வருத்தங்களின் அழுத்தத்தால்
வார்த்தைகள் நசுங்கி
குறைந்து விட்ட வேளைகளில்
மீதமிருக்கும் மிச்ச வார்த்தைகளை வைத்துதான்
கவிதைகள் எழுத வேண்டியுள்ளது.
மனிதனால் செய்ய முடியாததை
வார்த்தைகள் செய்துவிடவா போகின்றன?
கவிகளுக்கு அப்படித்தான் போல...
வாழ்வை திரும்பிப் பார்க்கிறேன்
வார்த்தைகள் சிலவும்
வேர்வைகளின் நினைவும்
வருத்தங்களும் மிச்சமுள்ளன..
அழுத்தங்கள் இல்லா
இது போன்ற வேளைகளில் தான்
திரும்பிப் பார்க்ககூட முடிகிறது...