சுந்தரவடிவேலரின் கவிதை குறித்து...
சுந்தரவடிவேலரின் கவிதை குறித்து...
இக்கவிதையை பார்ப்பது எப்படி என்பது ஓவ்வொருவருக்கும் வேறுபடுகிறது என்பதுதான் பிரச்சினை. இதை எழுதியவர் கடவுள் மறுப்பு கருத்தாளர் என்பது எரிகிறதாய் காட்டப்படும் தீயில் எண்ணெய் ஊற்றுவதாம்.
இந்த கவிதை குறித்து என்னால் ஒரு குறிப்பை எழுதி அனைத்து திருமால் பக்தர்களின் ஏகோபித்த ஆதரவுடைய கைதட்டலை பெறமுடியும். அல்லது இதே கவிதைகுறித்து இன்னொரு முகமாய் ஒரு குறிப்பு எழுதி திருமால் இதனால் அவமானப்பட்டுவிட்டாரா என்று கேட்டு, திருமால் பக்தர்களின் வயிற்றெரிச்சலையும், கடவுள் மறுப்பாளர்களின் வாயார வாழ்த்தையும் பெற முடியும்.
என்னை பொறுத்தவரை இரண்டுமே வேண்டியதில்லை. இது ஒரு கவிதை , கவிதை மட்டுமே என்ற பார்வை இருபுறத்தாருக்கும் உதவுமென நினைக்கிறேன்...
இக்கவிதையில் அழகியல் உள்ளதா என்றால் உள்ளது என்றே சொல்வேன். அதே சமயம் இக்கவிதையில் பக்தியையோ அறிவையோ பார்க்கமுடியாது என்றும் சொல்வேன். ஏனெனில் நாரணந்தான் படைத்தான் என்பதையே கடவுள் மறுபாளர்கள் ஏற்பதில்லை என நம்புகிறேன். அப்படி ஏற்பவர்களின் ஏற்பும் ஏற்புக்குரியதல்ல, இவ்வாறு கவிதைஎழுதின்.
:-) :-)