<< April 2004 >>
Sun Mon Tue Wed Thu Fri Sat
 01 02 03
04 05 06 07 08 09 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30


If you want to be updated on this weblog Enter your email here:



rss feed



Thursday, May 13, 2004
சுந்தரவடிவேலரே..

ஐயோ சு.வ.
 அதை ஏன் கேக்குறீங்க....  இந்த வலைப்பூவ ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சாங்க(னம்ம உஷாரா அவங்கள திட்டிடனும் அவங்க நம்மள திட்டறதுக்கு முன்னால :) )... படா பேஜாரா பூட்சுபா.. நான் கூட இந்தப் பக்கம் வரமாட்டேன், ஒரு மாசம் வேலை நிறைய இருக்கு; லீவு குடுங்கன்னு கேட்டு, டமில் ப்ளாக்ஸ் க்ரூப்பில அறிக்கையெல்லாம் விட்டேன்.  24 மணினேரம் கூட தாங்கல. கை அரிப்புதான் மிச்சம்.இவனுக்கெல்லாம் வேற பொழப்பே கிடையாதா ? அப்படின்னு எல்லோரும் ஒரு மாதிரியா பாக்க ஆரம்பிச்சுட்டாங்க.. என்னத்த சொல்ல. ..இப்ப எல்லாம் ப்ளாக் கூட அதிகம் எழுதறது இல்ல. கமெண்ட்டு எழுதறதுக்கே டைம் பத்தமாட்டேங்குது... இதுல் சில பேர்கிட்ட எதிர்வினை எழுதுறன்னு வேற வாய குடுத்து வம்ப விலைக்கு வாங்குறது..உருப்புட்டா மாதிரிதான்...நானு... ம் :-)

Posted at 08:17 pm by karthikramas
Comments (4)  

Sunday, May 09, 2004
கவிதை எழுதுவதென்பது...

கவிதை எழுதுவதென்பது நிலவை எக்கிப் பிடித்து
   பிஞ்சுக் குழந்தையின் கைக்குள் அவசரமாய் சேர்ப்பதுவாம்
கவிதை எழுதுவதென்பது சில நேரங்களில் குழந்தைக்கு
   குழந்தையாகி நிலவை தரேன் என்று அடம்பிடித்து அழுதலாம்
கவிதை எழுதுவதென்பது மலருக்குள் இறங்கி வண்ணத்தை பிரித்தெடுத்து சட்டைப் பைக்குள் போட்டுப் பிடரி தெரிக்க ஓடுதலாம்
கவிதை எழுதுவதென்பது பனித்துளி ஒன்றை தலையில்
   சுமந்து திரிந்து குளிரிலே நடுங்கிப் பின் தூர எறிவதாம்


தலீவா இது எப்பிடி கீது ??
இத்த படிச்சீ அத்த மாதிரியே ட்ரை பண்ணது ஹி ஹி ...

தலைப்பு நல்லா கீது...
  சுந்தரவடிவேல் , தங்கமணி யெல்லாம் எழுதுனாங்கன்னா பெயரிலியின் மாதிரியே
உண்மையிலேயே நல்ல கவிதைகள் 2 கிடைக்கும்... அம்புட்டுதேன் சொல்லிபுட்டேன்....


Posted at 08:36 pm by karthikramas
Comments (5)  

Friday, May 07, 2004
ராணுவ அத்துமீறல்கள் -??


எந்த ராணுவமும் நல்ல ராணுவம் அல்ல - No army is good army - என்று சொல்வார்கள். ஆதிக்கம் செலுத்துகிற அல்லது அதிகாரம் கொண்ட ராணுவம் செய்கிற அத்துமீறல்கள், கொடுமைகள் ஆகியவை குறித்துத் தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருப்பது இந்த நிஜத்தை உணர்த்தும். ஈராக் சிறைச்சாலையில் கைதிகள் நடத்தப்பட்ட விதம் குறித்து CBS தொலைகாட்சி தன் 60 Minutes நிகழ்ச்சியில் காட்டிய புகைப்படங்கள் ஈராக்கில் அதிகாரம் செலுத்துகிற அமெரிக்கர்களையும் ஆங்கிலேயர்களையும் மட்டுமின்றி அனைவரையும் அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளன. தவறு செய்த ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. இது ஜனநாயகத்தின் சிறப்பாகும். மேலும் இத்தகைய குற்றங்கள் நிகழாமல் நடவடிக்கைகள் தடுக்குமோ தடுக்காதோ ஆனால் ஜனநாயகத்தில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள், தண்டிக்கப்படுவார்கள் என்பதற்கு உதாரணமாக ராணுவ வீரர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் அமையும்.

 சமீபத்தில் இணையத்தில் நடந்த விவாதங்களின்போது இந்தியாவில் மனித உரிமை மீறப்படவில்லையா என்கிற கேள்வி எழுப்பப்பட்டு அதன் அடிப்படையில் பயங்கரவாதக் குழுக்கள் செய்கிற அத்துமீறல்கள் படுகொலைகள் ஆகியவற்றை விடுதலைக்காக என்கிற நோக்கத்துக்காகப் பொறுத்துக் கொள்ளலாம் என்று "அறிவுபூர்வமான" வாதங்கள் வைக்கப்பட்டன.
>>>
-   இதிலிருந்து நண்பர் பி.கே.எஸ், பயங்கர வாத குழுக்கள் செய்யும் அத்துமீறல்களை ஆதரிக்கவி-ல்லை என்று சொல்கிறார். வரவேற்புக்குரிய கருத்துதான்.
-இதே போல் "வீரன்" வாஞ்சி நாதன் செய்ததையும் அத்து மீறல் என்று சொல்வாரா?? வாஞ்சி நா
-தனை "பயங்கரவாதி"  என்று உரத்து குரல் கொடுப்பாரா?? இந்த நிலைக்கும் அந்த நிலைக்கும் -உள்ள
-வித்தியாசம்தான் என்ன என்று பிரித்து பொருள் தருவாரா??
-பாரதி மாறு வேடம் பூண்டதை கோழைத்தனம் என்று சொல்வாரா?? பாரதி திரைமறைவு வேலை
-செய்த கீழ்த்தரமானவன் என்று சொல்வாரா??
-சுபாஷ் சந்திரபோஸ் அமைத்ததை பயங்கரவாத போராளிக் குழு என்று சொல்வாரா??
- ஏனெனில் அரசு ஆங்கிலேய அரசாய் இருந்தபோது, அரசுக்கு எதிரான ஆயுதம் தாங்கிய குழு தா-னே சந்திரபோஸினுடையது!!
>>>>>>>>
இலங்கையில் இந்திய அமைதிகாக்கும் படை அட்டூழியங்கள் செய்யவில்லையா என்றும் கேள்வி எழுப்பப் பட்டது. குஜராத்தில் நடந்தது தெரியாதா என்றும் கேட்டார்கள். எந்த நாட்டின் அரசாங்கமும் ராணுவமும் செய்கிற அட்டூழியங்களைப் பத்திரிகைகள் தைரியமாக அம்பலப்படுத்த இயலும்.
>>>>>>>>

 பத்திரிகைகள் அம்பலத்த முடியாத குற்றங்கள் நடக்கவில்லை என்று சொல்ல வருகிறாரா?
--Classifeid informations -ஐ எப்படி வகுக்கிறார்??
--உளவுத்துறை ஊழல்களை கணக்கில் கொண்டாரா?
>>>>>
   பாதிக்கப்பட்டவர்களும் நீதி தேடிக் கொள்ளும் வழிகள் உள்ளன. நீதியும் பரிகாரமும் தேட உதவ சட்டங்கள் இருக்கின்றன. உள்ளூர் நீதிமன்றத்திலிருந்து சர்வதேச நீதிமன்றம் வரையும் மிலிட்டிரி டிரிபியூனல்வரையும் பல மார்க்கங்கள் மூலம் நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருக்கிறது.
>>>

-  இதிலிருந்து என்ன சொல்ல வருகிறார்? அரசும் ராணுவமும் என்ன செய்தாலும்  நடவடிக்கை
-எடுக்கலாம்/ எடுக்க முடியும், எனவே  அரசோ / ராணுவமோ / அரசும் ராணுவமும் சேர்ந்தோ
-செய்வதை செய்யட்டும் பின் "நடவடிக்கைகளை" எடுத்துக் கொள்ளலாம் என்றா??

>>>>>>
ஆனால் பின் லேடனோ மற்றும் விடுதலைக்காகக் கஞ்சாவும் போதைப் பொருளூம் கடத்துகிற, தற்¦-காலைப் படைகள் நிறுவி அப்பாவி மனிதரைக் கொல்கிற இயக்கங்களும் செய்கிற அத்துமீறல்களையும் அரசியல் படுகொலைகளையும் எதிர்த்து எந்தக் கேள்வியையும் யாரும் கேட்க இயலாது; எந்த நீதியையும் பெற்றுவிட இயலாது. இதை நம்மில் பலர் அறிந்திருந்தும் அறியாதவர்போல் அபிமானத்தாலோ கட்டாயத்தாலோ கண்மூடித்தனமாகவோ நடிக்கிறோம்.
>>>>>>>>>

-  சரி இதிலிருந்தும் என்ன சொல்ல வருகிறார்? நம்மில் அறிந்தவர்கள் எல்லோரும், விடுதலைக்காகக் கஞ்சாவும் போதைப் பொருளூம் கட-த்துகிற, தற்¦-காலைப் படைகள் நிறுவி அப்பாவி மனிதரைக் கொல்கிற இயக்கங்களை தேடிக் கண்டுபிடிக்க கிளம்பலாம் என்றா?
- இல்லை வீட்டுக்கொரு இளைஞனை பின் லேடனைக் கண்டுபிடிக்க கொடுக்கலாம் என்றா?
>>>
இலங்கையில் இந்திய அமைதி காக்கும்படை அத்துமீறல்களில் ஈடுபட்டிருக்க கூடும் என்பதில் சந்தேகமில்லை. எல்லா ராணுவங்களைப் போலவும் இந்திய ராணுவமும் ராணுவம் தானே. இந்திய அமைதி காக்கும்படையின் அத்துமீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் பரிகாரமும் நிச்சயம் சட்டபூர்வமான வழிகள் மூலம் கிடைக்க வேண்டும். அதற்காக எந்த அளவுக்கு முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்று தெரியவில்லை. ஆனால், அப்படிப்பட்ட அத்துமீறல்கள் நடந்தன என்று அடிக்கடிச் சொல்பவர்கள் - அவை குறித்து ஏதும் சட்டரீதியான புகார்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றனவா, அத்தகைய புகார்கள் என்ன ஆயின என்பதைப் பற்றி ஏதும் சொல்வதில்லை. புகார்கள் கொடுக்கப்பட்டிருந்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லையென்றால், அது கண்டிக்கப்படத்தக்கது.
>>
 ஆனால், புகார்கள் ஏதும் கொடுக்காமல் அல்லது பத்திரிகைகளில் ஆதாரபூர்வமான செய்திகள் வெளிவராமல் வெறுமனே இந்திய அமைதி காக்கும்படை அத்துமீறலில் ஈடுபட்டது என்று சொல்வது அதன் உண்மையை மற்றவர்கள் சந்தேகிக்க வழிவகுத்துவிடக் கூடும்.
>>>
-அடேங்கப்பா!!! மறைக்கவே முடியாத மாபெரும் பூசணிக்காயை ஏன் மறைக்க மல்லு கட்டுகிறார்.
- அமைதிப்படையின் அட்டூழியங்கள் பத்திரிகைகளில் வரவேயில்லை என்கிறாரா? அல்லது
-பத்திரிகைகளில் வந்தால்தான் அவை "நடவடிக்கை" எடுக்கப்படும் அளவுக்கு qualify ஆகும் என்கிறாரா??
-"அது கண்டிக்கப்படத்தக்கது." என்று சொன்னதோடு நிறுத்தியிருக்கலாமே? அமைதிப் படைக்கு வக்காலத்து வாங்க காரணம் என்ன?
-நண்பர் பி கே எஸ் இந்திய ராணுவத்தில் வேலை செய்திருந்தால், அவருக்கு ஒரு சல்யூட்டும், எனது வாதத்தின் அடுத்த தளத்தையும் -சொல்வேன். இப்ப முடீயாதே! :-)
>>>
இதை எழுதியதன் மூலம் இந்திய ராணுவம் புனிதமானது என்று நான் சொல்ல வரவில்லை. எந்த ராணுவமும் செய்த அட்டூழியங்களுக்குப்
பதிலாகக் கூட பயங்கரவாத இயக்கங்களையோ அவற்றின் செயல்பாடுகளையோ விடுதலை என்ற பெயரால் கூட ஆதரிக்க இயலாது என்பதே என் நிலை.
>>>
உதாரணமாக, ராஜீவ் காந்தி கொலை போன்ற ஒரு படுகொலை மேலைநாடுகளில் நிகழ்த்தப்பட்டிருந்தால் - அதற்குக் காரணமான இயக்கம் ராணுவரீதியான பதிலடியால் வேரறுக்கப்பட்டிருக்கும்.
>>>
-இந்திரா அம்மையாரின் படுகொலையின் போது சீக்கியர்கள் வேரருக்கப்பட்டது போலா??
>>
தன்னுடைய குடிமக்கள் பயங்கரவாதத்தால் கொல்லப்பட்டாலே நாடுகள் ராணுவ ரீதியான பதிலடிகள் தருவது வழக்கமாகிப் போய்விட்டன.
>>>
இந்த வழக்கத்தை நண்பர் பி கே எஸ் ஆதரிக்கிறாரே?? ஏன்?? காந்தி மகான் நடத்திய அகிம்சா கூட்டத்தின் மீது தடியடி ஏவிய ஆங்கில அரசின் நடவடிக்கையை ஆதரிப்பாரா??

>>>

இஸ்ரேலும் அமெரிக்காவும் அதைத்தான் செய்கின்றன.
காரணமான இயக்கங்களின் நோக்கங்கள் புனிதமானவையா என்றெல்லாம் யாரும் பார்ப்பதில்லை. விடுதலையை பயங்கரவாத்தின் வழியாகவும் வன்முறை வழியாகவும் யாரும் ஆதரிப்பதில்லை. பாலஸ்தீனத்திலிருந்து, ஆப்கன்கானிஸ்தான், ஈராக் வரை ராணுவ பதிலடிகளையே மக்கள் பார்த்து வருகிறார்கள். சிலநேரங்களில் இவை அவசியமானதாகவும் ஆகிவிடுகிறது.
>>>>
-- அதாவது காந்தி மகானை ஆங்கிலேயர்கள் சுட்டு கொன்றிருக்க வேண்டும் என்கிறாரா??
-- இல்லை அந்த அளவுக்கு ஆங்கிலேயருக்கு அவர் மீது வெறுப்பு இருந்திருக்க வில்லை என்கிறாரா??
>>>

 ஆனால், இலங்கைத் தமிழர்கள் நல்வாழ்வின்பால் இந்தியாவுக்கு இருக்கிற அக்கறையின் காரணத்தினாலும் கூடவே, ராஜீவ் காந்தி படுகொலைக்கு இந்தியா ராணுவ ரீதியான பதிலடி தராமல் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டது என்று அனைவரும் அறிவர். இதுதான் ஜனநாயகத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் உள்ள வித்தியாசம் என்று நான் நம்புகிறேன். ஜனநாயகத்தின் குறைபாடுகளைக் கண்டறிய முடியும்; களைந்து கொள்ள முடியும். பயங்கரவாதமோ தன் குறைபாடுகளை மறைத்துக் கொள்ளவும் குறுகிய நோக்கங்களுக்காகவும் மற்றவரைக் களையெடுக்கும்.
>>>>>>>>>
""ஈராக் சிறையில் வாடுபவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் மனிதாபிமானம் உள்ளவர் செய்யக் கூடியதல்ல.""
"சிலநேரங்களில் இவை அவசியமானதாகவும் ஆகிவிடுகிறது."
- அமெரிக்க ராணுவத்துக்கு , அவர்கள் எதிரிகள்தானே ? "அப்படியிருக்க அவசியமானகவும் ஆகிவிடுகிறது"  லாஜிக் வருகிறது இல்லையா??
-இதன் ஆரம்பம் வெகு நாட்களுக்கு முன்னாலேயே நடக்க ஆரம்பித்து, இத்தனை நாட்கள் கழித்து பத்திரிகைகளில் வருகிறதே??
- இந்த ஈராக் கொடுமைகளை பற்றிய எச்சரிக்கை , எப்பொழுதோ அமெரிக்க அரசுக்கு வந்தது எனபது செய்தி.
-
-ஜனனாயகம் இத்தனை நாள் எவள் மடியில் உறங்கிக் கொண்டிருந்தது?? நண்பர் சொல்வாரா??

>>>>
 அமெரிக்காவும் உலகமும் ஏற்றுக் கொண்டிருக்கிற சட்டங்களின் வழியாக தவறிழைத்தவர்கள் வெளிக்கொணரப்பட்டதும், தண்டிக்கப்படுவார்கள் என்று நம்பப்படுவதுமே ஜனநாயகத்தின் சிறப்பு என்று மேற்கண்ட உதாரணத்தால் என்னால் விளங்கிக் கொள்ள முடிகிறது.
>>>>

-வெளிக்கொணரப்பட வில்லையென்றால்??  எத்தனை பேர் வேண்டுமானாலும் சாகலாம் என்று விளங்கிக் கொள்ளலாமா??
>>>
மேலும் CBS TV இந்நிகழ்ச்சியை ஒளிபரப்புவதற்கு முன்னர் - அது பற்றி அமெரிக்க அரசாங்கத்துக்குத் தெரிவித்ததாகவும் - ஈராக்கில் தற்போது நிகழ்ந்து வரும் கடுமையான சண்டைகளால் - இதைச் சற்றுத் தாமதமாக ஒளிபரப்பும்படி அமெரிக்க அரசாங்கம் கேட்டுக் கொண்டதற்கிணங்க - இருவாரங்கள் தாமதமாக இந்நிகழ்ச்சி ஒளிபரப்பப் பட்டிருக்கிறது என்றும் அறிகிறோம். தன் நாட்டின் ராணுவம் செய்த அத்துமீறல்களையும் கூட ஒளிபரப்ப வேண்டாம் என்று தடுக்கிற அதிகாரம் கையிலிருந்தும் அதைப் பயன்படுத்தாமல் அனுமதித்ததும் ஜனநாயகத்தின் ஓர் அம்சமே. இதையே பின் லேடனும் அல்லது விடுதலைக்காகப் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுகிற பிற இயக்கங்களூம் செய்திருப்பார்களா என்ற கேள்விக்கான பதில் நாமறிந்ததே.
>>>>
-இனி பின் லேடன் தினமும் CBS-ல் தினசரி அப்பாயிண்டுமெண்டுகளை உலகத்துக்கு சொல்லிவிட்டு, வேலை செய்யுமாறு கேட்டுக்கெ--ள்ளப்படுகிறார். 
>>>>
எதற்காக இந்நிகழ்ச்சியை ஒளிபரப்பும் முன் அமெரிக்க அரசாங்கத்திடம் CBS தொலைகாட்சி தகவல் சொல்லியது என்பது என் கேள்வி. இத்தகவல் சொல்லப்பட்டது நாகரீகத்துக்காகவா (Courtesy) அல்லது அப்படி ஏதும் சட்டரீதியான நிர்ப்பந்தம் தொலைகாட்சிகளூக்கு இருக்கிறதா என்றும் தெரியவில்லை.

இந்திய அமைதிகாக்கும் படை செய்த அட்டூழியங்கள் குறித்து வருந்துகிற நண்பர்கள் (வருந்த வேண்டிய விஷயம்தான் அது) - மற்றவர்கள் வருந்துவதில்லை என்று குற்றம் சொல்கிற நண்பர்கள் - ஈராக் கைதிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை எதிர்த்து வலிமையாகக் குரல் கொடுத்து தங்கள் நடுநிலைமையைப் பறை சாற்றுவார்கள் என்று நம்புகிறேன்.

----
  அட்டூழியங்களை வரையறுக்கத் தெரியாதவர்கள் தான் குழம்புகிறார்கள், சிந்திப்பவர்களும், காணச் சகியாதவர்களும் அல்ல.
என் கேள்விகளில் குறைஇருந்தாலோ, மாற்று கருத்து இருந்தாலோ தெரிந்தவர்கள் சொல்லவும் கேட்டுக் கொள்கிறேன்.


Posted at 09:42 pm by karthikramas
Comments (5)  

Thursday, May 06, 2004
பி.கே. சிவகுமாரின் பதிவு ஒன்றில்...

ஐயா எஸ் பொன்னுதுரையின் , சில வரிகள் குறித்து பி.கே. சிவகுமாரின் பதிவு ஒன்றில்
படிக்க நேர்ந்து (எனக்குள் க்ளுக்கென சிரித்து) எழுதியது..

எஸ்.பொ. கேள்விகளூடே பார்க்காதது அல்லது பார்த்துப் பின் மறைத்தது:
==========================================================

எஸ்.பொ://"... அப்போது நான் வாழ்ந்த வாழ்க்கையிலே நான் இந்த ஜாதீய முறைப்படி நான் தாக்கப்படவில்லை. நான் தாக்கப்படாமல் இருக்கக் கூடிய ஒரு நிலையில் நான் தாக்கப்படுகிறேன் என்று சொல்லிக் குரலிடுவது சரியில்லை." //

  எஸ். பொன்னுதுரை இதையே என்னிடம் சொல்லியிருந்தால், "நீ தாக்கப்படாது, நீ தாக்கப்படுகிறாய் என்று குரல் கொடுத்தால் அது சுத்த பொய்யாகும். ஆனால் இந்த கேள்வியின் அர்த்தம், னீ சார்ந்திருக்கும் சமூகத்தில் உள்ள உன்போல் சம மதிப்பீடுகளை கொண்ட மக்கள் தாக்கப்படுகிறார்களே, அதை கண் கொண்டு பார்த்து கருத்தேதும் சொல்லுமையா புண்ணியவானே? இல்லை நான் தாக்கப்படும் வரை பொறுத்திருந்து தான் கருத்து சொல்வேன் என்ற வாதத்தை காதலிக்க காரணம் என்ன ? "  என்று கேட்டிருப்பேன்.

மேலும், "நீ தாக்கப்பட்ட பின், கருத்து சொல்ல இருப்பாய் என்ற நிலைமை இங்கு இல்லையே?, உன்போல் பலர் இல்லாமலாகி இருப்பது தெரிகிறதா? இப்போ புரிகிறதா உனக்கு?" என்றும் கேட்டிருப்பேன்.


எஸ்.பொ://"... என்னுடைய அம்மா அப்பா அனுபவித்தத் துயர்களையாவது நீ எழுதியிருக்கலாம்; ஆனால் நீ அதைக் கூட மறந்துவிட்டாய் என்று சொல்கிறீர்கள்? ஏன் என்மீது அதைத் திணிக்கிறீர்கள்? ஒரு படைப்பாளி என்ற அளவில், will your not give me the freedom to choose what I want to write?"
//

    என்னுடையா அம்மா அப்பா அனுபவித்த துயர்களை நான் எழுத மாட்டேன் என்று சொல்கிறீர்களே ஐயா பொன்னுதுரை?
உங்கள் அம்மா அப்பா அனுபவித்த சொத்துகளை தூர எறிந்து விட்டீர்களா? என்று தெரிந்து கொள்ள ஆசையாய் உள்ளது பொன்னுதுரை அவர்களே? சொத்துகளை தூர எறிந்திருக்கும் சித்த பிரமை உங்களுக்கு இல்லை என்று நான் நம்புவதால் இதையும் கேட்கிறேன்,
உங்கள் படைப்புகளில் அவற்றை எழுத வேண்டியதில்லை, கருத்துகளை எழுதுங்கள் என்பதுதானே அக்கேள்வின் ஊடுபாவி தொக்கல்?
இதை என் படைப்பு சுதந்திரத்தில்  தலையிடாதீர்கள் என்று தவறாய் எடுத்துக் கொண்டு தறி கெட்டுப் பேசினால் என்ன அர்த்தம் அய்யா பொன்னுதுரை அவர்களே?

  இதே நிலைப்பாட்டை அவரது பிள்ளைகள் துயரனுபவித்தாலும் எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

எஸ்.பொ://"... வன்னியிலே நடக்கிற போராட்டத்தை நான் என் படைப்பிலே கொண்டுவரவில்லை. அதிலிருந்து விலகி ஓடிய மனிதன் என்று கூட இப்போது வன்னியில் வாழ்கிற போராளிகளும் எழுத்தாளர்களும் சொல்லலாம். சொல்வது நியாயம். ஆனால், என்னைப் பொறுத்த மட்டில் என் அனுபவத்திற்கு அன்னியமானதை நான் எப்போதும் எழுத மாட்டேன். இதை நான் நெடுகச் சொல்லி வந்திருக்கிறேன்."//

      இப்படிப் பேசிப் போகும் திரு. பொன்னுதுரை அவர்களே! நீங்கள் நிலவை உங்கள் படைப்பில் பேசியதே இல்லை என்று நான் முடிவு செய்து கொள்கிறேன். ஏனெனில் நீங்கள் நிலவை பேச வேண்டுமெனில் அல்லது வர்ணிக்க வேண்டிமெனில் , நிலவுக்கு செல்லாதவரை நான் அது பற்றி எழுத முடியாது என்று சொல்லி விட்டால், உங்களை கேள்வி கேக்க எனக்கு தெரியாது?? ;-).

பிரபல எழுத்தாளர்கள் சறுக்குமிடம் உண்டு என்பதாலேயும், யானைகளும் சறுக்கும் என்பதாலும் இது ஒன்று பெரிதல்ல என்றே நினைக்கிறேன்.

இந்த பதில்களால், எஸ். பொ. என் கண்ணுக்கு, சக மனிதனின் துக்கத்தைப் பார்க்கதெரியாத ஜந்துவாக தெரிவது, அவரது மிகப் பெரிய வெற்றியாக இருக்கலாம். சமுகத்தில் படைப்பாளியின் குரலை, பயன்படுத்தப் பட பல வழிகள் உள்ளன என்றும், அதை அவர் தெரிந்து கொள்ள விழையவில்லை என்றும் வாதாடலாம்.
எஸ். பொ. இந்துத்துவவாதியா? எனக்கு தெரியாது ? தெரிந்தவர்கள் பின்னுட்டத்தில் அடியுங்களேன்.

 


Posted at 07:33 pm by karthikramas
Comments (8)  

Friday, April 30, 2004
குழப்பம் இங்குதான் எனக்கு ஆரம்பம்...

ரமணிதரனின் கொடுத்துவைத்தாரும் அல்லாதாரும் பதிவை வைத்து வடித்தது இது..பிடித்துள்ளதா என ரமணிதான் சொல்ல வேண்டும். ;-)

குழப்பம் இங்குதான் எனக்கு ஆரம்பம்
==============================
நாளை இருப்பேனா அல்ல
தின்றிரவுக்குள் இறப்பேனா

எதிர்காலத்தை தீட்டுவதா
எதிர்காலம் எனைத் தீண்டாது என்றிருப்பதா

சென்றவர் வரும் வரை சென்னியில் அனல் கொதிக்க
வருவாரா? வரமாட்டார் என்ற செய்திவருமா?

ஒரு மணித்தியாலத்தில் இத்தனை
நாசங்கள் நடக்கும் நாட்டினில்
நான் நேசங்களை நினைப்பது நியாயமா?

மறையாதாவனை
மறைந்தேன் எனச் சொல்லி
மன்றாட வைத்தவனை மறப்பதா?
இறைவனை துதிப்பதா?

வீடு விட்டு போன நண்பன்
வீடுலகம் சேர்ந்து விட்டான் என
தேடவும் துணியார் அழுவார் அரற்றுவார்
விடுகதை போல் ஆகிவிட்ட
வாழ்விதனை வாழ்வதா விடுப்பதா?

துப்பாக்கியின் முகத்தினை
முகத்தினுக்கு நேராக
தப்பிக்க வழியின்றி பார்க்கின்ற வேளைதனில்
என் உடம்பினை வாட்டுவது கோபமா? ஆண்மையா?

எங்கிருந்தோ வந்தனர்
இந்தியர் யாம்  உதவவே வந்தோம் என்றனர்
வந்திருந்த தந்தையர் நாட்டர்
குந்தகமே குறியென செய்தனர்
சிந்தின எம் இரத்ததின் நிறம்
வேறென? நினைந்தனர்

எம் விதியை இதனினும்
விதியற்றவரோடு ஒப்பிட்டு
கடவுளுக்கு நன்றி சொல்லும்
கதவு ஒன்றைத்  தவிர
வேறு கதவிலை நாம் புக

எருதின் நோய் காக்கை அறியாதுதான்
இனப்பிரச்சினை அங்குமுண்டோ?
மனிதன் காக்கைகளாய் மாறிவிட்ட
வன்முறையை விட
நாம் பார்க்கும் இனவன்முறை
பெரிதிலையோ?


Posted at 08:31 pm by karthikramas
Comments (5)  

ஒரு சொட்டு வியர்வை...

வருத்தங்களின் அழுத்தத்தால்
வார்த்தைகள் நசுங்கி
குறைந்து விட்ட வேளைகளில்
மீதமிருக்கும் மிச்ச வார்த்தைகளை வைத்துதான்
கவிதைகள் எழுத வேண்டியுள்ளது.
மனிதனால் செய்ய முடியாததை
வார்த்தைகள் செய்துவிடவா போகின்றன?
கவிகளுக்கு அப்படித்தான் போல...

வாழ்வை திரும்பிப் பார்க்கிறேன்
வார்த்தைகள் சிலவும்
வேர்வைகளின் நினைவும்
வருத்தங்களும் மிச்சமுள்ளன..

அழுத்தங்கள் இல்லா
இது போன்ற வேளைகளில் தான்
திரும்பிப் பார்க்ககூட முடிகிறது...


Posted at 07:58 pm by karthikramas
Comments (1)  

Monday, April 26, 2004
அள்ளி விடறது

சுந்தர வடிவேலின் (பரதேசி நாந்தாண்டா ;-)) என்கிற பதிவை படித்தவுடன் இன்ஸ்பிரேஷன் வது எழுதுவது இது.
இந்த போலீசு மாமு கிட்ட மாட்டற அனுபவமே ஒரு வித்தியாசமானதுதான்.
ஒருமுறை விர்ஜினியாவிலிருந்து நியூஜெர்சிக்கு கழுதை வேலை செய்ய வேண்டிய அவசியம் வந்துச்சு. அதாவது ஒருத்தரஓட பொட்டிய சுமந்துகிட்டு போயி  குடுத்துட்டு வரனும். நானும் என்கூட புதிதாக வந்திருந்த ஒரு நண்பனும் போனோம்.
நண்பன் அப்பத்தான் அமெரிக்காவுக்கு வந்த புதுசு.

எனக்கு சாதரணமாவே அமெரிக்காவுக்கு யாராவது புதுசா வந்தா அவங்ககிட்ட "அள்ளி விடறது"(ரீல் சுத்தறது) பழக்கம். அப்பறம் கொஞ்சம் நாள் கழிச்சு அள்ளிவிட்டத சொல்லி சிரிப்போம். என் இன்னொரு நண்பன் அள்ளி விட்ட ஒரு உதாரணத்த சொல்றேன்.
நாசாவில புது ப்ராஜக்ட் ஒன்னு பண்றாங்கடான்னு, ஆரம்பிச்சான். சாட்டலைட் மூலமா,அப்படியே  நம்ம கார் நம்பர் ப்ளேட்ட ஸ்கேன் பண்ணி, சிகப்பு விளக்க தாண்டி போனா, டிக்கட் எழுதி வீட்டுக்கு தபால் பண்ணிட போறாங்க ந்னு சொன்னான்.
இத சொல்லி முடிச்சவுடனே சுத்தி இருந்த அத்தன பேரும் முகத்தில இருந்த அத்தனை ஓட்டைகளையும் திறந்து அவன பார்த்து சிரிச்சது அவனுக்கு இன்னும் ஞாபகம் இருக்கும். அதுக்கப்பறம் அண்ணனை நாங்க ஓட்டுன ஓட்டுல பய அன்னிக்கு ஓடுனவந்தான் இன்னும் திரும்பி வரல.

இந்த மாதிரி நான் அள்ளி விட்ட சில ரீல்கள்.

 புதுசா என்கூட அமெரிக்க வந்தவர் ஒருத்த்ர்கிட்ட, காபியில சர்க்கரைக்கு பதிலா ஒரு கசப்பு சிரப் ஒன்ன ஊத்தி குடுத்தன். நானும் அத ஊத்திதான் குடிச்சேன். அந்த எளவ வாயில வைக்க முடியாம இருந்தாலும், தினமும் நான் அந்த சிரப்ப காலை 3 தரம் சயந்தரம் 3 தரம் குடிக்கிற மாதிரி ஒரு ரியாக்ஷன் முகத்தில காட்டுனன். மனுசனும், நம்ம அமெரிக்காவுக்கு புதுசுன்னு காட்டிக்க கூடாதுன்னு, குடிச்சுபுட்டு, திருவிழாவுல தொலைஞ்ச புள்ள மாதிரி முழிச்சார். ரொம்ப நாள் கழிச்சு, எனக்கு அந்த சிரப்பை குடிச்சு பழக்கமே இல்லன்னு சொன்னேன். அன்னிக்குதான் எனக்கு எதிரியா மாறுனார் அவர்.

 ஒரு அம்மா அமெரிக்காவுக்கு வந்த புதுசுல பனிக் காலம். அந்த அம்மாவுக்கு இள வயசுதான். ஒரு 28 லேர்ந்து 30 இருக்கும்.
அம்மா நல்லா படிச்சவங்க தான். வெளில ரோட்டுல நடந்துக்கிட்டு இருக்கும் போது , ஒரு குதூகலத்துல கிழே விழுந்து கிடந்த ஐசை எல்லாம் கையில எடுத்து விளையாடினாங்க. நான் உடனே, கொட்டுற பனி எல்லாம், கவர்மென்டு சொத்து, னீங்க கையில எடுக்குறத
போலிசு பார்த்தா , உங்கள புடிச்சு கொண்டு போய் ஜெயில வச்சுடுவாங்க அப்டீன்னேன் பாருங்க! அம்மா மட மடன்னு கைஉஇல இருந்த ஐஸ¤ எல்லத்தை கீழே போடுட்டு கப் சிப். அந்த அம்மா முகத்த பாகனுமே அப்ப, ரொம்பதான் ஜாக்கிரதை உணர்வு போங்க. ரொம்ப நாளைக்கு பனிய கையில எடுக்காமதான் இருந்தாங்க, என் கூட இருக்க அனுமார் பயலுங்க போட்டு குடுத்துட்டானுங்க.


அமெரிக்கன் எக்ஸ்ப்ரெஸ் ப்ளூ சிப் க்ரெடிட் கார்டு அறிமுகப்படுத்திய சமயம். இந்த சாட்டலைட்லேர்ந்து போட்டா புடிப்பாங்கன்னு கத விட்டன் பாருங்க, அவன் கிட்டதான் விட்டேன் இந்த புளுகு மூட்டைய.
இப்ப வந்திருக்கிற ப்ளூ சிப் அமெரிக்கன் எக்ஸ்ப்ரெஸ் அட்டையில ஒரு மைக்ரோப்ராஸஸ்ஸர் இருக்குன்னேன். அதை கொண்டு போயி எந்த பேங்கு ஏடி எம் மை திறந்தாலும் கதவு தானாய் திறந்திடும், அப்படி ஒரு ப்ரோகிறாம் இருக்கு அதுல, அப்படின்னு ஒரு புளுக்கு மூட்டை உட்டேன். பயலும் ஒரு இரண்டு முறை பேங்க் ஆப் அமெரிக்கா கதவுல போய் தேச்சி தேச்சி பார்த்துட்டு வந்தான்.
அந்த மாதிரியெல்லாம் இல்லன்னு தெரிஞ்சவுடனே என் மேல வந்து விழுந்து என் மலப் பாம்பு மாதிரி நசுக்க பாத்தான் இல்ல.


இப்படி அள்ளி விடரது வாடிக்கையா இருந்தாலும், டிக்கட் கொடுக்கறதுக்காக பக்க்துல போலீசு வரும்போது காரை விட்டு கீழ இறங்க கூடாது அப்படின்னு எல்லாரும் சொல்லி வச்சுருந்தானுங்க. அப்படியே கை ரெண்டுத்தையும் போலிசு மாமா கண்ணுல படற மாதிரி வைக்கனும் ந்னும் சொல்லி இருந்தானுங்க. இதுல எதுவும் ரீல் கிடையாது எல்லாம் உண்மைதான். டிக்கட் குடுக்குற மாமா தன்னோட இடுப்பு துப்பாக்கி மேல கைய வச்சுகுட்டுதான் பக்கத்துல வருவார் அமெரிக்காவுல.
 எங்கே விட்டேன். ஆ.. நியூ ஜெர்சிக்கு கழுத வேலை பாக்க போயிட்டு இருந்தோமா, ஏற்கனவே கிளம்புனது லேட்டு.
மணி 12 ஆயிருக்கும். நியூ ஜெர்சி டர்ன்பைக்க ஒரே ஜம்புல தாண்டிடல்லமுன்னு நினைச்சு, அழுத்து அழுத்துன்னு அழுத்துனன்.
ரோட்டில நானும் கொஞ்சம்  ஈ , 2 காக்கா மட்டும்தான்.  வண்டி வேற நல்ல வி8 வண்டி. போர்டு எக்ஸ்ப்ளோரெர்.
நல்லா ஜம்முன்னு போதுன்னு என் நண்பன்கிட்ட சொல்லிகிட்டு இருக்கும்போதே பின்னாடிலேர்ந்து எவனோ பாட்டு பாடறாமதிரி சத்தம்.
இந்த அர்த்த ராத்த்ரில பாடனும்னா ஒரு வேளை பேயோன்னு கூட தோனுச்சு. என்ன இருந்தாலும் அந்த பேயிக்கு அந்த அளவுக்கு குரல் சரியில்லைன்னு நினைச்சுகிட்டு இரும்போதே பேய் இங்கீலிசுல பேசுச்சு. என்னாடா இது , அமெரிக்க பேய் இங்கிலீசுலதான் பாடும் போல இருக்குன்னு பார்த்தா அப்படியே ஒரு வெளிச்சம். வண்டி ஓரகட்டிறியா இல்ல உன்ன நான் ஏறகட்டட்டுமான்னு ஒரு கொஸ்டின்.
சரின்னு மெதுவா ஓரங்கட்டினேன். இன்னிக்கு எவன் வயித்தெரிச்சல கொட்டுனனோன்னு என்னகு சட்டுன்னு ஞாபகத்துக்கு வரல அப்ப.
என் நண்பன் கிட்ட சொன்னேன் , கை ரெண்டுத்தையும் நல்லா போலிசு மாமா கண்ணுக்கு தெரியிறாமாதிரி வை, இல்லன்னா சுட்டுபுடுவான்னு சொன்னேன். என் நண்பனும் கை இரண்டுத்தையும் எதோ தண்டா எடுக்க சொன்னா மாதிரி தோளுக்கு மேல நீட்டிக்கிட்டு வயித்துல லேச 50 கிராம் புளிய கரைச்சாப்புல உட்கார்ந்துக்குட்டு இருந்தான். போலிசு மாமா வந்த வுடனே ஒரு ரேஞ்சா கைய தூக்கிகிட்டு இருந்த என் நண்பன பாத்து, கை வலிக்க போவுது ராசா , பராவாயில்லை கைய கீழே போடு அப்படின்னாரே பாக்காலாம்.
மொச புடிக்கிற நாய்கள மூஞ்சிய பாத்தா தெரியுமுடா எங்களுக்குன்னு சொன்னா மாதிரி இருந்துச்சு.
     உனக்கு 2 டிக்கட் தரணும் அப்படின்னார். ஏன்னு கேட்டேன்,
 ஒன்னு ரெக்லெஸ் ட்ரைவிங்(அஜாக்கிரதையான ஓட்டம்). இன்னொன்னு ஸ்பீடிங்(வேக கட்டுப்பாட்டை மீறிய வேகம், 92).
மாமா மாமா அதுதானே இதுன்னு சொல்லியிருப்பேன். அன்னிக்கு அவ்வளவு தெரியம் இல்ல எனக்கு. முதல் டிக்கட் பாருங்க.
தேங்க் யூ சர் என்றேன்.  என்ன கார்த்தி அந்தா ஆளு 290 டாலருக்கு அபராதம்னு சொல்றான் , நீங்க நன்றின்னு சொல்றீங்கன்னு கேட்டான் என் நண்பன். என்னடா , சுட மாட்டான்னு தைரியம் வந்தவுடனே நீ பேசுவதானே என்றேன்.
" நாளைக்கு ஒரு இந்தியனுக்கு  டிக்கட் குடுக்க போனான்னா நம்ம எல்லாம் நல்ல பிரஜைகள்னு அவன் நினைக்கனும்டா அப்படின்னேன்."  வேற எந்த காரணமும் எனக்கு அப்ப புத்தில வரல.


Posted at 10:10 pm by karthikramas
Comments (9)  

Monday, April 19, 2004
BMG Customer Suport Phone Number

BMG Music service does not list theri contact phne number anywhere in the mails that they send to you.
It is a legal cheat... and a RIPOFF


BMG Customer Suport Phone Number:
BMG MUSIC
Address:
PO BOX 91511
INDIANAPOLIS Indiana 46291
U.S.A.
Phone Number:
317-692-9200
Fax:


Cd retun Address :

 PO BOX NO: 19004
Greenville, South Carolina
zip 29698 9004

Posted at 01:32 pm by karthikramas
Comments (2)  

Friday, April 16, 2004
கண்டேன் பெர்ராரியை...

கண்டேன் பெர்ராரியை...
   புத்திமான் பலமான் ஆவான் என்பதை ஒரு எளியவழியில் மீண்டும் கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது. என் அலுவலகத்தில் வேலை செய்யும் மார்க்கெட்டிங் அல்லது வணிக மேலாளருக்கு
ஒரு 55 முதல் 60 வயது இருக்கும். அவறை இதுவரை நான் குறிப்பிட்டுரிந்தால் வணிகன் அல்லது
வெள்ளை வணிகன் என்றுதான் குறிப்பிட்டிருப்பேன். ஆனால் மனிதன் இப்படி என்னை மேலாளர் அவர்களே என்று குறிப்பிட வைத்துவிட்டார்.  எல்லாம் இந்த இரண்டு நாட்களாய் தான்.

   நான் சமீபத்தில் ஒரு கார் வாங்கியிருந்தேன். அதில் கொஞ்சம் தேசி புத்தியை விடுத்து கோண்டா டயோட்டா போன்ற காரை வாங்குவதில்லை என்று ஒத்தை காலில் நின்றுகொண்டிருந்தேன். சுமாராய் 4 வருடங்களாய் இப்படி ஒற்றை காலில் நின்று நின்று இரண்டு கால்களில் ஒன்று குட்டையாய் ஆனதுதான் மிச்சம்.
சரி 4 வருஷமாய் கார் இல்லாமல் அமெரிக்காவில் கார் இல்லாமலிருப்பது, இந்தியாவில் 4 வருஷத்துக்கு துணி இல்லாமல் அலைவது போல்தான் என்று சொன்னால் மிகையாகாது. ஆபாசமாக எழுதக்கூடாதே என்று நினைத்ததால் , 4 வருஷத்துக்கு சைக்கிளில்லாமல் கஷ்டப்படும் நிலையில்தான் இருந்தேன்னு எழுதிக்கறன்.
   ஆனால் எப்படியோ என் நண்பரிகளின் புண்ணியத்தில் இரண்டு டயோட்டாக்களின் சாவிகளும், ஒரு நிஸ்ஸான் அல்டிமாவின் சாவியும், கொஞ்சம் அவன்களின் திட்டோடு என்னிடம் வந்து சேர்ந்தது. எனவே இந்த மூன்று கார்களையும் ஓட்டியது போக மிச்ச நேரத்தில் ஒற்றை காலில் நிற்பதை வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தேன்.
  நான் கார் வாங்கியதும் , என்னடா! இனிமே எங்க காரெல்லாம் ஒட்ட மாட்டியே?  சாவியெல்லாம் துக்கி போட்டுவிடுவாயா என்று கேட்டான்கள்.
  அதுக்கு நான், "என் கார் சாவி காசு குடுத்து வாஙங்கியது, இந்த பழைய மூன்று சாவிகளும் அன்பால வாங்கியது, எதுக்கு மதிப்பு அதிகம்"னு கேட்டு எல்லார் கண்லயும் தண்ணீர் வரவச்சேன்.
  இருந்தாலும் இந்த சனியனால நம்ம காருக்கு இனி தொந்தரவு இல்லை என்றுதான் அவன்கள் நினைத்திருப்பான்கள்.
 
   இப்படி என் ஒற்றை கால் விரதத்தை முடித்து விட்டு, லேசாக நொண்டிக்கொண்டே ஒண்றரை கால்களில் சென்று வாங்கிய காருக்கு 2 கதவுகள் தான்.
  இந்த கார் வாங்கும் இடத்துல நடந்தத பத்தின கூத்துக்கு இன்னொரு பதிவு தேவைப்படும். கொஞ்ச நாளா ஒரு கதவு வேற சரியா வேலை செய்யல. எனவே நண்பர்கள் "ஒன் டோர் கார்த்திக்" என்றே கூப்பிட ஆரம்பித்தார்கள்.   இது ஒருபுறமிருக்க, அமெரிக்க கார்களுக்கும் , இந்திய கார்களுக்கும் கல்யாணம் பண்ணி வச்சா , கல்யாண மண்டபத்த விட்டு நேரா விவாகரத்து ஆபிஸ¤க்கு தான் போயி நிக்கும்.  அப்படி ஒரு 16 க்கு 0 பொருத்தம் தான். இந்தியாவுல 4 டோர் காருக்கு தான் மவுசு ஜாஸ்தி, இங்க 2 டோர் காருக்குதான் மவுசு, கீபோர்டு எல்லமே ஜாஸ்தி. இந்தியாவுல பெரிய காருக்கு தான் விலை அதிகம். இங்க அமெரிக்காவுல  நண்டு மாதிரி மூஞ்சி இருக்குற இல்லன்னா வாத்து மாதிரி  சப்ப மூக்கு இருக்குற காருக்குதான் விலை அதிகம். சைஸ் ஒரு குப்பதொட்டை அளவ விட கொஞ்சம் பெருசுதான். அந்த காரை வாங்கி இரண்டு கத்திரிக்கா அத்கமா வாங்கி டிக்கில வச்சு எடுத்துக்குட்டு கூட வரமுடியாது, அத்தன சின்ன டிக்கி..அமெரிக்காவுல டிக்கி சொன்னா சிரிப்பானுங்க, பூட்டு இல்லன்னா ட்ரங்கு இப்படிதான் சொல்லுவாங்க. டிக்கி அப்படீகிறது ஆபாச சொற்கள் வரிசையில வரும். ஆனா நிறைய வெள்ளைக்காரணுங்க மட்டும் டிக் டிக் க்குன்னு பேர் வச்சிப்பானுங்க , நாசமா போனவனுக.
சரி நண்ட பத்தி,எல்லாமே எத்தனை Hகார்ஸ்பவரு (குதிரை ஓட்ட சக்தி) இருக்கு வண்டில அப்படீங்கறதுலதான் பிரச்சினையே. பாக்க நண்டு மாதிரி இருந்தாலும் , இந்த நண்டுங்க ரோட்டுல பண்ர அளும்பு இருக்கே, பாக்க முடியாதுங்கறேன். ஆமாம்!! உண்மையிலே பாக்க முடியாதுதான். ஏன்னா பாக்கறதுக்குள்லெ நண்டு நம்ம கண்ண விட்டு வேகமா போயிடும்.

அந்த மாதிரி சப்ப மூக்கு பெர்ராரி ஒன்ன, 1999 ல ஒரு முறை பாத்திருக்கேன். ஒரு யூ எப் ஓ (விவரந்தெரியாத பறக்கும் பொருள்??) மதிரி வேகமாய் போச்சு. இன்னும் முயற்சி பண்ணி பார்த்த்ருந்தேன்னா , நேரா கழுத்தௌ சுளுக்கு ஆஸ்பத்திரிதான் போயிருக்கனும் நான்.தரையோட தரையா பாம்பு மாதிரி போச்சு. மத்த போறவர்ர காருங்களல்லாம் ஒரு காராவே மதிக்கல. நானும் அவன மதிக்கல ஹி ஹி.

  சரி சரி, ரூட்ட மிஸ்பண்ணிட்டு வேற எங்கேயோ போயிட்டேன்.
 
  2 கதவு கார் வாங்கினேனா? அதுல போகும் போதெல்லாம், எல்லா வெள்ளகாரிங்களும் என்னையே பாப்பளுங்க. இல்லன்னா அப்படிதான் என் கண்ணுக்கு தெரியும்.  குறிப்பா கல்யாணம் ஆகாத வெள்ளகாரிங்கதான் ரொம்ப முறைப்பாளுக. இல்லன்னா எனக்குதான், அவங்களெல்லாம் கல்யாணம் ஆகாதவங்க மாதிரி தோனும். எப்படியோ என்ன  நிறைய பேர் பாக்கறாங்களேன்னு
என் சட்டை காலர் கூட தானாவே மேல நிக்கும்னா பாத்துக்கோங்களேன்.

இப்படி நான் 2 மைனஸ் 1 டோர் காரை எடுத்துக்குட்டு என்மேலாளர் காருக்கு பக்கத்தில வந்து நிறுத்தறதுல ஒரு குஷிதான் எனக்கு.
அந்த ஆளு காரு இருக்கே, அதை வார்த்தையில வர்ணிக்க முடியாதுங்க. அப்படி கொஞ்சம் தகரம்,4 சக்கரம், கொஞசம் பெற்றோல் எல்லாத்தையும் சேர்த்த ஒரு குவியலுங்க அது. ஆங்கிலத்துல ஜன்க்குன்னு சொல்வாங்க.இருந்தாலும் , மனிதன் என்ன காரு ஓட்டறானோ அத வச்சு அவன எடை போட கூடாது. அவன எட போடனும்னா ஒரு வெயிங் மிஷினுதான் வேணும், அப்படீங்கற உயர்ந்த தத்துவத்த பாலோ பண்றவங்க நானு.

அதனால நான் என்னிக்குமே அவன்கிட்ட பெருசா பந்தா கட்டுனதே கிடையாதுங்க.

நேத்து அந்த பாவிப்பய , ஏதோ ஒரு சிவப்பு கலர்ல , என் கார்ல பாதி உயரத்துக்கு ஒரு கார்ல வந்தான்.
இந்த குப்பையை எங்கடா வாங்குனான் இந்த பரதேசின்னு நினைச்சுகிட்டேன். எனக்கு அது என்ன குப்பைன்னு கூட சரியா
தெரியலங்க.  சரி அவன் கிட்டயே கேக்கலாம்னு நினைச்சேன்.

"வாட் கைண்ட் ஆப் ஷிட் ஈஸ் இட் "ன்னு கேக்க நினைச்சு
வாட் கைண்ட் ஆப் கார் ஈஸ் இட் ன்னு கேட்டேன்.

அந்த நாசமாப்போனவன் என்ன சொன்னான் தெரியுமா?

ஹோ இட் இஸ் எ பெர்ராரி -ன்னு போட்டானே ஒரு போடு. அப்பதான் இரண்டடி தூரத்துல ஒரு பெர்ராரிய பாத்தேன்.
(எழவு அந்த சனியன நேரா பாத்து அந்த பேர படிச்சுருந்தன்னா கேட்டுருக்கவே மாட்டேன், எல்லாம் போராத நேரம் தான்)
அதுல உக்காந்தேன்னா, என்னோட இரண்டு பெரிய(??) , பின் தொடைக்கி மேல  முதுகுக்கு கீழ இருக்குறது மோட்சம் பெற்று விடும்னு ஒரு பட்சி சொல்லிகிட்டே பறந்து கிழக்கு பக்கமா போச்சு.

கூடவே சில விஷயன்களையும், என் மரியாதைக்குரிய வணிக மேலாளர் "அவர்கள்" சொன்னார்கள்.
மைலேஜு ரொம்ப நல்லா குடுக்குதாம். ஒரு கேலனுக்கு 12 மைலாம்.  நெவேடாவில் 90 மைல் ரோட்டுல
200 மைல் ஸ்பீடு வரைக்கும் ஓட்ட முடியுமாம். பிரச்சினை இல்லாம ஓடுமாம்.

இதெல்லாம் பெர்ராரி வச்சிருக்குற  நீங்கள் யாராவது சொல்லபடாதா எனக்கு??

அதன் மாடல கூட சொன்னான். எதோ ஒரு "எம்"ல்ல ஆரம்பிச்சுது.னமக்குதான் அந்த எளவெல்லாம் தெரியாதே.
ஆனா அதுல பெரிய ஆர்வமும் இருந்ததில்ல (அட படுபாவி பொய் சொன்னே வாய்ல புழு வரும்..)
  
கடகடன்னு மனசுல , ஒரே லெசன்ஸ¤ ஓடுச்சு.

1.புத்திமான் பலவான் ஆவான்(பெர்ராரி வாங்கமுடியாத நீ இப்படிதாண்டா சொல்லிட்டு திரியுனும்- மனசாச்சி)
2.ஒர்த்தன் எந்த காரு ஒட்டுறானோ அத வச்சு அவன எட போடக்கூடாது ( ஏண்டா இப்ப சொல்ளுவியே நீ - மனசாச்சி)
3.எளிமைதான் சிறந்த நண்பன்... (தோடா கதையளக்குறான் பாரு - மனசாச்சி)
4.ஆயில் சேஞ்சுக்கு 60 டாலர் குடுக்குறது மகா பெரிய தப்புதான்... நீ கல்லுரி விட்டு வந்ததும் உன் மாச சம்பளமே அதவிட கம்மி..

ஏ மனசாட்சீ - நிறுத்தமாட்டியா நீ.......


Posted at 08:23 pm by karthikramas
Comments (5)  

வெச்சா குடுமி அடிச்சா மொட்டை...


வெச்சா குடுமி அடிச்சா மொட்டை...

என்னடா எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கேன்னு யோசிக்கிறீங்களா, ஆமா ஆமா அதேதான்
நம்ம ஊருல கழுத்தறுக்கறதுக்குன்னே எவனாவது அடம்  புடிச்சா அப்ப சொல்வாங்களே அதே பழமொழிதான்.ஆனா பாருங்க இங்க கழுத்தறுக்கறது ஆளு இல்ல , மிஷினு. அது கழுத்தறுகறது கெட்டதுக்கு இல்ல நல்லதுக்கு. என்னது கழுத்தறுக்குறது நல்லதுக்கான்னு கேக்குறீங்களா? கொஞ்சம் இப்பிடி உக்கார்ந்து ஆசுவாசமா கேளுங்க.

சரி முதல்ல அது எந்த மிஷினு?

கம்ப்யூட்டர்தாஙக அந்த மிஷினு. அதுக்கு நம்ம கன்னித்தமிழில்ல "கணினி "ன்னு பேரு.

சரி இப்ப விஷயத்துக்கு வருவோம். அது என்ன வெச்சா குடுமி அடிச்சா மொட்டை?
அதுக்கும் கணினிக்கும் என்ன சம்பந்தம்?

என்ன அப்படி சுளுவா சொல்லிட்டீங்க. அதுதான அதோட தாரக மந்திரமே!!
அதாவது, செய்தால் சரியாத்தான் செய்வேன் இல்லன்னா முழுசா தப்பாத்தான் செய்வேன்னு
அடம் புடிக்கும்.  அதுகிட்ட இந்த, துண்ட கைக்கு மேல போட்டு விரல புடிச்சி பேரம் பேசர சமாச்சாரமே கிடையாது.

சரி மேல சொல்லுங்க கேக்கிறன்.

கணினின்னு சொன்னவுடனே எதோ கஷ்டமான விஷயம்னு னினைக்காதீங்க. அது ரொம்ப சாதரணமான விஷயந்தாங்க. நீங்க கணினி கத்துக்கறதுக்கு முன்னாடி கத்துக்க வேண்டியது இதுதான்.
 
சரிங்க ஒத்துக்கறன், கணினி சாதாரண விஷயம்தான்.
கணினி சாதாரண விஷயம்தான்.
கணினி சாதாரண விஷயம்தான்.
கணினி சாதாரண விஷயம்தான்.

அப்படியே இன்னொரு விஷயமும் கவனத்துல வச்சிக்குங்க. சிறு துளி பெரு வெள்ளம்.

புரியலையே?

அதாவது, சின்ன சின்னதா , கொஞ்ச கொஞ்சமா ஆனா சரியா சொன்னாதான் கணினி கேக்கும்.
மொத்தமா சொன்னா கோச்சிக்கும், ஆமா சொல்லிபுட்டேன்.

ஓ.. குழந்த புள்ள மாதிரின்னு சொல்றீங்க.  சரி சரி!!

கணினி எப்படி இருக்குமுங்க?

அட நம்ம டீவீ பொட்டி மாதிரிதாங்க இருக்கும்.
ஆனா கொஞ்சம் சின்னதா இருக்கும். பக்கத்துல ஒரு டப்பா இருக்கும். அதுலதான் கணினியோட மூளை இருக்கும். கூடவே ஒரு தட்டச்சு பலகை ஒன்னும் இருக்கும்.
அதுலதான் நம்ம கணினிய என்ன செய்ய சொல்றமோ அதை தட்டச்சி சொல்லனும்.
உதாரணமா  நம்ம குழந்த புள்ளைங்கள பின்மண்டையில தட்டறதில்லையா அதுமாதிரிதான்.

சரீ, கணினி எதுக்கு வேணும்?

என்னங்க இப்படி கேட்டுடீங்க? எதுக்கு வேணும்னாலும் கணினிய உபயோகபடுத்தலாமுங்க.
அமெரிக்காக்காரன், ராக்கெட்டு உடறதுக்கே கண்ணியதாங்க  பயன்படுத்தறான், நீங்க என்ன
இப்படி சொல்லிட்டீங்க?

அமெரிக்காகாரன் எது வேணுன்னுனாலும் செய்யட்டும்.
நான் என்ன பண்றது கணினிய வெச்சுக்கிட்டு?

நீங்க ரொம்ப அவசரபடறீங்க, முதல்ல இந்த படத்த பார்த்து நல்ல ஞாபகம் வெச்சுக்குங்க.
அதுக்கப்பறம், கணினிய எப்படி இயக்குறதுன்னு உங்களுக்கு சொல்லிட்டு,
அதுக்கூம் அப்பறம், அத வெச்சு என்ன பண்ணலாம் நீங்கன்னு சொல்றன்...

பேசி பேசி வாய் வரண்டு போச்சு ஒரு மோருத்தண்ணி கிடையாதா?? 

(அப்பவே யோசிச்சேன் நீ மோரு கேப்பன்னு ...)...


Posted at 07:25 pm by karthikramas
Comments (4)  

Next Page