<< May 2004 >>
Sun Mon Tue Wed Thu Fri Sat
 01
02 03 04 05 06 07 08
09 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31


If you want to be updated on this weblog Enter your email here:



rss feed



Wednesday, May 19, 2004
நண்பர் அருணின் கட்டுரை குறித்து.. (தொடர்ச்

இன்றும் மனித நேயம் மரத்துப் போன பிராமணர்கள் சிலரும் இருக்கலாம், அவர்களை எல்லாம் தனிப்பட்ட முறையில் கேள்வி எழுப்புவதை யாரும் தடுக்கப்போவதில்லை. ஏனென்றால், அவர்கள் எண்ணிக்கையில் சொற்பமாகத் தானிருப்பார்கள். எல்லா சமுதாயத்திலும் நல்லவர்கள் இருக்கிறார்கள், தமிழ் ஆர்வலர்கள் இருக்கிறார்கள், தமிழில் தொண்டு புரிந்தவர்கள் இருக்கிறார்கள். பிராமண சமுதாயத்திலும் கண்டிப்பாய் மேற்கூறியவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். பிராமணர்களை இழிவு செய்வதும், கண்மூடித்தனமாகக் கண்டிப்பதும் கைத்தட்டல்கள் பெறுவதற்கும், கவனத்தை ஈர்ப்பதற்குமே ஒழிய...உண்மையில் அந்தக் கண்மூடித்தனங்கள் பெரும்பான்மையான பிராமணர்களிடத்தில் பல காலங்களாக இல்லை, அது தான் உண்மை! அந்தத் தவறுகள் மறைவதற்கும், அழிவதற்கும், அடக்கப்பட்டதற்கும், பெரியாரெல்லாம் தோன்றுவதற்கு முன்னால், பல பிராமணர்களே காரணமாய் இருந்திருக்கிறார்கள் என்பதும் உண்மை.

திண்ணியத்தில் நடந்த கொடுமையோ அல்லது சுடச்சுட தற்போது வெளிவந்திருக்கும் தலித் மீதான தாக்குதல்களோ தற்கால பிராமண சமுதாயத்திலிருந்து சத்தியமாய் செய்யப்பட்டதில்லை என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. சாதிக்கு எதிராகக் கேள்வி எழுப்புபவர்களும், கண்டனக் கணைகளைத் தொடுப்பவர்களும், தங்களது இலக்குகளை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், அவர்களது இன்றைய இலக்காய்த் திகழ்ந்து வரும் பிராமணர்களுக்கு, வில் வைத்திருப்பவர்கள் சுட்டும் விஷயத்தில் நம்பிக்கையோ ஆர்வமோ இல்லை.

> தங்கள் இலக்குகளை மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொன்ன ஆசிரியர், தலித்திய தாக்குதல்களை களைய பிராமணர்களையும் அழைத்திருந்தால் இன்னும் நியாயமான் தொனி ஒலித்திருக்கும். ஏன் அவர்களுக்கு அந்த பொறுப்பு இல்லையா என்ன? பிராமணப் பெண்களுக்§இப்பொழுதுதான் காயத்ரி மந்திரம் கிடைத்துள்ளது. அந்த பொறுப்பு வர இன்னும் சில காலம் ஆகுமோ? பொறுத்திருந்து பார்ப்போம்.

 


Posted at 09:33 pm by karthikramas
Comments (11)  

நண்பர் அருணின் கட்டுரை குறித்து..

நண்பர் அருணின் கட்டுரை குறித்து..


எனது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய பெயரிலி ஒரு கேள்வி கேட்டிருந்தார், இன்றைய செல்வராஜின் பின்னூட்டப்குதியில்.
அது என் நேர்மைக் கேள்விக்குள்ளாக்கியது போல் லேசாய் தோன்றியதால், இந்த எதிர்வினையை எழுதுகிறேன்.

சென்ற வார வலைப்பூ ஆசிரியராகப் பணிபுரிந்த டுபுக்கு, சும்மா பேசும் போது கூட அரசியலை எல்லாம் தவிர்த்து வந்த ஒரு நகைச்சுவை விரும்பி. ஆனால், அவர் தனது குடும்பப் புகைப்படத்தை வெளியிட்ட போது, அதில் பூணூல் பளிச்சென்று தெரியுமாறு ஒரு புகைப்படத்தைப் போட்டார். அவரது எழுத்துக்களை உன்னிப்பாய் ஊன்றி கவனித்தால், அவர் எந்த உள்நோக்கத்தோடும் அதை செய்திருக்க மாட்டார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. ஆனால், அவர் தெரிந்தோ தெரியாமலோ செய்த அந்த விஷயத்திற்கு, நான் அப்போதே விளையாட்டாய் ஒரு பாராட்டை மறுமொழியாய் ஏற்றி வைத்தேன். இப்போது விஷயத்திற்கு வருகிறேன். கீழ்க்கண்ட கட்டுரையில் நான் எனக்குத் தெரிந்த சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.

> வலைப்பூவில் எனக்கு தெரிந்து டுபுக்குவின் பூணுலை குறித்து நான் படித்த பதிவு, அருணின் இந்தக் கட்டுரைதான்.
இதற்கும் இந்த கட்டுரைக்கும் என்ன சம்பந்தம்?
-
தமிழ் மீது மதிப்பு வைத்திருப்பவர்கள் என்றால், கண்டிப்பாய் பிராமண துவேஷிகளாக இருக்க வேண்டும், கடவுள்களையும் புராணங்களையும் கிண்டல் அடிக்க வேண்டும் என்று சிலருக்குத் தவறாய் போதிக்கப்பட்டு இருக்கிறது.

> இது வெறும் ஆதாரமற்ற குற்றச் சாட்டு. அருணே பிராமணத் தமிழறிஞர்களை குறிபிட்டுள்ளாரே?. அவர்கள் இந்த பட்டியலில் வரவில்லை என்றால், அவர்களுக்கு இந்த போதனை போதிக்கப்படவில்லை என்று அர்த்தமா? இல்லை போதிக்கப்ப்டு அது அவர்கள் மண்டையில் ஏறவில்லை என்று எடுத்துக் கொள்ளலாமா?
-
அதனால், அவர்கள் இன்னும் அந்த வட்டத்திலிருந்து வெளியே வரத்தயாரில்லை. இணைய உலகிலும், அந்த வெறுப்புகள் உமிழப்பட்டு வரத்தான் செய்கிறது.

>தமிழ் ஆர்வம் வேறு வட்டம். பிராமண மூடத்தன எதிர்ப்பு சத்தியமாய் வேறு வட்டம். இரண்டுக்கும் ஒரே மையம் என்று எப்படி சொல்லுகிறார்?
-
வேதங்களைக் கிண்டல் செய்வதும், இந்துக் கடவுள்களைக் கிண்டல் செய்வதிலும் ஒரு சிலருக்கு அலாதிப் பிரியம் இருக்கத் தான் செய்கிறது. இதில் என்ன கூத்தென்றால், அதில் பலர் நன்கு படித்தறிந்தவர்கள் என்பது தான். ஒவ்வொரு விஷயமாக வருவோம்.

> இங்கு நண்பர் அருண் "வேதங்களை கிண்டல் செய்வதும்" என்று பூசிய மொழுகியபடி எழுதியுள்ளார். நான் கூட வேதங்களை கிண்டல் செய்ததுண்டு. எதிர்காலத்திலும் செய்வேன். அது தவறான கருத்தை பரப்ப அல்ல, ஒரு நேர்முகத்தேர்வைப் போல.
வேதம் இதைச் சொல்கிறதே?இதைத் தெரிந்துகொள் என்று சொல்கிறதே? தெரிந்துகொண்டாயா என்று கேள்வி எழுப்புவேன், எனக்கு அந்த சுதந்திரத்தை அதே வேதம்தான் தந்துள்ளது என்று சொன்னால் மறுக்க முடியுமா?
பிரச்சினையின் சாரம் அதுவல்ல, வேதம் படித்தவன் நான், இன்னொருவன் வேதம் படிக்காதவன் என்ற காரணத்தாலேயே, அவனுக்கு மனித அடிப்படை உரிமைகளை மறுக்கிறவர்களைத் தான் சாட வேண்டும் என்கிறேன். அவர்களைச் சாடுவது சமுகத்தின் ஒவ்வொருவரின் கடமையும் என்கிறேன். குறைந்தபட்சம், இவர்கள் அவனைவிட எந்தவிததில் உயர்ந்தவர்கள் என்று இவர்களுக்காவது தெரியுமா என்று கேட்கிறேன். அப்படி இவர்களுக்கே தெரியாத பட்சத்தில், இவர்கள் எதைக் கட்டிக் கொண்டு அழுகிறார்கள்? என்ற கேள்வியும் எழுகிறது.
-
கோவில்களில் சமஸ்கிருதத்தில் தான் ஓத வேண்டுமா என்று கேள்வி எழுப்புபவர்கள் இருக்கிறார்கள். சமஸ்கிருதத்தில் இருக்கும் மந்திரங்களின் அதிர்வுகளில், பல நல்ல விஷயங்கள் இருக்கின்றன என்று விஞ்ஞானப் பூர்வமாகவே நிருபீக்கப்பட்டிருக்கிறது.

> இது ஆசிரியரின் நம்பிக்கையாய் இருக்கும் பட்சத்தில் அதை குறைகூறமுடியாது. ஆனால் நிருபிக்கமுடியுமா? என்று கேட்கலாம். ஏனெனில் "அறிவியற் பூர்வமாக" என்று சொல்லியிருப்பதால்.
-
 அதுவும் போக, தமிழில் மந்திரங்கள் சொல்லப்படாத கோவில்களே இல்லை எனலாம். ஆழ்வார் பாசுரங்கள், தேவாரம், திருவாசகங்கள் எல்லாம் இன்றும் எல்லாக் கோவில்களிலும் பாடப்பட்டுத் தான் வருகின்றன.

> தமிழில் மந்திரங்கள் சொல்லப்படுவத்ன் பின்னால், மேலே சொல்லப்பட்ட, "தவறாய் போதிக்கப்பட்டவர்களின்" மாபெரும் உழைப்பும்,
போராட்டமும் உள்ளது என்று சொல்ல்வேண்டுவதும் இங்கு அவசியம். இது போராட்டத்தினால் விளைந்த நிலை, சமத்துவத்தாலோ சனாதனம் என்று அழைக்கபடும் மாய்மாலத்தாலோ விளைந்தது அல்ல.
-
 இதே போல கேள்வி எழுப்புவர்கள் எல்லாம், கோவில்களிலோ அல்லது கடவுள்களிலோ நம்பிக்கை இல்லாதவர்கள் தான். மக்களுக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இருப்பதால் தான், குடமுழுக்கிற்கும், பண்டிகை தினங்களில் கோவில்களுக்கும் கூட்டம் குவிகிறது. தேர்தல் சமயத்தில் தனக்கு ஆதரவாய்த் தீர்ப்பளித்த போதெல்லாம், 'ஆ?¡...தமிழன் அறிவாளி' என்று துள்ளிக் குதிக்கும் தலைவர்கள், இது போன்ற விஷயங்களுக்கு மட்டும், மூடநம்பிக்கை கொண்ட மடையர்கள் என்று எள்ளி நகையாடுவது அரசியல் தவிர வேறென்னவாய் இருக்க முடியும்?

>அரசியல் வாதிகளின் சுயனலத்துக்கு எடுத்துக்காட்ட, வேறு எத்தனையோ இதைவிட சிறப்பான உதாரணங்கள் இருக்கும் என நம்புகிறேன்.
-
வேதங்களிலும், புராணங்களிலும் உயர்த்தி சொல்லப்பட்ட பிராமணன் என்பவன், தற்போதைய சாதீயக்குறியீட்டின் மூலம் வழங்கப்படும் பிராமணர்கள் இல்லை.

> இப்படிச் சொல்லும் ஆசிரியர், அதாவது இப்பொழுது இருக்கும் பிராமணர்கள் , சூத்திரர்களாய் ஆகிவிட்டார்கள் என்று சொல்ல வருகிறாரா என்ன?
-
அதாவது, அயல்நாடுகளுக்கு வந்து, கணிப்பொறியில் தட்டி, காசு சம்பாதித்து, ஜாதி என்று விண்ணப்படிவத்தில் கேட்கப்படும் போது 'பிராமின்' என்று நிரப்பிக் கொள்ளும் பிராமணர்கள் இல்லை. இப்போது பிராமணன் என்று சொல்லிக் கொள்பவர்கள், அடையாளத்தைத் தான் வைத்துள்ளார்கள், உண்மையான அர்த்தங்கள் இழந்து போய் வெகுநாட்களாயிற்று. அவர்கள் எல்லாம் அதில் பெருமை கொள்ளவொ, சிறுமை கொள்ளவோ ஒன்றுமே இல்லை.
அதை வைத்துக் கொள்வதும், இழக்க நினைப்பதும் அவனவன் சௌகர்யம். அந்தக் காலத்தில் உயர்த்தி சொல்லப்பட்ட பிராமணன் என்பவன், நான்கு வேதங்களையும் கற்றறிந்து, உலக நன்மைக்காகக் கடவுள்களைப் பிரார்த்தித்து, அரிசியைப் பிச்சையாய் வாங்கி உண்டு வந்தவன். சமுதாயத்தில் சத்ரியன் என்று அழைக்கப்பட்டவர்களும், தாழ்ந்தவர் என்று அழைக்கப்பட்டவர்களும் நான்கு வேதங்களைக் கற்றறிந்து பிராமண நிலைக்கு உயர்ந்ததாய்ப் பலர் சொல்லியும், படித்தும் அறிந்திருக்கிறேன். பல ரிஷிக்களாலும், முனிவர்களாலும், தோன்றிய காலமே தெரியாத வேதங்களில், அரிய விஷயங்களாகப் பல நல்ல விஷயங்கள் போதிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அதற்குப் பின்னால் வந்த சில சுயநல பிராமணர்கள், பல இடைச்செருகல்களைப் புகுத்தியும், தவறான
விளக்கங்களும் அளித்து தகிடு தத்தங்கள் செய்துள்ளார்கள்.

> இந்த சுயனல பிராமணர்களையும், "தவறாய் போதிக்கப்பட்டவர்கள்" பட்டியலில் சேர்த்திருந்தால் கட்டுரைக்கு வலு சேர்ந்திருக்கும்.
இவர்கள் அளித்த விளக்கங்களை பின்பற்றும் போற்றும் பிராமணர்கள் இன்றும் இருந்தால் அவர்களை என்ன செய்வது என்று ஆசிரியர் யோசித்துப் பார்ப்பாரா?
-
ஆனால், எந்த சமுதாயம் தவறு செய்ததோ, அதிலிருந்தே பல நல்லவர்களும் தோன்றி, இழைக்கப்பட்ட அநியாயங்களை எதிர்த்துள்ளார்கள். அவர்கள் எல்லாம் தமிழில் ஆர்வலர்களாகவும், விற்பன்னவர்களாகவும் திகழ்ந்துள்ளனர். அதற்கு ஒரு அற்புத உதாரணம், சுப்பிரமணிய பாரதியார்.
>சுப்பிரமணிய பாரதியார் உயிரோடு இருக்கும் போதே எதிர்த்த பிராமணர்களை என்ன சொல்லுவது?

'சாதிகள் இல்லையடி பாப்பா, குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!' என்று போதித்தான். இது நம்மாளு என்ற படத்தில் வரும் எளிய வரிகளில் வரும் பாட்டை சொல்கிறேன், 'பாண்டியிலே நம்ம பாரதியார் இருந்தார், பக்கத்திலே ஒரு தாழ்ந்தவரும் இருந்தார், பூணூலைத்தான் நீ மாட்டுன்னார்...எல்லாரும் அய்யருன்னு வெளுத்து வாங்கினார்!' தமிழில் பல சேவைகள் செய்து, அரிய பொக்கிஷங்களைப் பாதுகாத்த உ.வே.சாமிநாத அய்யர், தமிழ்த்தாத்தா என்றே வழங்கப்படுகிறார்.
ஆனால், அவர்களைப் போன்ற நல்லவர்களையும், தமிழ் விற்பன்னர்களையும் வசதியாய் மறந்து விட்டு, இன்னும் வசை பொழிகின்றனர்.

>இதையே பிராமணத் துவேஷத்தை ஆதரிக்க , வசதியாய் ஆசிரியர் பாரதியை துனைக்கு அழைத்துக் கொண்டார் என்றும் ஒருவரால் சொல்ல முடியும்.
> குத்தமுள்ள நெஞ்சாய் இல்லையென்றால் எந்த பிராமணரும் இந்த சாடல் தன்னைக் குறித்ததல்ல என்று போக வேண்டியதுதானே?
ஆதாரமுடைய அராஜங்களைக் குறித்து குரல் எழுப்பினால் அது வசை ஆகாது என்று ஆசிரியர் அறிவார் என்று நம்புகிறேன்.

பெரியார் ராஜாஜி என்ற பிராமணரோடு கூடிக் குலாவினால், நட்பு வேறு, கொள்கை வேறு என்று பாராட்டுவார்கள். அதில் கூட எல்லாப் பெருமையும் பெரியாருக்குத் தான்.
-
> பெரியாரின் சேவைகளை ராஜாஜி ஒப்புக் கொண்டாலும், கட்டுரை ஆசிரியர் ஒப்புக் கொள்ள மாட்டார் எனத் தெரிகிறது.
இல்லைஎனில் ராஜாஜி பெரியாரின் நட்பாய் பழகியிருப்பாரா என்ன?

ஆத்திகத்தில் நம்பிக்கை கொண்ட ராஜாஜி, நாத்திகப் பெரியாரோடு அதே போல் நட்பு பழகியது அவர்களுக்குப் பெரிய விஷயமில்லை! இதில் ஒரு கொடுமை என்னவென்றால், பெரியார் ஆனதென்ன ராஜாஜி என்ற உவமையைக் கூடப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள், திருப்புகழைப் பாட பாட வாய் மணக்கும் என்றால் பல் துலக்குவதேன் என்று குதர்க்கமாய் பேசுவதையும், சரஸ்வதி மலஜலம் கழிப்பது நாவிலா என்று கேள்வி கேட்பதையும் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று மற்றவர்களை எதிர்பார்ப்பார்கள்.

> இதற்கும் மேலே சொன்ன, "கருத்து எதிரியல்ல , கருத்தைக் காரணமாய் காட்டி மனிதனை மறுக்கும் மனிதனே மறுக்கப்படவேண்டியவன்" என்பது பொருந்தும்

 இன்றும் கூட, தமிழகக் கட்சிகள் சிலவற்றிற்கு பேசுவதற்கு விஷயமே இல்லை என்றால், 'பிடி..பிராமண எதிர்ப்பை' என்று கிளம்பி விடுவார்கள்.
> கட்சிகளில் எந்த கட்சி புனிதமான கட்சி?

இன்னும் ஒரு கொடுமை என்னவென்றால், தமிழகத்தில் தான் இப்படி என்றால், அயல்நாடு வந்த பின்னும் பிராமண துவேஷம் ஒரு சிலரிடம் கொடிகட்டிப் பறப்பதை நினைத்தால் சிரிப்புத் தான் வருகிறது. போன முறை பெட்னாவில் கூட, பல பிராமண எதிர்ப்புப் பிரச்சாரங்கள், 'மாதவன் வராமல் போகட்டும், மாமிகள் கோபம் கொள்ளட்டும்' என்றெல்லாம் கவிதை பாடினார்கள் என்று தெரிய வந்தது. ஏதோ மாதவன் வராமல் போனால், மாமிகளுக்கு மட்டும் தான் கோபம் வருவது போல ?! ஒரு சீக்கிய சகோதரன் தலைப்பாகை அணிவதில் எங்கும் தயக்கம் காட்டுவதில்லை, ஒரு இஸ்லாமிய சகோதரன் குல்லா அணிவதில் எந்தத் தயக்கமும் காட்டுவதில்லை...அவர்களைப் போலவே, பிராமணர்களும் பூணூலை அணிந்து வெற்றுடம்புடன் வரும் போது மட்டும், எதற்கு ஆயிரத்தெட்டு கேள்விகள், நக்கல் பிரச்சாரங்கள் என்று தெரியவில்லை? சகமனிதர்களை ஜாதி போன்ற காரணங்களைச் சொல்லி, யார் ஒதுக்கி வைத்தாலும் தவறு தான். அது தண்ணி தெளித்து தீட்டு என்று சொல்லும் பிராமணனாய் இருந்தாலும் சரி, கொட்டாங்குச்சியில் காப்பி ஊத்தி, வேலிகளில் அலுமினியத் தட்டுகளை சாத்தி வைக்கச் சொல்லும்வேறு எவராயிருந்தாலும் சரி..எல்லாம் தவறு தான். ஆனால், இது போன்ற இழிசெயல்களை, இப்போதிருக்கும் பல பிராமணர்கள் செய்வதில்லை, நம்புவதுமில்லை..ஏன் வெறுப்பவர்கள் கூட என்று சொல்லலாம். எல்லா சாதிகளிலும் விதிவிலக்குகள் இருக்குகிறார்கள், அதே போல்...நான் சொன்ன மேற்கூறியவர்களிலும் இருக்கத் தான் செய்வார்கள்.

ஒவ்வொருவனின் நம்பிக்கையும் அவனவனோடு. அவனது வீட்டிற்குள் அவன் எது வேண்டுமானாலும் பின்பற்றிக் கொள்ளட்டும், ஆனால்..அது அடுத்தவனை உரசாத வரை, அதைக் கேள்வி எழுப்புவதும், நக்கல் அடிப்பதும் குரூர மனப்பான்மையின் மறுவடிவம். முன்னால் எல்லாம், காயத்ரி மந்திரத்தைப் பெண்கள் சொல்லக்கூடாது, மற்றவர்கள் சொல்லக்கூடாது என்று பல பொய்ப் பிரச்சாரங்கள் இருந்து வந்தன.
சமீபத்தில் இங்கு வந்த சுவாமி ஒருவர், எல்லோரையும் தியானம் இருக்கச் சொல்லி, பெண்கள் உட்பட சொல்லலாம் என்று கூறி, காயத்ரி மந்திரத்தைப் போதித்தார்.அதே போலவே, சமஸ்கிருதத்தைத் தேவ பாஷை என்று சொல்லி, பிராமணர்களைத் தாண்டி வெளியே விடாததும், ஒரு பெரும் தவறு தான். ஆனால், இந்தத் தவறுகள் எல்லாம் உடைத்தெறியப்பட்டுப் பல காலம் ஆகி விட்டது.

> பிராமணியத்துக்குள்ளேயே இருக்கும்  தீண்டாமை குறித்து ஆசிரியர் எழுதியுள்ளது வரவேற்புக்குரியதே. இதையே செய்யும்
பகுத்தறிவு மட்டும் எப்படி மக்கிப் போனதாக இருக்க முடியும்??


இன்றும் மனித நேயம் மரத்துப் போன பிராமணர்கள் சிலரும் இருக்கலாம், அவர்களை எல்லாம் தனிப்பட்ட முறையில் கேள்வி எழுப்புவதை யாரும் தடுக்கப்போவதில்லை. ஏனென்றால், அவர்கள் எண்ணிக்கையில் சொற்பமாகத் தானிருப்பார்கள். எல்லா சமுதாயத்திலும் நல்லவர்கள் இருக்கிறார்கள், தமிழ் ஆர்வலர்கள் இருக்கிறார்கள், தமிழில் தொண்ட


Posted at 09:26 pm by karthikramas
Comments (6)  

நம் வரலாறு..

நண்பர்களுக்கு,
(குறிப்பாய் அருண்,மதி,சுந்தரவடிவேல்,தங்கமணி,செல்வராஜ்,பரி,பத்ரி ஆகியோர்களுக்கு)..

அருண் கட்டுரை சிந்தனையை தூண்டுவதாய் உள்ளது என்பதில் ஐயமேதுமில்லை. வழக்கமாய் எழுதுவது போல் நக்கலுடன் எதிர்வினை ஒன்றை எழுதலாம் என்றால் மனம் ஒரு fபுல்லை fபுல்லாய் குடித்தது போல் தடுமாறுகிறது.

சுந்தரவடிவேலின் அச்சுதவாய் ரோக கவிதையினால் அருண் தனது கட்டுரையை எழுதியிருந்தால்,
நண்பர் அருணுக்கு எனது மிகப் பணிவான வேண்டுகோள், அக்கவிதையை பிராமணத்துவேஷமாய் பார்க்க வேண்டாம் என்பது மட்டும்தான். சுந்தரவடிவேலரும் தான் இன எதிர்ப்பாளர் இல்லை என்று சொல்லியாகிவிட்டது.தங்கமணியும் அது போலவே ஒரு பதிலை சொல்லியுள்ளார். எனினும் பாரதியின் கூற்றை காண்பித்து மிக நாகரீகமாக எதிர்த்துள்ளார். இத்துடன் விட்டு விட்டு அடுத்ததைப் பார்க்கலாம். அல்லது பேசவே அநாகரிகமான அளவுக்கு வார்த்தைகளை கொட்டி விளையாடலாம். இரண்டுக்கும் நான் தயார். எனினும் முன்னதையே விழைகிறேன்.

மூடப்பிராமணியம் பிராமணர்களாலும் எதிர்க்கப்பட வேண்டியதே என்று சொல்லிக் கொண்டு முடிக்கிறேன்.அதுபோலவே மற்ற மேல் ஜாதி,மேல் இன மூடத்தனங்களும் அனைவராலும் எதிர்க்கபடவேண்டியதே. நம் வரலாறு நமக்கு பெருமை தரும் காட்சிகளை காட்டாது என்பது நாம் அனைவரும் அறிந்ததே!!

 


Posted at 12:01 am by karthikramas
Comments (2)  

Tuesday, May 18, 2004
தேர்தல் 2004 குறித்து வலைப்பதிவுகளில்..

கீழ் கண்டவை இந்திய தேர்தல் 2004 குறித்து வலைப்பதிவுகளில் வீசிய அலை.
ஒரே இடத்தில் இருந்தால் படிக்க எளிதாக இருக்குமென நினைத்து குவித்து வைத்துள்ளேன்.
சில பதிவுகளில்,பக்கத்தை சற்று கீழே இழுத்து படிக்க வேண்டியிருக்கும்.
 பிரகாஷ் , அவரது கருத்துகளை ராயர் க்ளப்பில் எழுதியிருந்தார். அவரது பதிவில் போட்டால் அனைவருக்கும் உதவும்.

**வேறு யாரையாவது பட்டியலில் தவற விட்டிருந்தால் , எனக்கு தெரிவித்தால் சேர்த்துவிடுவேன் :-) **

தேர்தல் குறித்து எழுதலாம் என்று நினைத்து ஆரம்பித்தேன். இவற்றை பார்த்தவுடன் வேண்டாமென்று முடிவு செய்துவிட்டேன். :-)  சோனியா பிரதமாரவதில் உள்ள சர்ச்சை குறித்து மட்டும் எழுதுவேன்...

Aruna
http://aruna52.blogspot.com/2004/05/blog-post_15.html
Amalasingh
http://amalasingh.blogspot.com/2004_04_18_amalasingh_archive.html
Aappu
http://aappu.blogdrive.com/archive/cm-5_cy-2004_m-5_d-19_y-2004_o-0.html
Arun
http://arunviews.blogspot.com/2004_05_16_arunviews_archive.html
Badri
http://thoughtsintamil.blogspot.com/2004_05_09_thoughtsintamil_archive.html
Balasubra
http://etamil.blogspot.com/2004_05_01_etamil_archive.html
BB
http://www.tamillinux.org/~balaji/archives/000303.html
DuraiSwamy
http://odai.blogspot.com/2004_05_09_odai_archive.html
Hari
http://harilama.blogspot.com/2004_05_02_harilama_archive.html
Idlyvadai
http://idlyvadai.blogspot.com/2004_05_01_idlyvadai_archive.html
JohnBosco
http://johnbosco.blogspot.com/2004_05_09_johnbosco_archive.html
kathavu-karthikeyan
http://kathavu.blogspot.com/2004_05_09_kathavu_archive.html
Kasi
http://kasi.thamizmanam.com/index.php?catid=1&blogid=1
Malan
http://elections2004.yarl.net/archives/000787.html
PARA
http://www.tamiloviam.com/writerpara/page.asp?ID=168&fldrID=1
pari
http://pari.kirukkalgal.com/index.php?itemid=55
pkp
http://pkp.blogspot.com/2004_05_01_pkp_archive.html
raja
http://raja.yarl.net/archives/2004_05.html
Kosapettai
http://kosappettai.blogspot.com/2004_05_09_kosappettai_archive.html
Poetraj
http://poetraj.blogspot.com/2004_05_01_poetraj_archive.html
Rajmu
http://www.rajmu.blogspot.com/2004_04_01_rajmu_archive.html
RajniRamki
http://rajniramki.blogspot.com/2004_05_01_rajniramki_archive.html
Shankar
http://suvadu.blogspot.com/2004_05_01_suvadu_archive.html
PKS
http://pksivakumar.blogspot.com/2004_05_09_pksivakumar_archive.html
Nose-Sundar
http://mynose.blogspot.com/2004_05_16_mynose_archive.html
Thangamani
http://ntmani.blogspot.com/2004/05/blog-post_14.html
Valaippoo-dubukku
http://valaippoo.yarl.net/archives/000759.html
Venkat
http://www.tamillinux.org/venkat/myblog/archives/000300.html
Venkat
http://www.tamillinux.org/venkat/myblog/archives/000305.html
Venkatesh,Rajini Interview
http://sifyrayan.blogspot.com/2004_04_11_sifyrayan_archive.html

 


Posted at 10:39 pm by karthikramas
Comments (1)  

எல்லைக் கோட்டை நிர்ணயம் செய்து விடுவோமென

அன்புள்ள செல்வராஜ், உங்கள் நீண்ட பதிவுக்கு நன்றி. நான் கூட முதலில் உங்கள் ஒற்றை வரி மறுமொழியைப் பார்த்து , என்னடா, மனிதர் மென்மையாய் பேசிவிட்டு போய்விட்டாரே என்று நினைத்தேன். பின்பு நம்ம பெயரிலி லேசாய் ஜகா வாங்கியவுடன் நானும் கொஞசம் கவனம் குவித்தேன். னீங்கள் சொன்ன அத்தனையையும் நானும் கவிதையில் பார்த்தேன். மிகவும் ரசிக்கவும் செய்தேன். னீங்கள் சொன்ன ஒன்று மட்டும் ஒரு 2 வரி குறிப்பு சொல்ல விழைகிறேன். நான், கவிதை நாரணந்தான் படைத்தான் என்று கவிதை ஏற்றுக் கொள்வதாய், எழுதியிருந்தால் , அதை நான் பிடித்த இன்னொரு குரங்காய் எடுத்துக் கொள்ளுங்கள்(பிள்ளையாரை இப்போதைக்கு தவிர்ப்போம் ..:-)). நான் சொல்ல வந்தது, இதே கவிதையை கடவுள் ஏற்பாளர் எழுதுவது கடினம். ஏன்? நீங்கள் சொன்னது போல் அதிர்ச்சி தரும் சில வரிகள் கடவுள் ஏற்பாளரின் நம்பிக்கை எல்லையில் நுழைய வாய்ப்புள்ளது. அந்த எல்லைக் கோட்டை நிர்ணயம் செய்து விடுவோமெனில், கவிஞரை கடவுள் மறுப்பாளராய் காணவும் வாய்ப்புள்ளது. ஒரு கடவுள் மறுப்பாளர் இந்தக் கவிதையை எழுதுமிடத்தில் (இந்த இடத்தில் கவிஞர், சு.வ அல்ல) அவரது நம்பிக்கை மறுப்புக்கும், நாரணன் வாயில் உலகம் தெரிகிறது என்ற கவிதைவரிகள் முரணாய் இருக்கும் என்பதை சொல்ல வந்தேன்.அவ்வெல்லைக் கோடு எங்கு சஞ்சரிக்கிறது என்பதுதான் இங்கு அனைவரின் பார்வை எழுப்பும் கேள்வியாகிறது. எனவேதான் அக்கவிதை குறித்துக் குறிப்பு எழுதுவதைத் தவிர்த்தேன். தங்க மணி சொல்வது போல் , அவ்வெல்லைக் கோட்டை குறித்து எழுதி நாம் மதிப்பவர்களிடம் தவறான புரிதலைத் தரும் அபாயத்தை தவிர்க்கவேண்டும் என்றே நானும் நினைக்கிறேன். --- உங்கள் வலைப்பதிவின் சுட்டியையும், பின் தொடர்தலையும் எனக்குள் இருக்கும் சோம்பேறி அனுமதித்தவுடன் செய்துவிடுகிறேன்.

Posted at 12:16 pm by karthikramas
Comments (3)  

Monday, May 17, 2004
சுந்தரவடிவேலரின் கவிதை குறித்து...

சுந்தரவடிவேலரின் கவிதை குறித்து...
  இக்கவிதையை பார்ப்பது எப்படி என்பது ஓவ்வொருவருக்கும் வேறுபடுகிறது என்பதுதான் பிரச்சினை. இதை எழுதியவர் கடவுள்  மறுப்பு கருத்தாளர் என்பது எரிகிறதாய் காட்டப்படும் தீயில் எண்ணெய் ஊற்றுவதாம்.

இந்த கவிதை குறித்து என்னால் ஒரு குறிப்பை எழுதி அனைத்து திருமால் பக்தர்களின் ஏகோபித்த ஆதரவுடைய கைதட்டலை பெறமுடியும். அல்லது இதே கவிதைகுறித்து இன்னொரு முகமாய் ஒரு குறிப்பு எழுதி திருமால் இதனால் அவமானப்பட்டுவிட்டாரா என்று கேட்டு, திருமால் பக்தர்களின் வயிற்றெரிச்சலையும், கடவுள் மறுப்பாளர்களின் வாயார வாழ்த்தையும் பெற முடியும்.

என்னை பொறுத்தவரை இரண்டுமே வேண்டியதில்லை. இது ஒரு கவிதை , கவிதை மட்டுமே என்ற பார்வை இருபுறத்தாருக்கும் உதவுமென நினைக்கிறேன்...

இக்கவிதையில் அழகியல் உள்ளதா என்றால் உள்ளது என்றே சொல்வேன். அதே சமயம் இக்கவிதையில் பக்தியையோ அறிவையோ பார்க்கமுடியாது என்றும் சொல்வேன். ஏனெனில் நாரணந்தான் படைத்தான் என்பதையே கடவுள் மறுபாளர்கள் ஏற்பதில்லை  என நம்புகிறேன். அப்படி ஏற்பவர்களின் ஏற்பும் ஏற்புக்குரியதல்ல, இவ்வாறு கவிதைஎழுதின்.

:-)  :-)
 


Posted at 03:49 pm by karthikramas
Comments (3)  

எங்கும் அமைதி...

மனிதர்களில்லா உலகு
நானும் பேசுவதை நிறுத்திகொள்கிறேன்.
எங்கும் அமைதி

Posted at 09:53 am by karthikramas
Comments  

Thursday, May 13, 2004
சுந்தரவடிவேலரே..

ஐயோ சு.வ.
 அதை ஏன் கேக்குறீங்க....  இந்த வலைப்பூவ ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சாங்க(னம்ம உஷாரா அவங்கள திட்டிடனும் அவங்க நம்மள திட்டறதுக்கு முன்னால :) )... படா பேஜாரா பூட்சுபா.. நான் கூட இந்தப் பக்கம் வரமாட்டேன், ஒரு மாசம் வேலை நிறைய இருக்கு; லீவு குடுங்கன்னு கேட்டு, டமில் ப்ளாக்ஸ் க்ரூப்பில அறிக்கையெல்லாம் விட்டேன்.  24 மணினேரம் கூட தாங்கல. கை அரிப்புதான் மிச்சம்.இவனுக்கெல்லாம் வேற பொழப்பே கிடையாதா ? அப்படின்னு எல்லோரும் ஒரு மாதிரியா பாக்க ஆரம்பிச்சுட்டாங்க.. என்னத்த சொல்ல. ..இப்ப எல்லாம் ப்ளாக் கூட அதிகம் எழுதறது இல்ல. கமெண்ட்டு எழுதறதுக்கே டைம் பத்தமாட்டேங்குது... இதுல் சில பேர்கிட்ட எதிர்வினை எழுதுறன்னு வேற வாய குடுத்து வம்ப விலைக்கு வாங்குறது..உருப்புட்டா மாதிரிதான்...நானு... ம் :-)

Posted at 08:17 pm by karthikramas
Comments (4)  

Sunday, May 09, 2004
கவிதை எழுதுவதென்பது...

கவிதை எழுதுவதென்பது நிலவை எக்கிப் பிடித்து
   பிஞ்சுக் குழந்தையின் கைக்குள் அவசரமாய் சேர்ப்பதுவாம்
கவிதை எழுதுவதென்பது சில நேரங்களில் குழந்தைக்கு
   குழந்தையாகி நிலவை தரேன் என்று அடம்பிடித்து அழுதலாம்
கவிதை எழுதுவதென்பது மலருக்குள் இறங்கி வண்ணத்தை பிரித்தெடுத்து சட்டைப் பைக்குள் போட்டுப் பிடரி தெரிக்க ஓடுதலாம்
கவிதை எழுதுவதென்பது பனித்துளி ஒன்றை தலையில்
   சுமந்து திரிந்து குளிரிலே நடுங்கிப் பின் தூர எறிவதாம்


தலீவா இது எப்பிடி கீது ??
இத்த படிச்சீ அத்த மாதிரியே ட்ரை பண்ணது ஹி ஹி ...

தலைப்பு நல்லா கீது...
  சுந்தரவடிவேல் , தங்கமணி யெல்லாம் எழுதுனாங்கன்னா பெயரிலியின் மாதிரியே
உண்மையிலேயே நல்ல கவிதைகள் 2 கிடைக்கும்... அம்புட்டுதேன் சொல்லிபுட்டேன்....


Posted at 08:36 pm by karthikramas
Comments (5)  

Friday, May 07, 2004
ராணுவ அத்துமீறல்கள் -??


எந்த ராணுவமும் நல்ல ராணுவம் அல்ல - No army is good army - என்று சொல்வார்கள். ஆதிக்கம் செலுத்துகிற அல்லது அதிகாரம் கொண்ட ராணுவம் செய்கிற அத்துமீறல்கள், கொடுமைகள் ஆகியவை குறித்துத் தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருப்பது இந்த நிஜத்தை உணர்த்தும். ஈராக் சிறைச்சாலையில் கைதிகள் நடத்தப்பட்ட விதம் குறித்து CBS தொலைகாட்சி தன் 60 Minutes நிகழ்ச்சியில் காட்டிய புகைப்படங்கள் ஈராக்கில் அதிகாரம் செலுத்துகிற அமெரிக்கர்களையும் ஆங்கிலேயர்களையும் மட்டுமின்றி அனைவரையும் அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளன. தவறு செய்த ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. இது ஜனநாயகத்தின் சிறப்பாகும். மேலும் இத்தகைய குற்றங்கள் நிகழாமல் நடவடிக்கைகள் தடுக்குமோ தடுக்காதோ ஆனால் ஜனநாயகத்தில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள், தண்டிக்கப்படுவார்கள் என்பதற்கு உதாரணமாக ராணுவ வீரர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் அமையும்.

 சமீபத்தில் இணையத்தில் நடந்த விவாதங்களின்போது இந்தியாவில் மனித உரிமை மீறப்படவில்லையா என்கிற கேள்வி எழுப்பப்பட்டு அதன் அடிப்படையில் பயங்கரவாதக் குழுக்கள் செய்கிற அத்துமீறல்கள் படுகொலைகள் ஆகியவற்றை விடுதலைக்காக என்கிற நோக்கத்துக்காகப் பொறுத்துக் கொள்ளலாம் என்று "அறிவுபூர்வமான" வாதங்கள் வைக்கப்பட்டன.
>>>
-   இதிலிருந்து நண்பர் பி.கே.எஸ், பயங்கர வாத குழுக்கள் செய்யும் அத்துமீறல்களை ஆதரிக்கவி-ல்லை என்று சொல்கிறார். வரவேற்புக்குரிய கருத்துதான்.
-இதே போல் "வீரன்" வாஞ்சி நாதன் செய்ததையும் அத்து மீறல் என்று சொல்வாரா?? வாஞ்சி நா
-தனை "பயங்கரவாதி"  என்று உரத்து குரல் கொடுப்பாரா?? இந்த நிலைக்கும் அந்த நிலைக்கும் -உள்ள
-வித்தியாசம்தான் என்ன என்று பிரித்து பொருள் தருவாரா??
-பாரதி மாறு வேடம் பூண்டதை கோழைத்தனம் என்று சொல்வாரா?? பாரதி திரைமறைவு வேலை
-செய்த கீழ்த்தரமானவன் என்று சொல்வாரா??
-சுபாஷ் சந்திரபோஸ் அமைத்ததை பயங்கரவாத போராளிக் குழு என்று சொல்வாரா??
- ஏனெனில் அரசு ஆங்கிலேய அரசாய் இருந்தபோது, அரசுக்கு எதிரான ஆயுதம் தாங்கிய குழு தா-னே சந்திரபோஸினுடையது!!
>>>>>>>>
இலங்கையில் இந்திய அமைதிகாக்கும் படை அட்டூழியங்கள் செய்யவில்லையா என்றும் கேள்வி எழுப்பப் பட்டது. குஜராத்தில் நடந்தது தெரியாதா என்றும் கேட்டார்கள். எந்த நாட்டின் அரசாங்கமும் ராணுவமும் செய்கிற அட்டூழியங்களைப் பத்திரிகைகள் தைரியமாக அம்பலப்படுத்த இயலும்.
>>>>>>>>

 பத்திரிகைகள் அம்பலத்த முடியாத குற்றங்கள் நடக்கவில்லை என்று சொல்ல வருகிறாரா?
--Classifeid informations -ஐ எப்படி வகுக்கிறார்??
--உளவுத்துறை ஊழல்களை கணக்கில் கொண்டாரா?
>>>>>
   பாதிக்கப்பட்டவர்களும் நீதி தேடிக் கொள்ளும் வழிகள் உள்ளன. நீதியும் பரிகாரமும் தேட உதவ சட்டங்கள் இருக்கின்றன. உள்ளூர் நீதிமன்றத்திலிருந்து சர்வதேச நீதிமன்றம் வரையும் மிலிட்டிரி டிரிபியூனல்வரையும் பல மார்க்கங்கள் மூலம் நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருக்கிறது.
>>>

-  இதிலிருந்து என்ன சொல்ல வருகிறார்? அரசும் ராணுவமும் என்ன செய்தாலும்  நடவடிக்கை
-எடுக்கலாம்/ எடுக்க முடியும், எனவே  அரசோ / ராணுவமோ / அரசும் ராணுவமும் சேர்ந்தோ
-செய்வதை செய்யட்டும் பின் "நடவடிக்கைகளை" எடுத்துக் கொள்ளலாம் என்றா??

>>>>>>
ஆனால் பின் லேடனோ மற்றும் விடுதலைக்காகக் கஞ்சாவும் போதைப் பொருளூம் கடத்துகிற, தற்¦-காலைப் படைகள் நிறுவி அப்பாவி மனிதரைக் கொல்கிற இயக்கங்களும் செய்கிற அத்துமீறல்களையும் அரசியல் படுகொலைகளையும் எதிர்த்து எந்தக் கேள்வியையும் யாரும் கேட்க இயலாது; எந்த நீதியையும் பெற்றுவிட இயலாது. இதை நம்மில் பலர் அறிந்திருந்தும் அறியாதவர்போல் அபிமானத்தாலோ கட்டாயத்தாலோ கண்மூடித்தனமாகவோ நடிக்கிறோம்.
>>>>>>>>>

-  சரி இதிலிருந்தும் என்ன சொல்ல வருகிறார்? நம்மில் அறிந்தவர்கள் எல்லோரும், விடுதலைக்காகக் கஞ்சாவும் போதைப் பொருளூம் கட-த்துகிற, தற்¦-காலைப் படைகள் நிறுவி அப்பாவி மனிதரைக் கொல்கிற இயக்கங்களை தேடிக் கண்டுபிடிக்க கிளம்பலாம் என்றா?
- இல்லை வீட்டுக்கொரு இளைஞனை பின் லேடனைக் கண்டுபிடிக்க கொடுக்கலாம் என்றா?
>>>
இலங்கையில் இந்திய அமைதி காக்கும்படை அத்துமீறல்களில் ஈடுபட்டிருக்க கூடும் என்பதில் சந்தேகமில்லை. எல்லா ராணுவங்களைப் போலவும் இந்திய ராணுவமும் ராணுவம் தானே. இந்திய அமைதி காக்கும்படையின் அத்துமீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் பரிகாரமும் நிச்சயம் சட்டபூர்வமான வழிகள் மூலம் கிடைக்க வேண்டும். அதற்காக எந்த அளவுக்கு முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்று தெரியவில்லை. ஆனால், அப்படிப்பட்ட அத்துமீறல்கள் நடந்தன என்று அடிக்கடிச் சொல்பவர்கள் - அவை குறித்து ஏதும் சட்டரீதியான புகார்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றனவா, அத்தகைய புகார்கள் என்ன ஆயின என்பதைப் பற்றி ஏதும் சொல்வதில்லை. புகார்கள் கொடுக்கப்பட்டிருந்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லையென்றால், அது கண்டிக்கப்படத்தக்கது.
>>
 ஆனால், புகார்கள் ஏதும் கொடுக்காமல் அல்லது பத்திரிகைகளில் ஆதாரபூர்வமான செய்திகள் வெளிவராமல் வெறுமனே இந்திய அமைதி காக்கும்படை அத்துமீறலில் ஈடுபட்டது என்று சொல்வது அதன் உண்மையை மற்றவர்கள் சந்தேகிக்க வழிவகுத்துவிடக் கூடும்.
>>>
-அடேங்கப்பா!!! மறைக்கவே முடியாத மாபெரும் பூசணிக்காயை ஏன் மறைக்க மல்லு கட்டுகிறார்.
- அமைதிப்படையின் அட்டூழியங்கள் பத்திரிகைகளில் வரவேயில்லை என்கிறாரா? அல்லது
-பத்திரிகைகளில் வந்தால்தான் அவை "நடவடிக்கை" எடுக்கப்படும் அளவுக்கு qualify ஆகும் என்கிறாரா??
-"அது கண்டிக்கப்படத்தக்கது." என்று சொன்னதோடு நிறுத்தியிருக்கலாமே? அமைதிப் படைக்கு வக்காலத்து வாங்க காரணம் என்ன?
-நண்பர் பி கே எஸ் இந்திய ராணுவத்தில் வேலை செய்திருந்தால், அவருக்கு ஒரு சல்யூட்டும், எனது வாதத்தின் அடுத்த தளத்தையும் -சொல்வேன். இப்ப முடீயாதே! :-)
>>>
இதை எழுதியதன் மூலம் இந்திய ராணுவம் புனிதமானது என்று நான் சொல்ல வரவில்லை. எந்த ராணுவமும் செய்த அட்டூழியங்களுக்குப்
பதிலாகக் கூட பயங்கரவாத இயக்கங்களையோ அவற்றின் செயல்பாடுகளையோ விடுதலை என்ற பெயரால் கூட ஆதரிக்க இயலாது என்பதே என் நிலை.
>>>
உதாரணமாக, ராஜீவ் காந்தி கொலை போன்ற ஒரு படுகொலை மேலைநாடுகளில் நிகழ்த்தப்பட்டிருந்தால் - அதற்குக் காரணமான இயக்கம் ராணுவரீதியான பதிலடியால் வேரறுக்கப்பட்டிருக்கும்.
>>>
-இந்திரா அம்மையாரின் படுகொலையின் போது சீக்கியர்கள் வேரருக்கப்பட்டது போலா??
>>
தன்னுடைய குடிமக்கள் பயங்கரவாதத்தால் கொல்லப்பட்டாலே நாடுகள் ராணுவ ரீதியான பதிலடிகள் தருவது வழக்கமாகிப் போய்விட்டன.
>>>
இந்த வழக்கத்தை நண்பர் பி கே எஸ் ஆதரிக்கிறாரே?? ஏன்?? காந்தி மகான் நடத்திய அகிம்சா கூட்டத்தின் மீது தடியடி ஏவிய ஆங்கில அரசின் நடவடிக்கையை ஆதரிப்பாரா??

>>>

இஸ்ரேலும் அமெரிக்காவும் அதைத்தான் செய்கின்றன.
காரணமான இயக்கங்களின் நோக்கங்கள் புனிதமானவையா என்றெல்லாம் யாரும் பார்ப்பதில்லை. விடுதலையை பயங்கரவாத்தின் வழியாகவும் வன்முறை வழியாகவும் யாரும் ஆதரிப்பதில்லை. பாலஸ்தீனத்திலிருந்து, ஆப்கன்கானிஸ்தான், ஈராக் வரை ராணுவ பதிலடிகளையே மக்கள் பார்த்து வருகிறார்கள். சிலநேரங்களில் இவை அவசியமானதாகவும் ஆகிவிடுகிறது.
>>>>
-- அதாவது காந்தி மகானை ஆங்கிலேயர்கள் சுட்டு கொன்றிருக்க வேண்டும் என்கிறாரா??
-- இல்லை அந்த அளவுக்கு ஆங்கிலேயருக்கு அவர் மீது வெறுப்பு இருந்திருக்க வில்லை என்கிறாரா??
>>>

 ஆனால், இலங்கைத் தமிழர்கள் நல்வாழ்வின்பால் இந்தியாவுக்கு இருக்கிற அக்கறையின் காரணத்தினாலும் கூடவே, ராஜீவ் காந்தி படுகொலைக்கு இந்தியா ராணுவ ரீதியான பதிலடி தராமல் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டது என்று அனைவரும் அறிவர். இதுதான் ஜனநாயகத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் உள்ள வித்தியாசம் என்று நான் நம்புகிறேன். ஜனநாயகத்தின் குறைபாடுகளைக் கண்டறிய முடியும்; களைந்து கொள்ள முடியும். பயங்கரவாதமோ தன் குறைபாடுகளை மறைத்துக் கொள்ளவும் குறுகிய நோக்கங்களுக்காகவும் மற்றவரைக் களையெடுக்கும்.
>>>>>>>>>
""ஈராக் சிறையில் வாடுபவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் மனிதாபிமானம் உள்ளவர் செய்யக் கூடியதல்ல.""
"சிலநேரங்களில் இவை அவசியமானதாகவும் ஆகிவிடுகிறது."
- அமெரிக்க ராணுவத்துக்கு , அவர்கள் எதிரிகள்தானே ? "அப்படியிருக்க அவசியமானகவும் ஆகிவிடுகிறது"  லாஜிக் வருகிறது இல்லையா??
-இதன் ஆரம்பம் வெகு நாட்களுக்கு முன்னாலேயே நடக்க ஆரம்பித்து, இத்தனை நாட்கள் கழித்து பத்திரிகைகளில் வருகிறதே??
- இந்த ஈராக் கொடுமைகளை பற்றிய எச்சரிக்கை , எப்பொழுதோ அமெரிக்க அரசுக்கு வந்தது எனபது செய்தி.
-
-ஜனனாயகம் இத்தனை நாள் எவள் மடியில் உறங்கிக் கொண்டிருந்தது?? நண்பர் சொல்வாரா??

>>>>
 அமெரிக்காவும் உலகமும் ஏற்றுக் கொண்டிருக்கிற சட்டங்களின் வழியாக தவறிழைத்தவர்கள் வெளிக்கொணரப்பட்டதும், தண்டிக்கப்படுவார்கள் என்று நம்பப்படுவதுமே ஜனநாயகத்தின் சிறப்பு என்று மேற்கண்ட உதாரணத்தால் என்னால் விளங்கிக் கொள்ள முடிகிறது.
>>>>

-வெளிக்கொணரப்பட வில்லையென்றால்??  எத்தனை பேர் வேண்டுமானாலும் சாகலாம் என்று விளங்கிக் கொள்ளலாமா??
>>>
மேலும் CBS TV இந்நிகழ்ச்சியை ஒளிபரப்புவதற்கு முன்னர் - அது பற்றி அமெரிக்க அரசாங்கத்துக்குத் தெரிவித்ததாகவும் - ஈராக்கில் தற்போது நிகழ்ந்து வரும் கடுமையான சண்டைகளால் - இதைச் சற்றுத் தாமதமாக ஒளிபரப்பும்படி அமெரிக்க அரசாங்கம் கேட்டுக் கொண்டதற்கிணங்க - இருவாரங்கள் தாமதமாக இந்நிகழ்ச்சி ஒளிபரப்பப் பட்டிருக்கிறது என்றும் அறிகிறோம். தன் நாட்டின் ராணுவம் செய்த அத்துமீறல்களையும் கூட ஒளிபரப்ப வேண்டாம் என்று தடுக்கிற அதிகாரம் கையிலிருந்தும் அதைப் பயன்படுத்தாமல் அனுமதித்ததும் ஜனநாயகத்தின் ஓர் அம்சமே. இதையே பின் லேடனும் அல்லது விடுதலைக்காகப் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுகிற பிற இயக்கங்களூம் செய்திருப்பார்களா என்ற கேள்விக்கான பதில் நாமறிந்ததே.
>>>>
-இனி பின் லேடன் தினமும் CBS-ல் தினசரி அப்பாயிண்டுமெண்டுகளை உலகத்துக்கு சொல்லிவிட்டு, வேலை செய்யுமாறு கேட்டுக்கெ--ள்ளப்படுகிறார். 
>>>>
எதற்காக இந்நிகழ்ச்சியை ஒளிபரப்பும் முன் அமெரிக்க அரசாங்கத்திடம் CBS தொலைகாட்சி தகவல் சொல்லியது என்பது என் கேள்வி. இத்தகவல் சொல்லப்பட்டது நாகரீகத்துக்காகவா (Courtesy) அல்லது அப்படி ஏதும் சட்டரீதியான நிர்ப்பந்தம் தொலைகாட்சிகளூக்கு இருக்கிறதா என்றும் தெரியவில்லை.

இந்திய அமைதிகாக்கும் படை செய்த அட்டூழியங்கள் குறித்து வருந்துகிற நண்பர்கள் (வருந்த வேண்டிய விஷயம்தான் அது) - மற்றவர்கள் வருந்துவதில்லை என்று குற்றம் சொல்கிற நண்பர்கள் - ஈராக் கைதிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை எதிர்த்து வலிமையாகக் குரல் கொடுத்து தங்கள் நடுநிலைமையைப் பறை சாற்றுவார்கள் என்று நம்புகிறேன்.

----
  அட்டூழியங்களை வரையறுக்கத் தெரியாதவர்கள் தான் குழம்புகிறார்கள், சிந்திப்பவர்களும், காணச் சகியாதவர்களும் அல்ல.
என் கேள்விகளில் குறைஇருந்தாலோ, மாற்று கருத்து இருந்தாலோ தெரிந்தவர்கள் சொல்லவும் கேட்டுக் கொள்கிறேன்.


Posted at 09:42 pm by karthikramas
Comments (5)  

Next Page