Entry: ராணுவ அத்துமீறல்கள் -?? Friday, May 07, 2004
   5 comments

karthikramas
May 19, 2004   12:23 AM PDT
 
தங்கமணி,
இந்த சுட்டி கொடுத்தற்கு நன்றி. என் வீட்டருகில்,பிரேமதசா கொடும் பாவி எரித்தார்கள்.
1983 என்று நினைக்கிறேன். வருடம் சரியாக நினைவில்லை. அப்பொழுது எனக்கு சரியாய் விளங்கவுமில்லை. ஆனால் மிகவும் வேண்டாத ஒன்று இலங்கையில் நடப்பதாய் மட்டும் புரிந்தது.
இந்த கொடுமைகளை இன்று நினைவு கூர்ந்தாலும் பயமும் அருவருப்புமே மிஞ்சுகிறது.
நண்பர் பிகேஎஸ், இதையெல்லாம் நினைவு கூர்வார் என நம்புகிறேன்.
Thangamani
May 18, 2004   01:02 AM PDT
 
நானும் கொஞ்ச நாளாய் இங்கு வரமுடியவில்லை. இன்றுதான் வந்தேன். உங்கள் கேள்விகளை இரண்டு பதிவிலும் (எஸ்போ, பிகேஸ்) ரசித்தேன். இரண்டும் அதிலிருக்கும் போலித்தனங்களை மட்டும் கேள்விக்குள்ளாக்கி இருப்பது இதில் குறிப்பிடத்தக்கது. எஸ்போவை எனக்குப் பிடிக்கும். அவர் இப்படிச் சொல்லவ்து குறித்து இன்னும் நான் படிக்கவேண்டும். அப்புறம் அரசபயங்கரவாதங்கள் அதிகரித்துப்போன நாட்களில் நாமிருக்கிறோம். கிருஸ்துவம் 10 நூற்றாண்டுக்கு முன் மத்ததின் பெயரால் நடத்திய அட்டூழியங்களை, அராஜகங்களை விட இன்னும் மோசமாக, ஜனநாயகம், இறையாண்மை, அரசியல் சட்டம் (இதெற்கெல்லம் இவர்களே எவ்வளவு மரியாதை செய்கிறார்கள் என்பது நாமறிந்தது தானே) இவற்றின் பெயரால் இப்போது அரசுகள் செய்கின்றன. கடவுள், மதம் போல இபோது ஜனநாயகம் கேள்விக்கு அப்பால் உள்ள நம்பிக்கையாக பரப்பப்படுகிறது. ஈழப்படுகொலைகளை பற்றி (அமைதிப்படையின்) முதலில் செய்திகளே வரவில்லை, அநத அளவுக்கு நமது நேர்மையும், ஜனநாயகச் சிறப்பும் இருக்கிறது. தடாவில் கைது செய்து கொடுமைக்குள்ளான அப்பாவிகள் 90%க்கும் மேல். பொடாவிலும் அப்படியே, அமெரிக்க சிறைகளீல் வாடும் எண்ணற்ற கருப்பர்கள் குற்றமற்றவர்கள் என்பது தனிக்கதை, கடவுளின் பேரால் ஏமாற்றுவதும், கொல்வதும் இன்னும் மோசமானது, ஏனெனில் மக்கள் அதன் மேல் நம்பிக்கையிழக்கச் செய்யும். இந்த சுட்டி tip of the iceberg: http://www.tamilcanadian.com/eelam/hrights/index.php?FULL=1000029

உங்கள் பதிவுக்கு நன்றி.
Karthikramas@yahoo.com
May 10, 2004   09:47 PM PDT
 
அண்ணாச்சி,
மின்னஞ்சலை என்ன நத்தையிடம் கொடுத்து அனுப்பியுள்ளீர்களா? இன்னும் வந்து சேரலையே :-)
-/ramanitharan, k.
May 9, 2004   01:25 PM PDT
 
கார்த்திக், இரண்டு நாட்களாக இந்தப்பக்கம் வரமுடியவில்லை. உங்கள் மின்னஞ்சலுக்கு எழுதுகிறேன்
-/ramanitharan, k.
May 9, 2004   01:24 PM PDT
 
கார்த்திக், இரண்டு நாட்களாக இந்தப்பக்கம் வரமுடியவில்லை. உங்கள் மின்னஞ்சலுக்கு எழுதுகிறேன்

Leave a Comment:

Name


Homepage (optional)


Comments