<< June 2004 >>
Sun Mon Tue Wed Thu Fri Sat
 01 02 03 04 05
06 07 08 09 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30


If you want to be updated on this weblog Enter your email here:



rss feed



Monday, June 21, 2004
இடைவெளி விடுமின் இன்புற்று வாழ்மின்...

இடைவெளி விடுமின் இடைவெளி விடுமின்
  இது அமெரிக்காவில் பிளசர் கார்(இன்ப ஊர்தி?) ஓட்டுபவர்களுக்கு  தலையில் ஒரு குட்டு வைக்கும், அறிவுரை வழங்கும் முயற்சி.

  ஐ- 495 ல் வந்து கொண்டிருந்தேன். வழக்கமாய் எடுக்கும் வெளிப்பாதையை(எக்ஸிட்) விடுத்து 2 வெளிப்பாதை தாண்டி எடுக்கலாம் என்று உள்ளே இருக்கும் (மனக்) குரங்கு சொன்னது. ஏன்னு கேட்டேன், லோக்கல் சந்து பொந்துகளில் ஓட்டுவதை விட 495-ல் ஓட்டினால் வேகமாய் வீடுபோய்ச்சேரலாம். மேலும் 65 மைல் வேகத்தில் போகலாம் என்று கொஞ்சம் தங்கிலிஷ் கலந்த பாசையில் சொல்லியது. சரி இது பேச்சை கேட்டுத் தொலைப்போம் என்று வந்து கொண்டிருந்தேன்.

  ஐ- 495ன் எதிர்ப்புறம் எல்லா வாகனங்களும் நிறுத்தப்பட்டுவிட்டன. அதாவது காலியாய் இருந்தது மொத்த ஒருபக்க ஐ- 495 ம். இது போல் சுத்தமாக நிறுத்தப்பட்டு நான் ஒரே முறை முன்பொரு சமயம் பார்த்துண்டு. ஆனால் காலைவேளைகளில் ஜனநெருக்கத்தினால் ஐ- 495 சாதாரணமாகவே நிறுத்தப்பட்டது போல்தான் 5 அல்லது 10 மைல் வேகத்தில் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும். என்னடா இது நம்ம வரோம்னு யாராவது காவல் துறைக்கு செய்தி அனுப்பிட்டாங்களா? அப்ப கூட நமக்கே வழி விட மாட்டீகிறானுங்களே! - இது உள்ளே இருக்கும் குரங்கு. குரங்கின் பேச்சைக் கேட்காமல் எதிர்ப்பாதையில் என்ன நடந்தது என்று நோட்டம் விட்டேன். மூன்று கார்கள். மூன்றாவது கார் வலப்புற பதையின் தோள்ப்பகுதியிலுள்ள (ஷோல்டர்?) த்டுப்புக் கம்பியின் மீது மோதி தலை உடைந்து கிடந்தது. காரின் இருந்தவனுக்கு/இருந்தவளுக்கு  நிச்சயமாய் தலைச்சேதம் உண்டாகியிருக்கும் என்று தெரிந்தது.
  அருகில் கம்பீரமாய் ஸ்டேட் ட்ரூப்பர் (மாநில காவல்ப்படை அதிகாரி)  எதிர்ப்புற சாலையில் அதி வேகத்தில் முதலுதவிக்காய் சென்று கொண்டிருந்தார். 1 நிமிடத்துக்குள்ளாகவே ஒரு ஆம்புலன்ஸ் (மருத்துவ உதவு வண்டி) வந்து கொண்டிருந்தது.
 
  அமெரிக்காவில் 90 மைல் வேகத்தில் சென்றால் கூட சில சமயங்களில் நாம் வேகமாய் செல்வது போல் தோன்றாது. எனது சிவில் பொறியியல் படிப்பில் ட்ராபிக் பொறியியல் என்ற பாடமுண்டு.
அதில் முக்கியமாய் ஒரு விதியை வலியுறுத்துவார்கள். அது ஒவ்வொரு 10 கி.மீ வேகத்துக்கும் ஒரு கார் நிறுத்த இடைவெளி அவசியம் என்பது. இதௌ ஆங்கிலத்தில் ப்ரேக்கிங் டிஸ்டன்ஸ் என்று சொல்வார்கள். அமெரிக்காவில் இந்த இடைவெளியை பெரும்பாலும் பார்க்க முடிவதில்லை. காரணம் மிகவும் பழக்கப்பட்ட ஓட்டுநர்களுக்கு இது அவசியமில்லை என்று தோன்றலாம். அல்லது வேகமாய் போய் சாதிக்க வேண்டிய கலெக்டர் வேலை இருக்கலாம். எது எப்படி இருந்தாலும் இடைவெளியைக் குறைத்தல் ஒரு மிகவும் அறிவீனமான செயல். (கொஞ்சம் உறைக்கட்டுமே என்றுதான் இந்த பதப் பிரயோகம் :)) அறிவியலுக்கு மாற்றமான செயல்.

பிரேக் பிடிக்க நினைக்க ஆரம்பித்து  நமது கால் பிரேக்கை பிடிக்கச் செலவாகும் நேரம் குறைந்த பட்சம் 2 விநாடிகள் என்று கணக்கிட்டுள்ளனர். அப்போது வண்டி செல்வதற்குத் தேவையான தூரம்தான் ப்ரேக்கிங் டிஸ்டன்ஸ் அல்லது நிறுத்து தூரம்.

அப்படியெனில் நமக்கு முன்னால் எல்லாவனும் கட் பண்ணிப் போவானுங்களே என்று அழுவாதீர்கள். அது ரொம்ப சாதாரண பிரச்சினை பாபுகாரு. :)

எனவே,
 இடைவெளி விடுமின் இடைவெளி விடுமின்
 இடைவெளி விடுமின் இன்புற்று வாழ்மின்.

(தொடரலாம்...)


Posted at 03:00 pm by karthikramas
Comments (5)  

Tuesday, June 15, 2004
சட்டமும் அதற்கப்பாலும்...

   நேற்று என் பி ஆர் ரேடியோவில் ஒரு நிகழ்ச்சியை கேட்டுக் கொண்டிருந்தேன்.
நிகழ்ச்சி, டார்ச்சர் எனப்படும் துன்புறுத்தல் என்பதை அமெரிக்கா எப்படி வரையறுக்கிறது என்பது பற்றி.  ஒரு பத்திரிகையாளர் ஜனாதிபதி புஷை ஒரு கேள்வி கேட்டார்.
அது "எந்த வகையிலாவது துன்புறுத்தலை நியாயப்படுத்துகிறீர்களா?" என்பது.அதற்கு அதிபர் புஷ் வழக்கம் போல ஒரு உளறலை உளறிவைத்தார். அதன் சாராம்சம்,"புத்தகத்தில் இருக்கும், துன்புறுத்தலுக்கு எதிரான வாதங்கள் உங்களுக்கு மனதிற்கு சந்தோஷத்தைத் தரலாம். ஆனால் அவை வெறுமனே புத்தகங்களில் உள்ள எழுத்துக்கள் மட்டுமே. அவற்றைக் கொண்டு நாம் எதிர்பார்ப்பதை செய்யமுடியாது" என்றும் சொன்னார். என் பி ஆர் செய்தியிலும் இப்படி ஒரு மசாலா பதிலை தருகிறாரே என்று ஆதங்கப்பட்டார் செய்தியாளர். இருந்தாலும் மிகவும் மென்மையாகவே செய்தியாளர் சொல்லியிருந்தார்.

 மேலும், 2002-பெண்டகன் அமெண்ட்மென்ட், ஜனாதிபதிக்கு போர்க்கால நடவடிக்கைகள் போல அல்லது போரை நடத்துகையில் வீரர்களை களத்துக்கு கொண்டுவருவது போலவே அவருக்கு , சட்டத்ததைவிட மேலதிக அதிகாரம் இந்த துன்புறுத்தல் விவகாரத்திலும் உள்ளது என்று சொல்லப்பட்டிருப்பதாகவும் செய்தியாளர் ஒருவர் பேசினார். இது மிகவும் சர்ச்சைக்குரிய ,விவாததிற்குரிய சட்டத் திருத்தம்மாக உள்ளது என்று செய்தியாளர் குறிப்பிட்டார். அமெரிக்க ஜனாதிபதிக்கு மட்டும் என்பதுதான் இங்கு கவனிக்கப்படவேண்டியது. சர்வதேச சட்டத்தையும் மதிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டே மிதிக்கிறார்கள். அமெரிக்க ஜனாதிபதி பதவியின் பெயரை உலகாதிபதி என்று பெயரை மாற்றிக்கொண்டால் கூட பொருந்தும் போல உள்ளது.

ரிபப்ளிக்கன் ஒருவர், துன்புறுத்தல் என்பது அமெரிக்க வரலாற்றிலேயே கிடையாது என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்யாத குறையாக, புளுகி முடித்தார். இப்பொழுது மேசை மீது அந்த பிரச்சினையே இல்லை என்று சொன்னார். கைதிகளை துன்புறுத்துவது குறைத்த வரையறைகள் சர்வதேச சட்டத்தில் எப்படி உள்ளது என்றும் அவை அப்படி பினபற்றப் படுகின்றன எனபது குறித்து மேலோட்டமான பகிர்வாக இருந்தது அந்நிகழச்சி.

என்னைப்பொறுத்துவரை, துன்புறுத்தலை வரையறுக்க ஒரு மருத்துவ அளவீடு தேவை. அது உடலில் செலுத்தப்படும் விசை, சாதரணமற்ற ரத்தவெளிப்பாடு, இதயத்துடிப்பு, ரத்த அழுத்த மாறுதல் போன்றவற்றின் அடிப்படையிலும் இன்னும் இது போன்ற காரணிகளைக் கொண்டும் வரையறுக்கப்படவேண்டும். அது சர்வதேச சட்டத்தினால் பின்பற்றப்படவேண்டும். சர்வதேச அமைப்பினால் நியமிக்கப்பட்ட மருத்துவர்களைக்கொண்டு கைதிகளின் உடல் நிலைகுறித்து சில மாதங்களுக்கு ஒருமுறை அல்லதுதாஆண்டுக்கு ஒருமுறை என்பது போல் சான்றிதழ்கள் வழங்கப்படவேண்டும். உண்மைகளை வரவழைக்க , வலியில்லாத,உயிருக்கு தீங்கற்ற  போதை மருந்துகளை பயன்படுத்தலாம். ஆனால் அதற்கும் ஒரே நேரத்தில் இந்த அளவுதான் கொடுக்கபடவேண்டும் என்று கட்டுப்பாடு இருக்கவேண்டும்.

இப்படி யோசித்துப்பார்த்தால் விந்தையாக இருக்கிறது. ஒருவேளை, இராக் அமெரிக்காவின் மீது படையெடுத்து, வென்று அமெரிக்க ஜனாதிபதி, செய்தித்தாள்களில் "பழைய அமெரிக்க ஜனாதிபதி" யாகி, இராக் சிறையில் இருந்தால் , மனித உரிமை மீதும் , துன்புறுத்தல் மீதும் இன்னும் முறையான கவனம் செலுத்தி யோசிப்பார் என்று நினைக்கிறேன்.  கவுண்டானமோ வளைகுடாவில்(jail) நடப்பது புஷ¤க்கே வெளிச்சம்.

சிறைக்கைதிகளின் வாழ்வை ஒளி/ஒலிபரப்ப ஒரு பொது சாட்டலைட் தொலைக்காட்சி சேனல் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. கைதிகளில் வாழ்க்கையை பொது மக்களுக்கு முடியாவிட்டாலும் சர்வதேச சட்ட அமைப்புக்கு ஒளிபரப்பௌவது அவசியம்.இந்த மாதிரி உரிமையைப் பற்றி பேசினாலே, காசில்லை என்ற பாட்டை பாட ஆரம்பித்துவிடுவார்கள். போருக்கு ஆவதைவிட குறைவாகத்தான் ஆகும் எனத் தோன்றுகிறது.

இந்த பதிவை நேற்றே எழுத வேண்டும் என்று நினைத்தேன். நிறைய விஷ்யங்கள் நினைவைவிட்டகன்றிவிட்டது.
இன்று சி என் என்-ல் இராக் பழைய அதிபர் சதாம் உசேன், இராக் அரசிடம் இன்னும் சில காலத்தில் ஒப்படைக்கபடுவார் என்று செய்தி வந்துள்ளது. இது வரவேற்கப்பட வேண்டிய செய்தி. இம்முடிவை புஷ் அறிவித்தார் என்றும் சொன்னார்கள். கிட்டத்தட்ட "உலகாதிபதி பெரிய மனசு பண்ணி பிச்சை போட்டார்" என்ற கணக்கில். இந்த புத்திற்குள் எந்த பாம்(போ)?

இந்நிகழ்ச்சியை கேட்டவர்களின் கருத்தை அறிய ஆசைப்படுகிறேன். "துன்புறுத்தலை" வரையறுக்கவும் மேலதிக விவரங்கள் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.


Posted at 11:18 pm by karthikramas
Comments (11)  

Tuesday, June 08, 2004
பெலிகனிலிருந்து பென்குவின் வரை...


  விங்க்ட்  மைக்ரேஷன் என்ற டாகுமெண்டர்ரி பார்த்து சொக்கியே போய்விட்டேன்.பாதியிலிருந்துதான் பார்க்க ஆரம்பித்தேன்.

கூஸ்,பெலிகன்,பென்குவின்,கிளிமூக்கு பெலிகன்,கொக்கு, பஞ்சவர்ண கிளி போன்ற ஒரு பல வர்ண கிளி,ஒரு குருவி ஆகிய பறவைகள் பறந்து கண்டங்கள் கடந்து செல்வதை படம்பிடிப்பதுதான் படத்தின் கரு(?). இந்த பறவைகள் வட அமெரிக்காவின் மீது பறந்து கடந்து(?) ஆப்பிரிக்கா செல்வதுதான் இவைகளின் பயணம். வட அமெரிக்காவில் தங்குவது குறித்து அவைகளுக்கு பெரிய அக்கறை இருக்கவில்லை போலத் தெரிகிறது. ஒருவேளை வேடந்தாங்கலோ ஆப்பிரிக்காவோதான் அவைகளுக்கு வாடாத வட அமெரிக்கா போல.மொத்தமாய் சொன்னால் ஒரு ட்ராபிகல் (வருட முழுதும் சமதட்பவெப்பமுடைய) நாட்டுக்கு செல்வதுதான் இவைகளின் ஆசை. ஆனால் பாதி வழியே பல ஆயிரக்கணக்கான பறவைகளில் பல ஆயிரங்கள் இறந்து விடுகின்றன்.
    இந்த படத்திலே பல விதங்களில் இப்பறவைகள் இறப்பதை பார்க்க முடிந்தது. ஒன்று தனது ஒரு சிறகு அடிபட்டு தவிக்கிறது. ஒரு நல்ல சிறகை கொண்டு பறக்க சில நிமிடங்களாக முயல்கிறது.இருப்பதோ கடற்கரை. ஒரு பெரிய கொடுக்கை கொண்டை நண்டு ஒன்று துரத்துகிறது. அந்த தலைவன் நண்டின் தைரியத்தில் பல நண்டுகள் பின்னாடியே படையெடுத்து வருகின்றன. பறவையோ தத்தித் தத்திக் கடலருகே வந்துவிட்டது. என்ன ஆனது? வேறென்ன!  தேனிக்கள் தேன் பத்தையை மொய்ப்பது போல் ஒரு 50 ஜதை கொடுக்குகள் அந்த மிகமெல்லிய பறவை மீது தனது பலத்தை பரி§சோதித்துவிட்டு மெதுவாய் நகர்கின்றன.

இன்னொரு பறவைகூட்டம் ,லேசாய் இறைக்கைகளுக்கு ஓய்வு கொடுப்பதாய் ஒரு ஆலையின் மீது இறங்குகிறது. அந்த ஆலையில் ஏதோ ஒரு பெரிய தொட்டி நிறைய களிம்பு போல் உள்ளது. அதில் இறங்கிய பறவைக்கூட்டத்தில் ஒன்றின் இறக்கை லேசாய் ஒட்டிக்கொள்கிறது. களிம்பின் தன்மையால் பறவை மெல்ல மெல்ல அமிழ ஆரம்பிக்கிறது. உடனே உஷாராய் தனது இன்னொரு இறக்கையை கொண்டு பறக்க எத்தனிக்கிறது. இல்லை லாபம். மெதுவாய் அமிழ்ந்து சாகிறது. இந்தப் பறவை லேசாய் இறக்கையை படபடவென சத்தம் கொடுக்க ஆரம்பித்தவுடன் அருகே இறங்கிய அத்தை பறவைகளும் உடனடியாக பறந்து செல்கின்றன. விதி களிம்பு ரூபத்தில் அப்பறவையோடு உறவாடுகிறது.

இன்னொரு பறவை,கூஸ் வகை,காய்ந்து எலும்புக்கூடாய் கட்ற்கரை ஓரத்தில். கேட்க நாதியில்லை, அனாதைப் பிணம் போல.

   கூஸ் என்ற பறவை சாதாரணமாய் சாம்பல் நிறமுடையதாய் உள்ளது. கழுத்து அத்தனை நீளமில்லை. கால்கள் கொஞசம் பலமானவை. இறைக்கைகளை சற்றே வேகமாய் 'டக் டக்' எனச் சொல்லும் நேர வேகத்தில் அசைத்து பறக்கிறது. இவைகள் ஒரு 20 பறவைகளாக கடலின் மேல் ப்றக்கிண்றன.ஆம்! கடலின் மேல் என்றால் கடலின் மேல்தான். முன்னால் பின்னால் வல இடப்புறமெங்கும் கடல். கரைகள் வரும் வரை இறைக்கை இளைப்பற்றுவதில்லை இவைகள். ஆனால் சில நேரங்களில் லேசாய் இறைக்கைகளை அசைக்காமல் ஓய்வெடுத்துக் கொள்கின்றன. அவற்றைப் பார்த்தால் நமக்குதான் பயம் வருகிறது. இத்தனை தூரம் பறக்க வேண்டுமே என்று. சிகப்பு மார்புடைய கூஸ்கள்
கிழக்கு ஐரோப்பா மீது பறந்து எங்கோ செல்கின்றன. எங்கே? :)  ஐரொப்பாவில் சில நாட்கள்,விருப்பப்பட்டால் ஓய்வு இல்லையேல் அதுவுமில்லை. இவைகளின் கூட்டத்தில் சில குமாரப்பருவ பறவைகள். இவைகள் தங்களின் பெரியோர்களுடனே பறந்து வழிகளை நினைவு வைத்துக் கொள்கின்றன. எங்கே ஓய்விடம் , டீக்கடை, காலை உணவு என்ற சங்கதிகளையும்.ஆண்டுக்கு இருமுறை இவ்வாறு கண்டப் பிரயானம் செய்வதாய் சொன்னார்கள்.

பெலிகன்கள்: இவற்றுக்கு மெல்லிய கால்கள். தாடை அருகே துணி போன்ற மிகப்பெரும் பை அமைப்பு உள்ளது. ஒரு 6 அங்குல மீனை அப்படியே லபக்'கென்று உள்ளே தள்ளுகின்றன. நம்மால் ஒரு முழு இட்லியைக்கூட முழுங்க முடியவில்லை. இவைகளின் ஜீரணம் மிகவும் உறுதியான அமைப்புடையதாய் இருக்கவேண்டும். பாதி குற்றுயிரும் குலை உயிருமாய் உள்ளே போகும் மீனுக்கு உள்ளேதான் பால் ,3ம் நாள் , 10 நாள் , கருமாதி எல்லாமே. இவைகள் கொஞ்சம் மெதுவாகவே இறைக்கைகளை அசைகின்றன. கிட்டதட்ட ' சலக்கு சலக்கு ' என்பது போல. பறக்கும்போது தனது நீண்ட கழுத்தை ஒரு மடிப்பாய் கீழே தொங்கவிடுகின்றன. சில சமயங்களில்,தண்ணீருக்கு ஒரு 2 அடி மேலே பறக்கின்றன. இவற்றில் ஒருவகை கிளிமூக்கு பெலிகன்கள் உள்ளன.வெள்ளை நிற உடல் கொண்டவை. மூக்கு கிளியைப் போல் வளைந்து உள்ளது. இன்னொரு வகை பெலிகன்களுக்கு
கழுத்து மெல்லியதாய் நீளமாய் பார்க்க பாம்பு போல் உள்ளது. இந்த நீளக் கழுத்தை, தன் அலகில் குத்திய மீன்களை தூக்கி யெறிந்து கேட்ச் பிடித்து வாய்க்கு உள்ளே தள்ளுகின்றன.

 

பென்குவின்கள்: ஒரு குட்டி பென்குவின் கரையின் மேல் ஏற 1 நிமிடத்துக்கும் மேல் முயற்சி செய்தது.பென்குவினில் எதோ ஒரு மென்மை இருக்கத்தான் செய்கிறது. முதுகு முழுக்க ஒரு நீலக்கலரு ஜிங்குச்சா.கழுத்துக்கு அடிபாகத்தில் ஒரு மஞ்சள் நிறம். மாலை போல. லைனக்ஸ் பொம்மையில் பார்ப்பீர்களே அதுவேதான். தனது இரண்டு கால்களிலும் முட்டையைப் பிடித்து நோட்டம் பார்க்கிறது. முட்டை,  இரண்டு கைகளின் இரட்டை விரல்களை இரட்டை இலைசின்னம் போல செய்து ஒரு கைக்குள் ஒன்றை பொருத்தினால் எப்படி இருக்குமோ அப்படிதான் குழ்ஞிகளுக்கு உணவு ஊட்டுகிறது.
கும்பலாய் கிளம்பி குளிக்க போகின்றன. பேசிகொண்டேதான். குட்டியார் தூங்கிவிட்டார் போல. ஒரு  பென்குவின் தனியே நடக்கும்போது பார்த்தால் அதன் உடலசைவு ஒரு அமெட்சூர் பண்ணையார் போல் உள்ளது. இறைக்கையை பக்கத்தில் சேட்டை செய்யும் இன்னொன்றை அடிக்க மிக வசதியாய் பயன்படுத்துகின்றன. பென்குவின்களுக்கு நடுவில் ஒரு சீல் ஒன்று ரொம்ப நெருங்கிய சொந்தக்காரர் போல ஊர்ந்து போனது.

படத்தின் முடிவில் ஒரு குருவி ஒரே மரத்தில் ஒரு கிளைவிட்டு இன்னொரு கிளைக்கு தாவிச்சென்றது. இரண்டு கிளைக்கும் நடுவிலேதான் அதன் பறக்கும் பயணம். எங்கே விழுந்துவிடுவோமோ என்று பயந்து கொண்டே கிளையை கெட்டியாய் பிடித்திக்கொள்கிறது.  ஆயிரம் மைல்கள் தொடர்ந்து பறக்கும் பெலிகன்களும்,கூஸ்களும் இருக்கின்றன. அது போலவே அரையடிதூரம் பறக்கும் குரிவிகளும், பறக்காத பென்குவின்களும் இருக்கின்றன.

---
பி.கு:இது ஒரு கிறுக்கலே.. அதுவும் ஒரு கிறுக்கினுடையது. :)


Posted at 10:21 pm by karthikramas
Comments (10)  

Monday, May 31, 2004
சு.கி. சிவத்தின் சுக்காரொட்டிப் பேச்சு..

   இன்று காலையில் நண்பனின் வீட்டில் சன் தொலைக்காட்சியில் சு.கி. சிவம் அவர்களின்
ஒரு உரையைக் கேட்க நேரிட்டது.
  
    சுகி சிவத்தின் நண்பர் ஒருவர் தனது திருமணத்துக்கு அழைப்பிதழ் வைத்து அழைக்க 6 மணிநேரம் பயணம் செய்து இவர் வீட்டிற்கு
வந்து "நேரில் அழைத்தாராம்".  சுகி சிவமோ, ஏண் நேரில் வந்து அழைத்தால் தான் திருமணத்துக்கு வருவேனா? தபாலில் அழைத்தால்
வர மாட்டேனா? என்று கேட்டாராம். அதைக் கொஞ்சம் கடுமையாகச் சொன்னாராம் அழைத்த நண்பரிடம்.

  அந்த க்ஷணத்தில் சுகி சிவத்தின் ஒளிவட்டத்தில் பிறந்த கருத்துதான், இனியாரும் நேரில் சென்று அழைப்பது நேரவிரயம் என்பது.
நேரம் பொன்போன்றது என்ற பழைய குருடி கருத்தை பிரதிபலிக்க, தனது ஒளிவட்டத்தில் பிறந்த ,"நேரில் அழைப்பது பாவம், மேலும் நேரவிரயம்" என்ற கருத்தை சன் தொலைக்காட்ட்சியில்  காலையில் வேலைமெனக்கெட்டு ஒரு அரைமணிநேரத்தை செலவு செய்து
நேயர்களுக்கு சொல்லிக்கொடுத்தார்.

  இந்த மாதிரி அரைவேக்காடுகளை அறிஞராய் காட்டும் சன் தொலைக்காட்சியை என்ன செய்வது?
பேரறிஞர் சுகி சிவத்துக்கு சில கேள்விகள்!  அவரது நண்பர் 6 மணி நேரம் பயணம் செய்து வந்தார் என்றால் என்ன பொருள்? நேரவிரயம் செய்கிறார் என்றா?  அவர் சுகி சிவத்தின் வீட்டில் தங்கியிருக்க வில்லை என்று பொருள். அல்லது சுகிசிவத்தை அடிக்கடி சந்திக்க வாய்ப்பு கிடைக்காதவர் என்று பொருள்.  எனவே தனது வாழ்வின் மிக முக்கியமான திருமணத்தைச் சாக்காக கொண்டு தந்து அன்புக்கு
பாத்திரமானவரை சந்திக்க வருகிறார் என்று பொருள். எல்லாவற்றுக்கும் மேலாக , தமிழ் நாட்டில் "நேரில் அழைத்தல்தான் கெளரவம்" என்ற கோட்பாட்டை மனதில் கொண்டு, சுகி சிவம் தனது திருமணத்துக்கு வந்துவிடுவார் என்று நிச்சயித்துக் கொள்கிறார் என்று பொருள்.
  சுகி சிவம் தனது வீட்டுத் திருமணங்களுக்கு யாரையுமே நேரில் சென்று அழைக்காதவரா? குறைந்த பட்சம் இனிமேலாவது அப்படி செய்ய தயாராய் இருக்கிறாரா?

  நேரில் வந்து அழைக்கவில்லை , அதனால் போகவில்லை வேறு எத்தனையோ  திருமணங்களைப் பற்றி சுகிசிவம் கேள்விப்பட்டிருப்பாரே, அந் நிலை தமிழ்நாட்டில் இருக்க இவரது நண்பரா காரணம்? தமிழ் நாட்டில் இருக்கும் எத்தனையோ நடைமுறைகளில் இதுவும் ஒன்று.அதற்கு சுகி சிவத்தின் நண்பர் என்ன செய்வார்? அவர் வெறுமனே அதை பின்பற்றுகிறார் அவ்வளவுதான். அதைவிட
சுகி சிவத்தை தனது திருமணத்தில் நிச்சயமாய் பார்த்துவிடவேண்டும் என்று உறுதி படுத்தி கொள்கிறார்.
 
  சந்தோஷத்தை தொலைத்த மனித வாழ்வில், இது மாதிரியான சந்தர்ப்பங்களில் மனிதன் தனது இனபத்தை சக மனிதனிடம் பகிர்ந்துகொள்கிறான். அதை பெரிது படுத்த மிகவும் விழைகிறான். உங்கள் நண்பரைக் கேட்டுப் பாருங்கள் , அவர் தனது 6 மணிநேரப் பயணம்
தொல்லையானது என்றோ , அலுப்பூட்டியது என்றோ யாரிடமும் சொல்லமாட்டார். மாறாக உங்களை சந்தித்த சந்தோஷத்தை
எண்ணிக்கொண்டு தனது அலுப்பை மறந்திருப்பார். அது ஒருவகையில் அவரே அவருக்கு தெரியாமல் உங்களுக்கு செய்யும் தியாகம்.
அவருக்கு நேரவிரய உபதேசம் செய்ய உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. உங்கள் நண்பருடன் உங்களுடைய நட்பு அப்படியில்லை எனினும் எனக்கு இருக்கிறது அது போன்ற ஏகப்பட்ட நட்பு.


   இந்த அரைவேக்காட்டின் நண்பர் ஒருவர் சொன்னது. அவரது நண்பர் தனக்கு ஏன் அழைப்பிதழ் வைக்கவில்லை என்று கேட்டாரம்,
அதுக்கு அந்த அரைவேக்காடு, "தீபாவளி , பொங்கல் எல்லாம் சொல்லிவிட்டா கொண்டாடுகிறோம்? " என்று பதில் சொன்னதாம்.
அதை இந்த அரைவேக்காடு சுகி சிவம், "எத்தனை உயர்ந்த சிந்தனை என்று பாரட்டியது"?
நீங்களே  உங்கள் வசதிப் போல திட்டிக்கொள்ளுங்கள்.அந்த நண்பர் நடத்திய திருமணத்துக்கு வேறு யாருமே வரவில்லையா? அய்யர் கூடவா? சுகிசிவம் போனாரா இல்லையா? :-)
  


  இனிமேல் யாரும் நேரில் சென்று அழைப்பிதழ் வைக்காமல் , நேரத்தை விரயம் செய்யாமல் உழைத்தால் இருந்தால், இந்தியா 2020-ல் வல்லரசாகிவிடும் என்று ஒரு முடிவான அறிவுரை வேறு.   யோவ் வருதுய்யா வாயில அசிங்கமாய்!
நீ இனிமேல் சன் நேயர்களின் நேரத்தை விரயம் செய்யாமல் இருந்தால் கூட இந்தியா 2020 -ல் வல்லரசாய் ஆகிவிடும்தான், வேலையை விட்டு போய்விடுகிறாயா?


---------
  இந்த அரைவேக்காடு, இன்னொரு அரைவேக்காட்டை வேறு புகழ்கிறது. எதோ திருக்குறள் முனுசாமியாம் அதன் பெயர்.
எங்கோ இரண்டும் ஒரு இடத்தில் பேச்சாற்ற போயிருந்ததாம். ஞாயிற்றுக் கிழமையாம், நள்ளிரவு 12 மணிக்கு கூட்டம் அதிகமிருந்ததாம்.
இந்த அரைவேக்காடு அந்த அரைவேக்காட்டைப் பார்த்து "ஏன் கூட்டம்?" என்று கேட்க, அந்த அரைவேக்காடு "எல்லாம் அன்எம்ப்ளாயிடு"அல்லது "வேலை வெட்டியத்தவனுங்க நாளை மறுநாள் வேலை போகவேண்டும் என்ற எண்ணமோ அவசியமோ இல்லாதவர்கள்" என்று பதில் சொல்லியதாம்.

  எத்தனை கொழுப்பு பாருங்கள்? இவர்களை மதித்து இலக்கிய கூட்டம் கேட்க வருபவர்களை இதுகள் மதிக்கும் லட்சணம்.
ஒருவேளை இதுகள் பேச்சைக் கேட்பது எத்தனை முட்டாள்தனம் என்று இதுகளே சொல்லுதுகள் போல. :-)

   தனது பேச்சைக் கேட்க வந்திருப்பவர்களின் உணர்வைக் கூட புரிந்து கொள்ளமுடியாத ஜென்மங்கள் , திருக்குறளுக்கு விளக்கம் வேறு செய்கிறதுகள்.  திருக்குறள் முனுசாமி தனது பெயரை திருக்குறள் முட்டாள்சாமி என்று வைத்துக் கொண்டால் மிகப் பொருத்தமாய் இருக்கும்.அதை கேட்க தமிழகத்தில் ஆட்களும் உள்ளது. இந்த மாதிரி அரைவேக்காடுகள் பேசுவதை சன் தொலைக்காட்சி தவிர்த்தால் மக்கள் அதிக பயன் பெறுவர்.

--
யாராவது சுகி சிவத்தின் அஞ்சல் முகவரி தந்தால் இப்பதிவை அவருக்கு சமர்ப்பணமாய் அனுப்பி வைப்பேன்.


Posted at 10:00 am by karthikramas
Comments (16)  

இன்னுமொரு சூரியநமஸ்காரம்.

 பத்ரியின் தமிழ் Vs செம்மொழி குறித்த பதிவு இது.
 இதற்கு மெய்யப்பனின் தொடர்பதிவு இது.

1. முதலில், தமிழ் பற்றி ஆழ் நிலை உண்மைகள் தமிழர்கள்/தமிழ் நாட்டில் உள்ளவர்க(தெலுங்கர்,கன்னடர்,பிற மாநிலத்தவர்)
   அனைவருக்கும் தெரிவிக்கப்படவேண்டும். இது வரலாறு சார்ந்து மிகவும் முக்கியமான செயல்பாடு.உதாரணமாய் தமிழின் பழம் இலக்கியங்களின் கால வரலாறு தமிழ்நாட்டில் ஒரு கல்லூரி மாணவனுக்குகூட சராசரியாய் தெரிந்திரிக்க வில்லை என்று எளிதில் சொல்லிவிடமுடியும். இது மொழிசார் தொழில்சார் கல்வி  நமக்கு அந்நியப்பட்டதின் விளைவு. அந்நியமாக்கப்பட்டது என்ற உண்மைகள் தெரியவரலாம், தமிழக அரசியலை கிளறிப்பார்த்தால்.

2. செம்மொழி ஆக அங்கீகரிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை திராவிடக் கட்சிகளின் பம்மாத்தாக இருந்தால் கூட இருந்தாலும்,
 தமிழுக்கு அதனால் பலன்கள் உண்டு (தமிழ் குறித்த ஆய்வுகள், மத்திய அரசில் தமிழின் அங்கீகார நிலை) என்பதினால்,
இந்த கோரிக்கை தமிழர்கள்/ மொழியியல் தெரிந்தவர்கள் வரவேற்க வேண்டிய ஒன்றே என நான் கருதுகிறேன்

3. இதனால் நடைமுறையில் என்ன லாபம் என்ற கேள்வி சரியான கேள்வியாய் இருக்கமுடியாது. ஏனெனில் எந்த ஒரு மொழியின் பயனும் நடைமுறைதளத்தில் இருப்பதைவிட ஒரு அறிவுசார் ,சிந்தனைசார் தளத்தில் தான் அதிகமாய் இருக்கமுடியும்.
அது சிந்தனை சார் தளத்தில் இருந்துதான் அதன் நடைமுறை பயன் தளத்துக்கு நகரும். தமிழ் வழி தொழிற்கல்விக்கு இம்மாதிரியான ஒரு சிந்தனைத்தளம் பின்னிருந்து இயக்குவது மிகவும் அவசியம்.

   இந்த சிந்தனைத் தளத்தில் தமிழ்  போதிய அளவு இல்லாததனால்தான், தமிழ் நாட்டில் ஆங்கிலக்கல்வி மோகிக்கப்படுவதன் பல காரணங்களில் ஒன்றாக சொல்லலாம். எனவே தமிழ்தொழிற்கல்வி வெற்றியடைய,அதற்கு ஒரு பின்இயங்கு சிந்தனைத்தளம் அவசியம். அது
மத்திய அரசால் அங்கீகரிக்கபட்டு இருப்பது, மொழி சார்பு உடைய மாநிலமாகிய அல்லது தமிழை எள்ளும் மனப்போக்குடைய மாநிலமாகிய
தமிழகத்துக்கு மிக அவசியம் என்றே நினைக்கிறேன்.

4.  தமிழின் கால வரலாறு,தொன்மைத்தனமை(பழம் எழுத்து வடிவம்) ஆகியவை வெகு ஜனதளத்துக்கு வரவேண்டியதும் அவசியம்.
இது தமிழர்களின் பெரும்பான்மையான எண்ணமாகிய மட்டப்படுத்தப்பட்ட உணர்வைக் களைய உதவும். அது போன்றஒரு உணர்வு இல்லை என்று மறுத்துவிட முடியாது. உதாரணமாய் கல்லுரிகளில் தமிழ் பட்டம் படித்த மாணவர்கள் கூட "தமிழ்ப் பட்டம் படித்து என்ன பெரிதாய் ஆகிவிட்டது" என்று சொல்வதைப் பார்க்க முடியும். இதை வேலை வாய்ப்புக்கு அப்பாற்ப்பட்டு மனோதத்துவ அளவில் பார்க்கிறேன். மொழி அதனளவில்(எந்த மொழியாகிலும்) அறிவியலுடன் கலக்க ஆயத்தமாய்தான் உள்ளது.அறிவியலும் மொழியின் குறையீடு உள்ள இடங்களில் சமரசம் செய்துகொள்ள ஆயத்தமாய்தான் உள்ளது. மொழியை அறிவியலிடம்கொண்டு செல்பவர்கள்தான் எண்ணிக்கையில் குறைவாய் உள்ளனர்,தமிழைப் பொறுத்தவரை. அப்படி குறைவாய் உள்ளவர்களின்
சட்டைப் பைகளும் அநேகம் நேரம் காலியாய் உள்ளது.

5. மட்டையடியாய் எதிர்க்கலாம் என்றால்,  சமஸ்கிருதம் படிப்பதனால் மட்டும் என்ன பெரிய நடைமுறை லாபம் வந்துவிடப்போகிறது?
இந்த கேள்வி மிகவும் முக்கியமாய் படுகிறது எனக்கு.

    ஏன், அதே கோணத்தில் இந்தியை எடுத்துக் கொள்ளுங்கள், வீதிக்கு வீதி ஒரு பிரச்சார சபா வைத்து, இந்தியை தமிழ்நாட்டில் பின்னாலிருந்து முட்டித்தள்ளவேண்டிய அவசியம் என்ன? மத்திய அரசுடன் தலையீடு என்பது ஒரு சப்பைக் கட்டு வாதம். ஏனெனில் பாராளுமன்றத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு பேசுதல்,எழுதுதல் என்பதற்கு சட்டத்தில் இடமுண்டு.

 சமஸ்கிருதத்துக்கு சப்பைக் கட்டு கட்டுபவர்கள் சீன, சப்பானிய மொழிகள் பெற்ற மிகப்பெரும் கணினித் துறைவளர்ச்சி எப்படி சாத்தியமானது என்ற என் கேள்விக்கு பதில் சொல்லத்தெரியாத கணினி முட்டாள்களாக அல்லது மொழியறிவு முட்டாள்களாக உள்ளனர். :-)  இந்த கருத்தை/கேள்வியை நான் திண்ணையிலும் கேட்டேன், சரியான பதில் கிடைக்கவில்லை. உங்கள் இந்தப் பதிவை,சமஸ்கிருத-தமிழ் பட்டிமன்றமாய் மாற்ற எனக்கு விருப்பமில்லை :-). சம்பந்தமிருப்பதால் மட்டும் சொன்னேன்.

  தமிழ் செம்மொழியாய் ஆக்கப்பட/அங்கீகரிக்கப் படவேண்டும் என்பது, மிகவும் காலம் தாழந்த, ஆனால் அவசியமான,திராவிட கட்சிகளின் சுயசிந்தனையற்ற, ஆனால் மிகவும் வரவேற்கப்படவேண்டியதொரு விசயம்.


Posted at 08:42 am by karthikramas
Comments (1)  

Sunday, May 23, 2004
நெஞ்சு பொறுக்குதில்லையே!! - சோனியா..


நெஞ்சு பொறுக்குதில்லையே!! - சோனியா
----------------------------------
  என்னைப் பொறுத்தவரையில் சோனியாதான் பிரதமராய் வந்திருக்கவேண்டும்.

அவர் வரக்கூடாது என்று சொல்வதற்கான வாதங்களில் எதுவுமே பலமுள்ளதாக அறிவுள்ளதாக இல்லை.

1." அவர் 71 சண்டையின் போது நாட்டை விட்டு சென்று விட்டார்." என்று ஒரு காரணம்.
 செல்லட்டுமே அதனால் என்ன? போர் என்று வந்துவிட்டால் நமது இந்தியர்கள் பிற நாட்டிலிருந்து திரும்பிவரவில்லையா?. போர் என்ற போது வாழ்வா சாவா என்ற பிரச்சினை வரும்போது அப்படி செய்வதுதான் புத்திசாலித்தனம். அவர் என்ன ராணுவ ஜெனரலா? விட்டுப் போய்விட்டார் புறமுதுகு காட்டி என்று சொல்ல?
எல்லாவற்றுக்கும் மேல் , அவர் அன்று பிரதமரா? இல்லை?

2. அவருக்கு அனுபவம் இல்லை. என்கிறது ஒரு வாதம்?
 அட அடா, இந்திய மக்கள் எப்போது கண் விழித்து இப்படி யெல்லாம் யோசிக்க ஆரம்பித்தார்கள். என்ன ஒரு அக்கறை நாட்டின் மீது. இந்த அக்கறை, டெஸ்மா உபயோகித்து முண்டாந்தாரமாய் , வீட்டில் உட்கார்திருந்த போது தான் வந்திவந்திருக்க வேண்டும்.மன்மோகன் முதல் முறை அரசியல் அனுபவமே இல்லாது , நாட்டின் மிக முக்கியமான பதவியான, பொருளாதாரதுறை மந்திரி ஆனாரே? அப்போ எங்கே போச்சு இந்த அறிவு?
அனுபவமில்லாமல், இன்னும் எத்க்னை முதலமைச்சர்கள், சினிமா அனுபவத்தைக் கொண்டு ஆட்சி செய்தபோது எங்கே போச்சு இந்த அக்கறை? கர்ம வீரர் , கர்ம வீரராய் ஆக படிப்பா தேவைப் பட்டது?

3. "அவருக்கு சட்டப்படி குடியுரிமை இல்லை"- என்கிறது ஒருவாதம்.
இதற்கு வெட்கப்பட வேண்டியது, இந்தைய குடியுரிமைச் சட்டமா? அல்லது சோனியாவா?
தூத்தெரி!! இப்படி ஒன்றைச் சொல்ல வெட்கமில்லை, இந்த வழக்கை முறையீட்டுக்கு அனுப்பியவனுக்கு? வாயிடாமே வாயிட்?

அதாவது 1984  லிருந்து ஒருவர், இல்லீகலாய் இந்தியாவில் இருக்கிறார். அவர் தேர்தலில் போட்டியிட்டு, பிரதம மந்திரி பதவிக்கும் வர தயாராகி விட்டார். அது வரை எதுவுமே கேட்காத குடியுரிமைச் சட்டம் திடீரென்று இண்ரு எழுந்து கொண்டுவிட்டது. அவர் பிரதமந்திரியின் துணைவியாராய் இருந்தபோதுகூட தூங்கிக் கொண்டுதான் இருந்தது இந்திய கையாலாகாத குடியுரிமைச் சட்டம்.
போடா, டெஸ்மா போல , இந்திய குடியுரிமைச் சட்டம் வயகரா சாப்பிடவில்லை போலும்.

 அவர் 2 குடியுரிமை வைத்திருக்கிறார்(***திருத்தம்****, சோனியாவிடம் இரண்டு குடியுரிமை இல்லை. ). இருக்கட்டுமே? இது எந்த விதத்தில் பிரதம மந்திரி பதவியில் வேலை செய்வதை பாதிக்கும்? இதுவரை அப்படி இல்லை , அதனால் இப்போது செய்யக்கூடாது என்பது வாஸ்து பேரைச் சொல்லி ஏமாத்துபவனைவிட கீழ்த்தரமானது.

சோனியா பிரதமராக்கூடாது என்று சொலவ்தில்,
குறுகிய மனப்பான்மைதான் தெரிகிறது. நாடுகளின் எல்லைகளைக் கடந்து யோசிக்கத்தெரியாத, பல கோடி முண்டங்கள் அளித்த ஒட்டுகளைக் கொண்டு பிரதமராவதைவிட பிச்சை எடுப்பது பரவாயில்லைதான்.
எதோ அவர் ராணுவ ரகசியங்களை விற்றுவிடுவார் என்று சொன்னால், கேட்க கொஞசம் நல்லாவாவது இருக்கும். மிகவும் கீழ்த்தரமாண உணர்வுக்ளால் ஆட்கொள்ளப்பட்ட மனிதர்களிடையே நடக்கும் அரசியலுக்கு இதைவிட ஒரி சிறந்த உTகாரணம் இருக்க முடியாது.   இந்த முடிவு குறித்து பின்னால் சோனியா வருத்தப்படுவார் என்று நினைக்கையில் எனக்கு இப்போதே வருத்தம் ஏற்படுகிறது.

 
வாழ்க (வெட்கங்கெட்ட)இந்திய ஜனநாயகம்....

 


Posted at 01:19 am by karthikramas
Comments (8)  

திண்ணையின் நீலகண்டனின்..

ஆனந்தன் , 
 நன்றி இந்த கட்டுரைக்கு. திண்ணையின் நீலகண்டனின் கட்டுரையைப் படித்து கொஞசம் ரத்தக் கொதிப்பு வந்து அடங்கியது.

தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டு, அப்படியே குமரி மாவட்டத்தை எடுத்துக் கொள்வோம். இதற்கு ஒரு குண்டி சிரிப்பு தகும்.
தனது  ஒவ்வொரு கட்டுரையிலும், ஹிந்து என்று 4 தடவையாவது எழுதவில்லை என்றால் மனிதர் கான்ஸ்டிபேஷனில் கஷ்டப்படுவார் போல இருக்கு. 

அ.நீ://ஹிந்துக்களை தீவைத்து எரித்தவர்களுக்கு எதிராக அரசு தொடர்ந்த வழக்கு வலுவின்மையால் தள்ளூபடி செய்யப்பட்ட போது எந்த தன்னார்வ அமைப்பும் அதை உச்சநீதிமன்றத்திற்கு எடுத்துச்செல்லவில்லை. ////உண்மையில் குஜராத் கலவரங்கள் என்னதான் மதச்சார்பற்றவாதிகள் கூக்குரலிட்டாலும் அவை கலவரங்கள்தான். சமபலமற்ற நிலையில் நடந்த கலவரங்கள் என்று வேண்டுமானால் கூறலாம்.//
//

நீலகண்டனின்  இந்த வரிகள், அவரது ரத்தத்தில் ஊறியிருக்கும், இந்து வெறியை தெளிவாய் காண்பிக்கின்றன.
என்ன ஒரு திமிர்? என்ன ஒரு நளினம். சம நிலையின்றி எழுத.இதை படித்தவுடன், நீங்கள் எழுதுபது எத்தனி நாகரரீகமான எழுத்து என்பது தெரிகிறது.

பிராவோ, அறிஞரே, உமக்கு ஏற்ற இடம் திண்ணைதான்.


Posted at 12:18 am by karthikramas
Comments (2)  

Friday, May 21, 2004
வெங்கட சாமிநாதனின் கட்டுரை குறித்து..

வெங்கட சாமிநாதனின் கட்டுரை குறித்து,
நிறைய எழுத இருந்தாலும் , முக்கிய சில கேள்விகளை மட்டும் கேட்கிறேன்.
 வெ.சா.  //ஆக, படிப்போரை, ஆண்களை, சமூகத்தை இவ்வாறு எழுதித் திடுக்கிட்டு ஆடவைத்து விடவேண்டும் என்று நினைத்துச் செய்த காரியத்தில் அவ்வாறு திடுக்கிட வைக்கும் வார்த்தையைப் பயன்படுத்துவதில் அவர்களுக்கே தயக்கம் நிறைய இருந்திருக்கிறது.//


  இந்த தயக்கத்துக்கும் காரணம் ஆணாதிக்க சமுதாயமே என்று நான் சொன்னால் மறுக்கமுடியுமா?
பெண்களை சில வார்த்தைகளை புழங்க  முடியாதபடிக்கு ஆளாக்கியதில் ஆண்களுக்கு பங்கு இல்லையா என்ன? கிராமங்களில் சர்வ சாதாரணமாய் இத்தகைய வார்த்தைகள் பெண்களால் உபயோகிக்கப்டுகின்றன. அங்கு ஆணதிக்கம் இந்த மொழிக்கட்டுப்பாட்டில் அதிக கவனம் செலுத்தவில்லை போலும்.

 வெ.சா.// இங்கே கூட சம்பந்தப்பட்ட கவிஞர்கள் யோனி என்ற, புழக்கத்தில் இல்லாத, தமிழ் அல்லாத வார்த்தையைத்தான் வýந்து எழுதியிருக்கிறார்களே தவிர அதற்கான தமிழ் வார்த்தையை, ஒரு தரப்பட்ட சமூகத்தில் மாத்திரமே புழக்கத்தில் உள்ள வசையான, ஆனால், எல்லாத் தமிழரும் அறிந்த வார்த்தையைப் பயன்ப டுத்தவில்லை. தெரிந்தே பலத்த யோசனையின் பிறகே என்பதில் எனக்குச் சந்தேக மில்லை.//

 புழக்கமில்லாதது அதனால் எழுதப்படக்கூடாது என்பது ஒரு கியானத்தனமான வாதம்.  இந்த வார்த்தைக்கு அதாவது "யோனி" ("யோனி" எனக்கு மிகப் பழம் வார்த்தை,புழக்கத்தில் உள்ள வார்த்தை)
இப்பொழுதிலிருந்து இந்த கவிதாயினிகாளாலேயே புழக்கத்துக்கு வர ஆரம்பிக்கட்டுமே? யாருக்கு நட்டம்?
வெங்கட சாமிநாதன் இப்பொழுது செய்வது போலவே தான் ,பல வார்த்தைகளை பெண்கள் புழங்கவிடாமல் செய்து உள்ளது சமூகம். அதில் ஆண்கள் உள்ளனர் என்பதை மறைக்க முடியாது.
புழக்கத்துக்கு ஆரம்பம் இன்று இருக்கக்கூடாது என்று சொல்வதற்கு இவர் யார்?
சமஸ்கிருதத்தில் இருந்து வேறு எத்தனிஅயோ வார்த்தைகளைப் பெற்ற தமிழ் இதையும் பெற்றுக் கொள்ளட்டுமே?
நம் புழக்கம் என்ன எல்லா சமஸ்கிருத வார்த்தைகளையும நீக்கப்பட்டதாகவா உள்ளது?


Posted at 10:52 am by karthikramas
Comments (2)  

Thursday, May 20, 2004
தண்ணீர் தண்ணீர்தான்

வரி வரியாய் சரிப்பார்க்கும்
தென்றலுக்கு.
லேசாய் தலையாட்டும்
பச்சிளம் பயிர்
இது என் வேலைஅன்று
என்று கூவிகொண்டே வேரில்
பாயும் உயிர்த் தண்ணீர்

வெள்ளிச்சொம்பு
உள்ளே
புத்தம்புதிதாய்
செத்த எறும்பு
சொம்பின் அடியில்
சூரியன் சிறைபட்டுளான்.
சூரியனை சிறைபிடித்ததில்
களியாட்டம் ஆடும்
னதியைப் பிரிந்த
குவளைத்தண்ணீர்

என் மவுனம் ஆழத்தைவிட
பெரிதென்பதாயும்
அலைகோஷமெல்லாம்
அற்ப ஒலியென்றும்
சர்வகணமும் உறங்கும்
நீலத்தைக் காட்டி
உப்பை மறைக்கும்
மாகடலின் தண்ணீர்

உள்ளே புழுக்கமென
வெளியே காற்றாடிக் கொள்ள
விரைந்து என் குவளையில் விழும்
சூடு இயந்திரத் தண்ணீர்

தண்ணீர் தண்ணீர்தான்
இங்கும் எங்கும்.


Posted at 10:15 am by karthikramas
Comments (5)  

Wednesday, May 19, 2004
நண்பர் அருணின் கட்டுரை குறித்து.. (தொடர்ச்

இன்றும் மனித நேயம் மரத்துப் போன பிராமணர்கள் சிலரும் இருக்கலாம், அவர்களை எல்லாம் தனிப்பட்ட முறையில் கேள்வி எழுப்புவதை யாரும் தடுக்கப்போவதில்லை. ஏனென்றால், அவர்கள் எண்ணிக்கையில் சொற்பமாகத் தானிருப்பார்கள். எல்லா சமுதாயத்திலும் நல்லவர்கள் இருக்கிறார்கள், தமிழ் ஆர்வலர்கள் இருக்கிறார்கள், தமிழில் தொண்டு புரிந்தவர்கள் இருக்கிறார்கள். பிராமண சமுதாயத்திலும் கண்டிப்பாய் மேற்கூறியவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். பிராமணர்களை இழிவு செய்வதும், கண்மூடித்தனமாகக் கண்டிப்பதும் கைத்தட்டல்கள் பெறுவதற்கும், கவனத்தை ஈர்ப்பதற்குமே ஒழிய...உண்மையில் அந்தக் கண்மூடித்தனங்கள் பெரும்பான்மையான பிராமணர்களிடத்தில் பல காலங்களாக இல்லை, அது தான் உண்மை! அந்தத் தவறுகள் மறைவதற்கும், அழிவதற்கும், அடக்கப்பட்டதற்கும், பெரியாரெல்லாம் தோன்றுவதற்கு முன்னால், பல பிராமணர்களே காரணமாய் இருந்திருக்கிறார்கள் என்பதும் உண்மை.

திண்ணியத்தில் நடந்த கொடுமையோ அல்லது சுடச்சுட தற்போது வெளிவந்திருக்கும் தலித் மீதான தாக்குதல்களோ தற்கால பிராமண சமுதாயத்திலிருந்து சத்தியமாய் செய்யப்பட்டதில்லை என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. சாதிக்கு எதிராகக் கேள்வி எழுப்புபவர்களும், கண்டனக் கணைகளைத் தொடுப்பவர்களும், தங்களது இலக்குகளை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், அவர்களது இன்றைய இலக்காய்த் திகழ்ந்து வரும் பிராமணர்களுக்கு, வில் வைத்திருப்பவர்கள் சுட்டும் விஷயத்தில் நம்பிக்கையோ ஆர்வமோ இல்லை.

> தங்கள் இலக்குகளை மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொன்ன ஆசிரியர், தலித்திய தாக்குதல்களை களைய பிராமணர்களையும் அழைத்திருந்தால் இன்னும் நியாயமான் தொனி ஒலித்திருக்கும். ஏன் அவர்களுக்கு அந்த பொறுப்பு இல்லையா என்ன? பிராமணப் பெண்களுக்§இப்பொழுதுதான் காயத்ரி மந்திரம் கிடைத்துள்ளது. அந்த பொறுப்பு வர இன்னும் சில காலம் ஆகுமோ? பொறுத்திருந்து பார்ப்போம்.

 


Posted at 09:33 pm by karthikramas
Comments (11)  

Next Page