<< May 2004 >>
Sun Mon Tue Wed Thu Fri Sat
 01
02 03 04 05 06 07 08
09 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31


If you want to be updated on this weblog Enter your email here:



rss feed



Monday, May 31, 2004
இன்னுமொரு சூரியநமஸ்காரம்.

 பத்ரியின் தமிழ் Vs செம்மொழி குறித்த பதிவு இது.
 இதற்கு மெய்யப்பனின் தொடர்பதிவு இது.

1. முதலில், தமிழ் பற்றி ஆழ் நிலை உண்மைகள் தமிழர்கள்/தமிழ் நாட்டில் உள்ளவர்க(தெலுங்கர்,கன்னடர்,பிற மாநிலத்தவர்)
   அனைவருக்கும் தெரிவிக்கப்படவேண்டும். இது வரலாறு சார்ந்து மிகவும் முக்கியமான செயல்பாடு.உதாரணமாய் தமிழின் பழம் இலக்கியங்களின் கால வரலாறு தமிழ்நாட்டில் ஒரு கல்லூரி மாணவனுக்குகூட சராசரியாய் தெரிந்திரிக்க வில்லை என்று எளிதில் சொல்லிவிடமுடியும். இது மொழிசார் தொழில்சார் கல்வி  நமக்கு அந்நியப்பட்டதின் விளைவு. அந்நியமாக்கப்பட்டது என்ற உண்மைகள் தெரியவரலாம், தமிழக அரசியலை கிளறிப்பார்த்தால்.

2. செம்மொழி ஆக அங்கீகரிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை திராவிடக் கட்சிகளின் பம்மாத்தாக இருந்தால் கூட இருந்தாலும்,
 தமிழுக்கு அதனால் பலன்கள் உண்டு (தமிழ் குறித்த ஆய்வுகள், மத்திய அரசில் தமிழின் அங்கீகார நிலை) என்பதினால்,
இந்த கோரிக்கை தமிழர்கள்/ மொழியியல் தெரிந்தவர்கள் வரவேற்க வேண்டிய ஒன்றே என நான் கருதுகிறேன்

3. இதனால் நடைமுறையில் என்ன லாபம் என்ற கேள்வி சரியான கேள்வியாய் இருக்கமுடியாது. ஏனெனில் எந்த ஒரு மொழியின் பயனும் நடைமுறைதளத்தில் இருப்பதைவிட ஒரு அறிவுசார் ,சிந்தனைசார் தளத்தில் தான் அதிகமாய் இருக்கமுடியும்.
அது சிந்தனை சார் தளத்தில் இருந்துதான் அதன் நடைமுறை பயன் தளத்துக்கு நகரும். தமிழ் வழி தொழிற்கல்விக்கு இம்மாதிரியான ஒரு சிந்தனைத்தளம் பின்னிருந்து இயக்குவது மிகவும் அவசியம்.

   இந்த சிந்தனைத் தளத்தில் தமிழ்  போதிய அளவு இல்லாததனால்தான், தமிழ் நாட்டில் ஆங்கிலக்கல்வி மோகிக்கப்படுவதன் பல காரணங்களில் ஒன்றாக சொல்லலாம். எனவே தமிழ்தொழிற்கல்வி வெற்றியடைய,அதற்கு ஒரு பின்இயங்கு சிந்தனைத்தளம் அவசியம். அது
மத்திய அரசால் அங்கீகரிக்கபட்டு இருப்பது, மொழி சார்பு உடைய மாநிலமாகிய அல்லது தமிழை எள்ளும் மனப்போக்குடைய மாநிலமாகிய
தமிழகத்துக்கு மிக அவசியம் என்றே நினைக்கிறேன்.

4.  தமிழின் கால வரலாறு,தொன்மைத்தனமை(பழம் எழுத்து வடிவம்) ஆகியவை வெகு ஜனதளத்துக்கு வரவேண்டியதும் அவசியம்.
இது தமிழர்களின் பெரும்பான்மையான எண்ணமாகிய மட்டப்படுத்தப்பட்ட உணர்வைக் களைய உதவும். அது போன்றஒரு உணர்வு இல்லை என்று மறுத்துவிட முடியாது. உதாரணமாய் கல்லுரிகளில் தமிழ் பட்டம் படித்த மாணவர்கள் கூட "தமிழ்ப் பட்டம் படித்து என்ன பெரிதாய் ஆகிவிட்டது" என்று சொல்வதைப் பார்க்க முடியும். இதை வேலை வாய்ப்புக்கு அப்பாற்ப்பட்டு மனோதத்துவ அளவில் பார்க்கிறேன். மொழி அதனளவில்(எந்த மொழியாகிலும்) அறிவியலுடன் கலக்க ஆயத்தமாய்தான் உள்ளது.அறிவியலும் மொழியின் குறையீடு உள்ள இடங்களில் சமரசம் செய்துகொள்ள ஆயத்தமாய்தான் உள்ளது. மொழியை அறிவியலிடம்கொண்டு செல்பவர்கள்தான் எண்ணிக்கையில் குறைவாய் உள்ளனர்,தமிழைப் பொறுத்தவரை. அப்படி குறைவாய் உள்ளவர்களின்
சட்டைப் பைகளும் அநேகம் நேரம் காலியாய் உள்ளது.

5. மட்டையடியாய் எதிர்க்கலாம் என்றால்,  சமஸ்கிருதம் படிப்பதனால் மட்டும் என்ன பெரிய நடைமுறை லாபம் வந்துவிடப்போகிறது?
இந்த கேள்வி மிகவும் முக்கியமாய் படுகிறது எனக்கு.

    ஏன், அதே கோணத்தில் இந்தியை எடுத்துக் கொள்ளுங்கள், வீதிக்கு வீதி ஒரு பிரச்சார சபா வைத்து, இந்தியை தமிழ்நாட்டில் பின்னாலிருந்து முட்டித்தள்ளவேண்டிய அவசியம் என்ன? மத்திய அரசுடன் தலையீடு என்பது ஒரு சப்பைக் கட்டு வாதம். ஏனெனில் பாராளுமன்றத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு பேசுதல்,எழுதுதல் என்பதற்கு சட்டத்தில் இடமுண்டு.

 சமஸ்கிருதத்துக்கு சப்பைக் கட்டு கட்டுபவர்கள் சீன, சப்பானிய மொழிகள் பெற்ற மிகப்பெரும் கணினித் துறைவளர்ச்சி எப்படி சாத்தியமானது என்ற என் கேள்விக்கு பதில் சொல்லத்தெரியாத கணினி முட்டாள்களாக அல்லது மொழியறிவு முட்டாள்களாக உள்ளனர். :-)  இந்த கருத்தை/கேள்வியை நான் திண்ணையிலும் கேட்டேன், சரியான பதில் கிடைக்கவில்லை. உங்கள் இந்தப் பதிவை,சமஸ்கிருத-தமிழ் பட்டிமன்றமாய் மாற்ற எனக்கு விருப்பமில்லை :-). சம்பந்தமிருப்பதால் மட்டும் சொன்னேன்.

  தமிழ் செம்மொழியாய் ஆக்கப்பட/அங்கீகரிக்கப் படவேண்டும் என்பது, மிகவும் காலம் தாழந்த, ஆனால் அவசியமான,திராவிட கட்சிகளின் சுயசிந்தனையற்ற, ஆனால் மிகவும் வரவேற்கப்படவேண்டியதொரு விசயம்.


Posted at 08:42 am by karthikramas

karthikramas
June 30, 2004   02:58 PM PDT
 
Cool down budyy ..
 

Leave a Comment:

Name


Homepage (optional)


Comments




Previous Entry Home Next Entry