் மாதிரி , பேட்டி ஜொசியம்.)
சிறு வயதில் மிகவும் இணைக்கப்பட்டுள்ள (க்ளோஸ் நிட்?) குடும்பத்த்ல் வளர்ந்ததால், இயற்கையாகவே மென்மையானவராய் இருந்துள்ளார். மிகவும் விட்டு கொடுக்கும் குணம் உள்ளவர் அல்லது மற்றங்களை ஏற்றுகொள்பவ்ர். ஆனால் தனது துறையில்தான் இருப்பது என்ற அடமும் உடையவர்.
இப்படி மாற்றங்களை ஏற்றுக் கொள்வதால், செளகரியங்களையும் அதைவிட மிகப் பெரும் இடையூறுகளையும் சந்தித்திருப்பார்
தன் வாசிப்பில் இருந்து கருத்துகளை பின் மூளையில் சேகரித்து கொள்பவர். அவர் தெரிந்து கொண்ட காரணங்களை தனது புனைவுகளில் சொல்ல முனைகிறார். இது மிகப் பெரும் வரிகளில் அவரது படைப்புகளில் நடக்கலாம். அல்லது இப்படியும் சொல்லலாம். இந்த காரணத்துக்கா இது விளைந்தது, அல்லது இந்த மாற்றம் நிகழ்ந்தது என்று சொல்ல கூடியதாய் உள்ளன இவரது சிந்தனை ஓட்டம். புனைவுகளின் பின்னணியில் அவசியம் ஒரு காரனத்தை காட்ட முயல்கிறார் என்றும் சொல்லலாம். அவர் சொன்னது போல் கனவுகளை மிகச் சரியான வாழ்வியல் அலது தினசரி வாழ்க்கை உதாரணங்களில் பொருத்துவதில்தான் இவரது வெற்றி அமைகிறது.
===================================
னான் சொன்னது அததனையும் டுபாக்குராய் இருந்தால் மன்னித்துவிடுங்கள்.. :-)